692 record(s) found
விக்கி, கல்யாணி இருவரும் இணைபிரியா காதலர்கள். ஆனால், விக்கியின் வேலை மற்றும் குறைவான சம்பளத்தின் காரணமாக இருவரும் பிரியும் நிலை வந்துவிட்டது எதனால்?கல்யாணியை மணந்து கொள்வதற்கு முன் வரும் நபர் யார்? கல்யாணிக்கும் அந்த நபருக்கும் திருமணம் நடந்ததா? விக்கி மற்றும் கல்யாணியின் காதல் கரை சேர்ந்ததா? நடந்ததை தெரிந்து கொள்ள வாசிப்போம் வாருங்கள்...
வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்தால்? அவளால் அதை ஏற்க முடியுமா? நாயகனை தன் கைக்குள் வைக்க நினைக்கும் அவனது தாய், இந்த கூட்டுக் கிளியை மருமகளாக தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? பேசவே தயங்கும் நாயகி, நாயகனின் நியாயமான ஆசையை உணராமல் அவனை விட்டு பிரிய, மீண்டும் அவர்கள் இணைந்தார்களா? நாயகனின் தாய் இந்த திருமணத்துக்கு சம்மதிப்பாரா? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
எங்கோ பிறந்த இரு மலர்கள் ஓர் இரவு இரயில் பயணத்தில் நட்புறவு கொண்டு வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தார்கள். இருவரின் காதல் இருவரும் அறிந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவர்களின் காதலை அவரவர் வீட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம். அவளது குடும்பத்தில் அவன் வேண்டாதவனாக ஆகிவிடுவானோ? இருவரின் காதலும் கைகூடுமா? அவர்களின் வாழ்க்கை நிலைக்குமா? வாசித்து பாருங்கள் கதையின் சுவாரசியத்தை...
தமிழ்நாட்டு வாசகர்களை தமது எழுத்துக்களால் போதைகொள்ளச் செய்தவர் ஜெயகாந்தன். அவர் எழுத்துக்களில் கிறங்கி மயங்காதவர்கள் உண்டா என்ன வாழ்க்கையைச் சமமான நோக்குடன் ஒரே மாதிரி காணவும், கருத்து ஒருமிக்கவும் அந்தக் கருத்துக்களுக்காக வாழவும் தன்னையும் அர்ப்பணித்துக்கொள்கிற இன்னொரு ஆத்மாவின் துணை வேண்டும். அந்தத் துணைதான் முதல் வாசகர். இறுதி வாசகரும்கூட என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
புதிதாக வாங்கிய வீட்டிற்கு ஹரிஷ் தன் பெற்றோருடன் தாத்தாவோடு குடிபுகுகின்றான். அங்கே அமானுஷ்யம் இருப்பதாக அவனுக்குள் தோன்ற, ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் இருப்பது இன்விசிபிள் பெண் யாஷிதா என்று தெரியவருகிறது. அந்த பெண் உருவம் இல்லாமல் எப்படி மாயமாய் அவ்விடம் இருக்கின்றால்? எதனால் அப்படி ஓரு நிலை? பழைய நிலைக்கு மாறுவாளா? என்று நகைச்சுவை கலந்த பேண்டஸி முறையில் கதையை அறிவோம்.
சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த வினாடி நடந்தது என்ன? தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட ஒரு மணி நேரத்திலேயே வாழாவெட்டியாக, சாருலதா தன் பிறந்தகம் சென்ற காரணம் என்ன? பாண்டியனையும் சாருவையும் நிரந்தரமாய் பிரிப்பதற்கு சதி செய்தவர்கள் யார், யார்? யாருக்கு யார் நிழலாய் நின்று இவர்களைச் சேர்த்து வைத்தார்கள்? நிழலாய் நின்ற காதலின் நிஜத்தை தெரிந்து கொள்ள வாசிப்போம்...
எனக்கு இப்படி ஒரு கருவை வைத்து கதை எழுத தோன்றிய காரணம் சமூகத்தில் பல பெண்கள் இப்படி ஒரு பிரச்சனையில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலவிதமான கேலிக்கும், கிண்டலுக்கும் அவர்கள் ஆளாகும்போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கேட்டறிந்து கொண்ட நான் இந்தக் கதையை எழுத முன்வந்துள்ளேன். என்னங்க அப்படிப்பட்ட முக்கியமான கரு யோசிக்கறீங்களா...? அதைச் சொல்லாமல் விடுவேனா என்ன...? இரட்டை நாடி (குண்டாக) இருக்கும் பெண்கள் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதையும் பற்றிதான் இந்த கதையில் கொடுக்க வந்துள்ளேன். வாங்க கதைக்குள் பயணிக்கலாம்...
மாதவன், சாருகாசினி இருவரும் காதலித்து அவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சில நாட்களுக்குப் பின்னர் சாருவின் தோழியான மகேஸ்வரியின் திருமணத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு சாருவின் நிலைமை என்ன நிகழ்ந்து? அதனால் சாருகாசினி, மாதவன் இருவரின் வாழ்க்கையில் இறுதியில் நிகழ்ந்தது என்ன? என்பதையும் காண வாருங்கள் வாசிப்போம்...!.
முற்றும் முடிய இது ஒரு காதல் கதை. கதையின் நாயகன் ஜகதீஷ் நாயகி மான்யதா. சிறுவயதில் இருவருக்குமிடையே நடந்த சம்பவம் மான்யதாவின் ஆழ் மனதில் அவன் மீது வெறுப்பாக நின்று விடுகிறது. மான்யதாவை இந்த கிராமத்தின் பக்கம் ஐந்து வருடங்கள் வர விடாமல் செய்து விடுகிறது. இப்போது சேனபதியின் மகள் காவ்யாவின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறாள் மான்யதா. அங்கே ஜெகதீஷ் இருக்கிறான். இருவருக்குமான உறவும் உரிமையும் ஊடலும் காதலும்... என்று சுவாரஸ்யத்துடன் போகிறது இந்த கதை.
சமூகத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமாகக் கொட்டிக் கிடக்கிறது. அந்த அறிவுதான் மிகச் சிறந்ததெனப் போற்றப் படுகிறது. முடிவுறாச் சமுத்திரத்திலிருந்து ஒரு துளி அளவேனும் ஒவ்வொருவரும் கண்டடைய வேண்டும் என்பதே 'நிழலைத் தேடுபவன்' என்ற இச்சிறுகதைத் தொகுப்பின் நோக்கம். அச்சிறு துளி நண்பர்களை, உறவினர்களை, பக்கத்து வீட்டுக்காரரை, சாலையில் நடந்து செல்பவரை, எளிய மக்களை, விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவரைப் புரிந்து கொள்ள, வாழ்க்கையை எதிர்கொள்ள இச்சிறு நூல் உதவினால், அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது?!.
ஏழ்மை நிலையில் இருக்கும் பல குடும்ப பெண்களின் நிலை இன்று ராசாத்தி பாரதியை போல தான் செல்கிறது. ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல நயவஞ்சக ஓநாய்களோடு இன்று வரையிலும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தமான செய்தி தான். இந்த கதையில் வரும் ராசாத்தி பாரதியின் நிலையும் கூட இப்படி தான் இருக்கிறது. இந்த ஓநாய்களிடம் சிக்கிய இவர்களின் நிலை என்ன? வாழ்க்கை எனும் நெருப்பாற்றில் ஒவ்வொரு நாளும் நீந்திக் கொண்டு தத்தளிக்கும் பெண்களின் இந்த கேள்விக்கான விடைகள் இந்த கதையின் இறுதி அத்தியாயத்தில் கிடைத்து விடும் என்று நம்புகிறேன். கதையோடு பயணித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோக்களே.
திறமையால் அயராது உழைத்து சம்பாதித்த சொத்துக்களை, சூழ்ச்சியால் அபகரிக்க நினைக்கும் பொறாமை பிடித்தவர்கள் இச்சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை எப்படி வென்றார்கள் ஆனந்தி, சம்பத்? வாசிப்போமா இரட்டை துரோகம்!.
"அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை செய்ய மாட்டேன் என்று இவ்வளவு உறுதியா சொல்ற நீ... எதுக்காக என்னைக் காதலிச்சாய்? எதுக்கா இப்போ என் வாழ்க்கையோடு விளையாடுகிறாய்?" சத்யநந்தன் கேட்டதும், மதுவின் கண்கள் வலியைக் காட்டின. "தப்புதான்... அம்மாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நான் காதலிச்சது தப்புதான்! அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அனுபவிக்கிறேன்!" கண்களில் நீருடன் மது சொன்னதும், சத்யா வேதனையோடு கண்களை மூடினான்! தன்னைக் காதலித்தது தவறு என்று காதலி சொல்லும்போது, எந்த காதலனுக்குத்தான் வேதனை இராது? ஆனால்... தானே அவளது இந்த வார்த்தைகளுக்கு காரணம் என்ற குற்ற உணர்வோடு அவளை நோக்கியவன், "சாரி... மது... வெரி வெரி சாரி!" என்றான் ஆத்மார்த்தமாக! "இல்லை சத்யா... நீங்க சொன்னது தப்பில்லை! என் மேல்தான் எல்லா தப்பும்! அதுதான் உண்மை! ஆனால்... நீங்க என்ன சொன்னாலும் என் முடிவை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது! அதுவும் உண்மை!" என்றவள் கண்கள், 'இத்தோடு விட்டு விடேன்' என்று அவனிடம் கெஞ்சின. அவள் விழிகள் வேண்டியதைச் செய்து விட வேண்டும் போலத் தோன்றினாலும், இப்போது விட்டு விட்டால், அவளை இழப்பது நிச்சயம் என்று தெரிந்தும், அவனால் விட்டு விட முடியுமா என்ன? இப்போது அவன் சொல்லப் போகும் வார்த்தைகள் அவளைக் காயப் படுத்தும் என்று சத்யாவுக்குத் தெரிந்தது. ஆனால்... இப்போது இதைச் சொல்லா விட்டால், வாழ் நாள் முழுதும் இருவரும் வருந்த வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தவனாக, அவளிடம் திரும்பினான். "இங்கே பாரு மது! ஒன்று நீ அத்தையின் ஆசையை நிறைவேற்றனும்! இல்லை... உனக்கு சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைச்சுக்கணும்! இது ரெண்டையும் செய்யாமல் இருந்தால், அத்தைக்கு..." என்றவன் குரல் கமறியது. தொண்டையை செருமி சரி செய்து கொண்டவன், "அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால், அவங்க ஆன்மா கூட உன்னை மன்னிக்காது!" தனது வேண்டுதலுக்கு இணங்கி இத்தோடு இந்தப் பேச்சை விட்டு விடுவான் என்று எண்ணி இருந்த மது, சத்யாவின் வார்த்தைகளில் திகைத்து அவனை நோக்கினாள்! 'என்ன சொல்கிறான் இவன்?' அவளுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை! மதுவின் முகத்தில் தெரிந்த குழப்பம், அவளுக்கு தான் சொன்னது விளங்கவில்லை என்பதை உணர்த்த, சத்யா மீண்டும் பேசினான். "ஆமாம்... அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்... நீ சொன்ன மாதிரி அவங்க உங்க திருமணம் பற்றி பேசியதுதான் அவங்க கடைசி வார்த்தை...கடைசி ஆசையா இருக்கும்! அதை நிறைவேற்றுவது உன் கடமையும் கூட! அதனால், ஒன்று நீ மகேந்திரனை கல்யாணம் செய்து கொண்டு அவங்க ஆசையை நிறைவேற்றனும்! இல்லை என்றால், நீ மனசார விரும்பிய என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்... தன் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கூட, தன் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிறைவாவது அவங்களுக்கு மிஞ்சும்! அதுதான் நீ அவங்களுக்கு கொடுக்க போற உண்மையான சந்தோஷமா இருக்கும்! நீ எடுக்கப் போற முடிவில்தான் நம்ம நாலு பேருடைய சந்தோஷம்... இன்னும் சொல்ல போனால்... இன்னும் ரெண்டு குடும்பங்களுடைய சந்தோஷசம் அடங்கி இருக்கு என்பதை மனதில் வைத்து பதில் சொல்லு! இப்பவே சொல்லணும் என்று இல்லை! நல்லா யோசிச்சு சொல்லு! நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்!" 'அவளது சத்யாவா ? அவனா என்னை மகேந்திரனைத் திருமணம் செய்து கொள் என்று சொன்னான்? அவனால், எப்படி அவளிடம் இப்படி சொல்ல முடிந்தது?'
அழகான வீராப்பான பொண்ணு சீதா. மிகவும் சாதுவான பெற்றோருக்கு கீழ்படியும் பையன்தான் சூர்யா. இந்த எதிரும் புதிருமான ஜோடிகள் இணைந்தார்களா? திருமணம் நடைபெற்றதா? சூர்யாவின் நடத்தை சீதாவின் குணத்தை மாற்றியதா? இந்த மணம் பரப்பும் ஜூலை மலர்களை வாசிப்போம் வாருங்கள்.
கழுத்தில் மாலைவிழாமல் கையில் குழந்தையுடன் வாழும் பெண்ணுக்குத் திருமணம். ஏனிப்படி? என்ன நடந்தது? அந்த குழந்தையின் தந்தை யார்? அவளுடைய திருமணத்திற்கு பின்னான புதிய உறவுகள் அவளை ஏற்றுக் கொண்டதா? சிக்கலை உண்டாக்கியதா? அவள் நிலைமை என்ன? இதை காதலாய் திகட்டதிகட்டச் சொல்கிறது இந்தப் புதினம். தாம்பத்யத்தின் ரகசியத்தைக் கூறுகிறது இந்த நாவல். இந்த? "நிலவொன்று கண்டேன்"
'வந்தது யாரோ' இச்சிறுகதையில், மஞ்சு படிப்பில் கெட்டிக்காரியானவள். எதைச் சொன்னாலும் பொருட்படுத்தாது அஜாக்கிரதையாக இருப்பவள். தன் குறையை உணர்ந்து கொள்வதற்கு, அவளது பெற்றோர் எடுத்த முடிவு என்ன? என்பதையும், 'மஞ்சள் ரோஜா' இச்சிறுகதையில், வாடிநின்ற ரோஜாச் செடியை தன்னுடைய முழு ஈடுபாட்டோடு முயற்சித்து மீண்டும் உயிர் பிழைக்க வைத்தாளா அனிதா? அவளது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதையும் போன்ற இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!.
பரந்த அந்த வீட்டடி மனையைக் கையில் குழந்தையுடன் சுற்றிப் பார்த்த திவ்யா... அருகிலிருந்த மகளிர் கல்லூரியைக் கண்டதும் சுரேஷை முறைத்தாள்... "எதுக்குடி முறைக்கிற...? என்னைப் போல இல்லாம என் பையனாவது எடுத்த எடுப்பிலேயே கவிழ்ந்திராம... நின்னு... நிதானிச்சு... ஆயிரக் கணக்கான பொண்ணுகள சைட் அடிச்சு... அதில ஒருத்திய தேத்தட்டுமேன்னு தொலை நோக்கு பார்வையில தாண்டி லேடிஸ் காலேஜ் பக்கமா வீட்டடி மனைய வாங்கிப் போட்டிருக்கேன்... அது புரியாம இவ கத்தறா... பாருடா உன் அம்மாவ... இவ்வாறு திவ்யாவை பார்த்து சுரேஷ் செல்லாமாக சொல்ல, அப்படி இவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? வாசிப்போமா இவர்களின் காதல் கதையை...
பொறுப்பில்லா கணவனால் கைவிடப்பட்டவள் மஞ்சு. அவளுக்கு ஏற்பட்ட அவமானங்களைக் கடந்து ஒரு சிறந்த பெண்ணாக வலம் வருகிறாள். இதில் மணவாளன் என்பவன் யார்? மணவாளனுக்கு மஞ்சுவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம். மணிமாளவின் நினைத்தது யாரோ... நீதானே! என்னும் கதையில்...
கனவுகள் பூக்கும் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் சூர்யா, மிருணாளினியை கண்டான். கண்டவுடன் அவன் மனதில் காதல் பூத்துவிட்டது. அவளைத் தொடர்ந்து காதல் செய்து சொந்தமாக்கிக் கொண்டான். வருடந்தோறும் பிறக்கும் புத்தாண்டின் முதல் மழைத்துளியில் நம் வாழ்விலும் கனவுகள் பூக்கலாம்... காத்திருப்போம்...
தன் ஆபத்துக் காலங்களில் எல்லாம் உடன் இருக்கும் வசுதாவை மணமுடித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பி அவள் பெற்றோரிடம் பெண் கேட்கிறான். தர மறுக்கிறார் அவர். அவரை மீறி வசுவால் வெளியே வர முடியவில்லை. தன் முதலாளியின் ஒரே மகளும் வசுதாவின் உயிர் தோழியுமான மாயாவை சந்தர்ப்பவசத்தால் மணம் முடிக்கிறான். மீண்டும் வசு அவன் வாழ்வில் இடைப்படுகிறாள். அவளை திருமணம் செய்ய வலியுறுத்துகிறாள் மாயா. மது மாயாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் மாயாவை பிரிகிறானா? வசுவை மணக்கிறானா? இனி கதைக்குள் போவோமா!.
"நிழல் யுத்தம்" ஆகிய பதினைந்து கதைகளில் நுழைய இருக்கும் வாசகர்களை எதிர் கொள்வது வாழ்க்கையைத் தன் காலடியில் பணிய வைத்த மனிதர்களைப் பற்றியதல்ல. மாறாக வாழ்க்கையின் பாதங்களில் சுருண்டு கிடக்கும் ஆண்களையும் பெண்களையும் பற்றிய சம்பவங்களை, சரித்திரங்களை அடக்கியவை. தியாகம் செய்வதற்கோ, சமூக அங்கீகரிக்கும் மரபு சார்ந்த மதிப்புகளைப் பேணுவதற்கோ இடமோ காலமோ சாத்தியமோ இல்லாத ஒரு தலைமுறையின் நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்டாயத்தில் இருப்பவர்கள். அவர்களின் செயல்கள், உணர்ச்சிகள், மனநிலைகள் ஆகியவற்றைப் பொருளாதாரம் மட்டுமே தீர்மானிக்கும் தினங்களைச் சுமந்து கொண்டு வளைய வருகிறார்கள். எதிர்பார்க்கும் முடிவுகளை அடக்கியிராத என்றோ, எதிர்பாராத முடிவுகளை வெளிப்படுத்துபவை என்றோ ஏற்படுத்தப்படும் நிர்பந்தங்களை ஏற்காது முடிவு என்பதே அவசியம்தானா என்கின்ற கேள்விக் குறியை வாசகர் முன் இக்கதைகள் வைக்கின்றன.
நந்தினி தாய் தந்தையற்றவள். நந்தினி, பார்த்திபன் என்ற இளைஞனை காதலித்தாள். ரூபா நந்தினியின் உறவுக்காரப் பெண். அவள் நந்தினியின் காதலை பிரிக்க ஏன் நினைத்தாள்? பார்த்திபன் நந்தினி திருமணம் நடந்ததா? படித்து அறிவோம்...
திவ்யாவை பெண் பார்க்க வருகிறான் அபிஷேக். முதலில் வேண்டாம் என்பதும் பின் வேண்டும் என்பதும்... அதற்கான காரணங்களும்... என் ஒரு அழகான காதல்... காதல் மட்டுமே ஆன கதையும்... திவ்யாவின் தோழி பூர்ணா இன்றைய இளம் பெண்களுக்கே உரிய நாகரீகங்கள் என்னும் பெயரால் சீரழியும் வாழ்வை எப்படி சரி செய்து கொண்டாள்... என்று ஒரு புரட்சிகரமான போக்கையும் சில்வியா என்னும் திவ்யாவின் உடன் பணியாற்றும் தோழியின் கணவன் பாதை தவறி செல்லும்போது அவள் அந்த காலக்கட்டத்தைக் கையாண்ட அனுபவத்தையும் ஆரோக்கியம் என்னும் பெண்ணின் கல்லானாலும் கணவன் என்னும் வாழ்வியலும் அவனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது அவளின் மனிதாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக திவ்யாவின் அக்கா ரம்யாவின் திருமண வாழ்வின் குளறுபடிகள் அதை அவள் கணவன் சரி செய்த விதமும் இதன் ஊடாக ஷீலா என்னும் உறவினரின் உதவிகளும்... மற்றவற்றை கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.
வினோத் என்பவன் அண்ணியின் அரவணைப்பில் வாழ்பவன். சுனிதா தான் நினைத்தது நிறைவேற வேண்டும் என எண்ணுபவள், தன்னை மிஞ்சி எதுவும் இல்லை என்ற கருத்துடையவள். வினோத் சுனிதாவிற்கு திருமணம் நிச்சியக்கப்படுகிறது. இதில் கௌதம் என்பவன் உள்ளே வருகிறான். அந்த கௌதம் யார்? இதில் முள்ளாக இருந்தது யார்? மலராக இருந்தது யார்? வினோத், சுனிதா இருவரும் இணைந்தார்களா! வாங்க பார்ப்போம்.
பிரசன்னா, வாசவி இருவரும் பாசமிகுந்த உடன்பிறப்புகள். பிரசன்னாவிற்கு சுகந்தி என்கிற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. சுகந்தியின் அண்ணனான சந்தோஷும், வாசவியும் காதலித்தனர். ஒரு கட்டத்தில் சந்தோஷ், வாசவியின் மீது கோபம் கொண்டு அவளை பிரிகிறான். மனதில் நேசத்தை வைத்துக் கொண்டிருந்த வாசவியை சந்தோஷ் ஏற்றுக் கொண்டானா? அவளது நேசம் ஜெயித்ததா? காதலுடன் படித்து அறிவோம்...
கணவன் சந்திரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சீதா. அவன் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தும் அவளை அவன் வீட்டை விட்டு போ என்கிறான். அவன் தன் மறைந்த முதல் மனைவி மோகனா வை இன்னும் மறக்கவில்லை ...... அவளோடு தான் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க செல்கிறாள் சீதா. ஆனால் அவனுக்கு ஒரு கடந்த கால இருட்டு இருக்கு. அதை மறைக்க பாடுபடுகிறான். சீதா அவன் காதலுக்காக ஏங்க .....அவளுக்கு அவன் அன்பு கிடைத்ததா.....சீதாவை தொடருங்கள்.
நாயகன் விஷ்வா, நாயகி வர்ஷா இருவரும் புதுமண தம்பதகள். திருமணமான முதல் நாளில் இருந்தே விஷ்வா தனது மனைவியை நெருங்க முடியாமல் தவிக்கிறான். வர்ஷாவின் இதழ் பதிக்க தடைபோடும் விஷ்வாவின் வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வு தான் என்ன? சக்தி, கனிஷ்காவின் ஆழமான காதல், சுவாரஸ்யமான ஊடல், ரொமான்ஸ் ரசிக்க வைக்கும் க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் பல அதிரடி திருப்பங்கள், ரொமான்ஸ், மர்மங்கள் நிறைந்த வித்தியாசமான கதைக்களம்...
பம்பாய் விமான நிலையத்திலிருந்து வந்த 'ஏர்கிராஸ்' விமானம் சென்னைக்கு அருகில் வந்தபோது விபத்துக்குள்ளானதை அறிந்த ராம்குமார், அனைவரையும் ட்ரீட்மெண்ட்டிற்காக தன்னுடைய நர்ஸிங்ஹோமிற்கு அழைத்துச் செல்கிறான். தன்னிலை மறந்து இருக்கும் நித்யா யார்? எங்கிருந்து வந்தாள்? ராம்குமார் கண்டுபிடித்தானா? நித்யாவிற்கு நினைவு வந்ததா? இல்லையா? என்பதை 'இந்துமதி'யின் 'நினைவே இல்லையா நித்யா?' இக்கதையில் வாசிப்போம் வாருங்கள்...!.
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த கனகா, தம்பியை வளர்க்க மிகவும் சிரமப்பட்டாள். அப்பாவின் கம்பெனி பணம், அம்மாவின் சேமிப்பு பணம் என்று சமாளித்து வரும்போதுதான் வினோதினியை சந்திக்க நேரிட்டது. இவள் யார்? எதற்காக கனகாவை சந்தித்தாள்? இவளால் கனகாவிற்கு நேரிட்டது என்ன? என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்.
ஆத்மார்த்தமாகப் பழகும் இரண்டு தோழிகளுக்கு நடுவில் பொறாமை மற்றும் பேராசை எட்டிப் பார்க்கும்போது இருவரின் வாழ்க்கையும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இந்தக் கதையில் கூறியுள்ளேன். இரண்டு தலைமுறைகளில் தொடரும் போராட்டங்கள், கதாநாயகியின் வாழ்க்கையைச் சீரழிக்கப் போகிறதா இல்லை தப்பித்து விடுவாளா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தட்டெழுத்து நிறுவனத்தின் ஜாப் டைப்பிங் பகுதியில் வேலை பார்க்கும் பார்வதியும், சுதர்சன் அண்ட்கோ செல்வரத்தினத்தின் மகன் ரவிக்குமாறும் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பால் பார்வதியின் வாழ்க்கையில் ஒளி வீசியதா? அல்லது இருசூழ்ந்ததா? என்பதை, 'லட்சுமி'யின், 'இவளா என் மகள்' கதையில் காணலாம்...!.
ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...
கௌதம நீலாம்பரன் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சில எழுத்தாளர்களின் தித்திக்கும் சந்திப்புகளையும், சரித்திர நாவல்களையும், ஆயிரம் ஆசைக் கனவுகளையும் நெஞ்சில் தேக்கி, எழுதுகோலால் இதய நிலங்களில் உழுது கொண்டிருக்கும் ஒரு சாதாரண எழுத்தாளனின் வழிப்பயணத்தை காண வாருங்கள் வாசிப்போம்...!.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தன் காதல் மனைவி வைதேகியுடன் வசித்து வந்தார் தனஞ்ஜெயன். இவர் புகழ்பெற்ற கம்பெனி முதலாளி. அழகான மகன், அளவற்ற செல்வம் என்று நதிபோல் ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. எதிர்பாராதவிதமாக இந்த நதி பிரிந்துவிட்டது. பிரிவிற்கு யார் காரணம்? இந்த நதி மீண்டும் இணைந்ததா? இல்லையா? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...
நிலவின்றி வானம் இல்லை என்பதுபோல இந்த கதையின் நாயகி நிலா, வாணவராயனின் மேல் கொண்ட காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை சுவாரசியத்துடன் படித்து அறிவோம்...
நொடியும் நிமிடமும் திரும்புவதில்லை. கடந்தது கடந்ததுதான்! மனிதப் பிறவிக்கு இலவசமாகக் கிடைத்த அரிய பொக்கிசம் நேரம், நேரமே! அரிதான நேரத்தை நழுவ விடாமல், வந்த வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு முன்னேறுபவரே வாழ்க்கையில் வெற்றியாளர்! இவ்வாறான நேரத்தைத் தொழிற்சாலைகளிலும், தனிமனித வாழ்விலும் மிகத் திறமையாகப் பயன்படுத்திப் பலன் பெறுவதே மனிதனின் கடமையும், பொறுப்பும் ஆகும். எவ்வாறு நேரத்தை ஆளுமை செய்வது என்று கட்டுரைகளாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து எல்லோரும் நலம் பெறலாம்!வளம் பெறலாம்!.
தவறான புரிதல்களே வாழ்க்கையை கசப்பாக்கி விடுகிறது. மனம் விட்டுப் பேசுவதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுமே இல்லறத்தின் ஆனந்தத்திற்கு காரணம். நிலம், இயற்கை, குடும்பம் என்று அழகான வட்டத்திற்குள் வாழும் உதய பானு தன்னை விரும்பும் தயாளனை புரிந்து கொள்ளாமல், அவனோடு வாழப் பிடிக்காமல் வெறுப்பும் கசப்புமாய் வாழ்கிறாள். அவளை விரும்பி மணந்த தயாளன், அவளுக்குத் தன்னை புரிய வைக்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்விதான் அடைகிறான். அவன் மனதிற்குள் பதிந்த தேவதை அவள். அந்த தேவதையின் மகிழ்வான வாழ்வே அவன் லட்சியம். இதை ஒருநாள் உதய பானம் புரிந்து கொள்கிறாள். அவனின் ஆழ்ந்த அன்பையும் அவன் செய்த ஒவ்வொன்றும் தனக்கானது என்று புரிய வர அவளுக்குள் பொங்கி பெருகும் காதல் உணர்வில் தானும் நனைந்து, தயாளனையும் நனைக்கிறாள். நல்ல எண்ணங்கள் மனதிற்குள் இருந்தால், நாம் நினைத்த அனைத்துமே நிறைவேறும்.
கார்த்தி தனது கம்பெனியை அவனது உறவினரின் உதவியுடன் நடத்தி வருகிறான். சிறு வயதில் இருந்தே அவனுக்கு சௌந்தராஜனின் மீது மதிப்பு அதிகம். ஆனால் அவர் அதை பயன்படுத்தி அவனை தங்க கடத்தலில் மாட்டி விடுகிறார். இதற்கிடையில் இவர்களது காதலை பிடிக்காத அவனது காதலியின் குடும்பத்தினர் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர். இதனால் விரக்தி அடைந்தவன் அவளை தேடி வீட்டை விட்டு வெளியே செல்கிறான். கார்த்தி தனது காதலியை சந்தித்தானா? தங்க கடத்தல் வழக்கில் இருந்து மீண்டானா? என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பூத்திருக்கின்ற குறிஞ்சி மலராய் அண்ணன், அண்ணி உறவு புதுப்பொலிவுடன் பிரகாசிக்கப்போவதாய் எண்ணி மகிழ்ச்சியடைந்தாள் சாந்தி. மீண்டும் இணைந்த இந்த உறவு குறிஞ்சி மலராக பூத்ததா? இல்லை நெருஞ்சி முள்ளாக குத்தியதா? என்பதையும் இன்னும் சில சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!.
இந்த முதல் தொகுப்பில் இருக்கும் 15 கதைகளில் பெரும்பாலும் போட்டிகளில் வெற்றி பெற்றக் சிறுகதைகளே. இந்த நூலில் உள்ள அணிந்துரையிலும், வாழ்த்துரையிலும் சொல்லப்பட்டதைப் போல ஒவ்வொரு சிறுகதையும் ஒரு வாழ்க்கைச் சித்திரமாய் மிளிர்கிறது. வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் தனித்துவமான நடையுடன் எழுதப்பட்ட ஜூனியர் தேஜ் அவர்களின் சிறுகதைகளை வாசித்து மகிழ்வோமே!.
பெற்றோர்களின் விருப்பத்திற்காக அருணா, சந்திரசேகரனை மணந்து கொண்டாள். சந்திரசேகரனால் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்ன? அதன் பின், டிஸ்பென்சரி வைக்க வரும் ரவீந்திரனின் செயல் அவர்களின் வாழ்க்கையே எப்படி புரட்டிப் போட்டது? சந்திரசேகரன் எடுத்த முடிவு என்ன? என்பதை, 'இந்துமதி'யின் நினைவுகள் நெஞ்சோடு தான் கதையில் காணலாம்...!.
ஹரி, நிஷாந்தி இருவரும் காதலித்து வந்தனர். ஹரியின் அண்ணனும், அண்ணியும் பிரிய காரணம் என்ன? அவர்களை சேர்த்து வைக்க நிஷாந்தி என்ன செய்தாள்? ஹரிஹரன், நிஷாந்தியின் திருமணம் நடைபெற்றதா? என்பதை மஞ்சள் வெயில் மாலை நேரத்தில் படித்து அறிவோம்...
கணவனே பிரபல கார்ட்டியாலஜிஸ்ட் கணவரின் குடும்பத்திற்கு ஒரு நவீன மருத்துவமனையே சொந்தம். புகுந்தவீட்டில் தடுக்கி விழுந்தால் மருத்துவர்கள் அப்படியும் வானதிக்கு வந்த ப்ரச்னைதான் என்ன? அதிலிருந்து எப்படி மீள்கிறாள்? மனசெல்லாம் உனையெழுதி காத்திருக்கும் டாக்டர் எஸ்கேவைத் தொடருங்களேன்... "கேம்ஷோ" ஒரு பிரபல டி. வி சேனல் நடத்தும் ரியாலிட்டி கேம்ஷோவில் ஒரு பள்ளிமாணவி தன் கல்லூரிப்படிப்புக் கனவுக்காக கலந்து கொள்கிறாள். அந்தச் சிறுமியைச் சுற்றி நடக்கும் காதல் நாடகம் துரோகம் வாஞ்சையுடன் வஞ்சகமாய் காட்டப்படும் அப்பா பாசம் இவற்றில் மீண்டு இலக்கை அடைவாளா .?இனம்கண்டு மீள்வாளா? வீழ்வாளா? கனவு நனவாகுமா? இல்லை வாழ்வே அமுத விஷமாகுமா? கேம்ஷோவின் கதாநாயகி சன்விதாவை காக்க நாமும் உள்நுழைவோமா?.
இப்போது நீங்கள் படிக்கவிருக்கும் 'ஜாலி கதைகள்' தொகுப்பு. வேறு வேறு சந்தர்ப்பங்களில் குமுதம், விகடகவி, குங்குமம், பாவையர் மலர் போன்ற பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள் இங்கே சங்கமித்துள்ளன. நகைச்சுவை, சமூகம், சரித்திரம் என்று வெரைட்டியான ஜானர்களில் அமைந்ததாகவும் சேர்த்திருக்கிறேன். மொத்தத்தில், படித்து முடித்ததும் இதழ்களில் ஒரு புன்னகையைத் தொற்ற வைக்கிற, உற்சாகமான மனநிலைக்கு மாற்றுகிற சிறுகதைகளின் தொகுப்பே இந்த 'ஜாலி கதைகள்'. (படித்ததும் நீங்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, நான் உறுதியாக நம்பியதைக் கூறிவிட்டேன். ஹி... ஹி...).
ஆத்துல வர்ற தண்ணிய யார் நிலத்தில் திறந்து விடுவது என்பதில் தங்கராசுக்கு மணிமுத்துக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது. எதிர்பாரத விதமாக இப்பிரச்சனையில் தங்கராசு சிறைச்சாலை செல்கிறான். சிறைச்சாலை சென்ற அப்பாவை கதிர் மீட்டெடுத்தானா? இல்லையா? அதன்பின் நடந்தது என்ன? வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்!.
காவ்யாவின் மானத்தை காப்பாற்றியவன் அசோகன். அசோகனை கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய, அவனை நிரபராதி என்று நிரூபிக்க தன் மானம் போனாலும் பராவாயில்லை என்று தன்னுடைய கட்டுக்காவலை தகர்த்துவிட்டு சாட்சி சொல்ல வருகிறாள். வந்தவள் தன்னுடைய குடும்பத்தை இழந்து நிற்கதியாய் நிற்கிறாள். நிற்கதியாய் நின்றவளை தன்னுடையவளாக நிரந்தரமாக்கிக் கொண்டான் அசோகன். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்குள் வரும் சிறு சிறு ஊடல்களும், அதை இருவரும் எதிர்கொண்ட விதமும் கதையின் சுவாரஸ்யம். இறுதியில் காவ்யாவின் பிறந்த வீட்டார் அவளை ஏற்றுக் கொண்டார்களா? வாசித்து தெரிந்து கொள்வோம்.
இது ஒரு பயணக் கட்டுரை நூல். இதை படிக்கும் பொழுது நெதர்லாந்து துளிப் தோட்டத்தின் அழகையும், பாரீஸ் நகர ஈபிள் டவரின் பிரமிப்பூட்டும், சுவிட்சர்லாந்து பனிமலைகளின் குளிர்ச்சியையும், இத்தாலியின் புகழ்பெற்ற வெனிஸ், ஃபிளாரன்ஸ், ரோம் நகர வீதிகளில் நடை பயின்ற உற்சாகத்தையும் உங்களுக்கு தரும். மேலும் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் தருணம் மூன்று உலக அதிசயங்களையும், உலகின் புகழ்பெற்ற பல இடங்களையும் நீங்களே சுற்றிப் பார்த்து விட்டு வந்த உணர்வைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
One of the government's former behavioural scientists reveals how you can do what you want, whilst everybody tries to influence you into doing what they want. Influence makes you think what you think and do as you do. You use it to change the thoughts and behaviours of others – just as others use it change yours. We have been perfecting our influence for millions of years, but in the last 20 years digital technologies have revolutionised how influence works. We are now connected to old school friends and niche interest groups – but unwittingly also to organised criminals, terrorists and hostile states who infiltrate our societies. The course of history is being shaped: elections have been hijacked, lies spread about pandemics and the rapidly heating climate, and information has become as important as bullets and bombs to winning wars. More than ever, influence has become the crucial currency for commercial and political gain: If you don't understand it, you will likely become its victim. Written by a former government behavioural scientist working at the cutting edge of this field, Influence is a groundbreaking guide to the chaotic and murky world we live in. Through examining five key factors we are taken on a tour from the past to our real-world present, to build a picture of the major role influence plays in everyday life. Influence provides a simple personal plan illustrating how you can use influence to achieve your goals – whether gaining that promotion, getting your friends to a music festival, or your children to eat their greens. But by understanding the nature of influence, you will also see how it is changing in the information age, enabling dangerous adversaries to gain power, leaving our societies in peril. Most importantly, by using the tools of influence you will be empowered to play your part in protecting us – it will be down to you and everyone you know. Influence is a fascinating guide to how you can help by understanding it, using it and resisting it.
A sizzling beach read thriller with an ending readers are calling 'jaw-dropping'... 'A stone cold tale of secrets, lies and betrayal unfolds on the holiday from hell – 2024's suitcase essential.' Janice Hallett, bestselling author of The Appeal 'A thrilling page-turner set against a stunning Thai backdrop where everyone has secrets and with a killer twist – loved it.' Catherine Cooper, author of The Chalet 'I raced through The Trip – thrilling and fabulous. A summer thriller you won't want to put down.' Lauren North, author of The Teacher's Secret 'A stunningly brilliant book. The Trip is sun-drenched suspense that demands to be read in one breathless sitting.' Matthew Blake, author of Anna O The perfect holiday. The perfect crime. Four friends on the holiday of a lifetime. Until a vicious murder shatters their paradise. Four friends who'd do anything for each other, until now. Only one of them committed a crime. But all four know how to keep a secret. And they're all guilty of something... Readers love The Trip! 'A terrific thriller set on an island with a bunch of friends and one of them could be the killer – what more could you ask for in a book? Loved this!' Reader review ⭐⭐⭐⭐⭐ 'This was such a fantastic gripping read it pulled me in from the first page until the very last ... Excellent writing from start to finish and what a finish it was – such a jaw-dropping ending' Reader review ⭐⭐⭐⭐⭐ 'Yet another brilliant novel by this author. I am a big fan' Reader review ⭐⭐⭐⭐⭐ 'Awesome book! I can't get enough of these beach vacation thrillers. Great suspense. Great ending!' Reader review ⭐⭐⭐⭐⭐ 'I loved the twist and was desperate to know the "secret"... Fantastic' Reader review ⭐⭐⭐⭐⭐.
The whole world disappears when you enter THE SILENCE FACTORY 'I loved it. A delicately woven novel with an utterly original premise, it ensnared me from the very first page' EMILIA HART 'I loved it. A delicately woven novel with an utterly original premise, it ensnared me from the very first page' EMILIA HART 'Extraordinary writing... silk, secrets and silence woven into a gleaming Gothic web. What a treat' ANNA MAZZOLA 'Epic in scope and rich at sentence level, this is storytelling at its most immersive' ERIN KELLY Henry dreams of silence. A world without the clattering of carriages through cobbled streets, the distant cries of drunken brawls, the relentless ticking of the clock. Then he meets a fascinating, mysterious gentleman who sells just that. Precious silk that can drown out the clamour of the world – and everything Henry is so desperate to escape. Summoned to Sir Edward's secluded factory to try to cure his young daughter's deafness, Henry is soon drawn deeper and deeper into the origins of this otherworldly gift: a gift that has travelled from ancient Mediterranean glades to English libraries. Ignoring repeated warnings from the girl's secretive governess, he allows himself to fall under the spell of Sir Edward and his silk... but when he learns its true cost, will it be too late to turn back? From the #1 bestselling author of THE BINDING, this is an enthralling story about complicity, desire and corruption – a novel to lose yourself in.