99 record(s) found
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த கனகா, தம்பியை வளர்க்க மிகவும் சிரமப்பட்டாள். அப்பாவின் கம்பெனி பணம், அம்மாவின் சேமிப்பு பணம் என்று சமாளித்து வரும்போதுதான் வினோதினியை சந்திக்க நேரிட்டது. இவள் யார்? எதற்காக கனகாவை சந்தித்தாள்? இவளால் கனகாவிற்கு நேரிட்டது என்ன? என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்.
புதிதாக வாங்கிய வீட்டிற்கு ஹரிஷ் தன் பெற்றோருடன் தாத்தாவோடு குடிபுகுகின்றான். அங்கே அமானுஷ்யம் இருப்பதாக அவனுக்குள் தோன்ற, ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் இருப்பது இன்விசிபிள் பெண் யாஷிதா என்று தெரியவருகிறது. அந்த பெண் உருவம் இல்லாமல் எப்படி மாயமாய் அவ்விடம் இருக்கின்றால்? எதனால் அப்படி ஓரு நிலை? பழைய நிலைக்கு மாறுவாளா? என்று நகைச்சுவை கலந்த பேண்டஸி முறையில் கதையை அறிவோம்.
நந்தினி தாய் தந்தையற்றவள். நந்தினி, பார்த்திபன் என்ற இளைஞனை காதலித்தாள். ரூபா நந்தினியின் உறவுக்காரப் பெண். அவள் நந்தினியின் காதலை பிரிக்க ஏன் நினைத்தாள்? பார்த்திபன் நந்தினி திருமணம் நடந்ததா? படித்து அறிவோம்...
என்னை எனக்காக காதலிக்க வேண்டும். என் பணம், வசதிகள் இவையெல்லாவற்றையும் மறந்து எனக்காக உருக வேண்டும்... மொத்தத்தில் எனக்கென்று ஒரு இதயம் வேண்டும். இந்த வார்த்தைகளை சந்தானகிருஷ்ணன் சொல்லக் காரணம் என்ன? அவனுக்காக அவனை மட்டும் நேசிக்கும் ஒரு இதயம் அவனுக்கு கிடைத்ததா? அந்த இதயம் யாருடையது? சந்தானகிருஷ்ணனை நிம்மதி இல்லாமல் இருக்கச் செய்யும் நபர்கள் யார்? இவற்றையெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள வாசிப்போம்.
அழகான வீராப்பான பொண்ணு சீதா. மிகவும் சாதுவான பெற்றோருக்கு கீழ்படியும் பையன்தான் சூர்யா. இந்த எதிரும் புதிருமான ஜோடிகள் இணைந்தார்களா? திருமணம் நடைபெற்றதா? சூர்யாவின் நடத்தை சீதாவின் குணத்தை மாற்றியதா? இந்த மணம் பரப்பும் ஜூலை மலர்களை வாசிப்போம் வாருங்கள்.
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
'எந்தக் கலையாக இருந்தாலும், எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோபலட்சம் மக்களிடம் பேசக் கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி. 'சினிமா சங்கதி' எனும் நூலை மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ளார்.
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் சுவாரசியமிக்கவை. நம்மை தைரியமூட்டி, நம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும் கருத்துக்கள் அடங்கியவை. நம்முடைய மனக்கண்களை திறந்து தெளிவுப்படுத்தும் இச்சிறுகதைகளை வாசிப்போம் வாருங்கள்...
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
மின்னல் அடிக்கும் வெண்மை, அபார அழகு, வேலைத்திறன் சகலமும் நிறைந்த ஷில்பாவை, அரவிந்த் காதலித்து மணந்து கொள்கிறான். ஷில்பாவால் அவனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி என்ன? ஏன் அவள் அப்படி நடந்து கொண்டாள்? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
தமிழ்நாட்டு வாசகர்களை தமது எழுத்துக்களால் போதைகொள்ளச் செய்தவர் ஜெயகாந்தன். அவர் எழுத்துக்களில் கிறங்கி மயங்காதவர்கள் உண்டா என்ன வாழ்க்கையைச் சமமான நோக்குடன் ஒரே மாதிரி காணவும், கருத்து ஒருமிக்கவும் அந்தக் கருத்துக்களுக்காக வாழவும் தன்னையும் அர்ப்பணித்துக்கொள்கிற இன்னொரு ஆத்மாவின் துணை வேண்டும். அந்தத் துணைதான் முதல் வாசகர். இறுதி வாசகரும்கூட என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
வினோத் என்பவன் அண்ணியின் அரவணைப்பில் வாழ்பவன். சுனிதா தான் நினைத்தது நிறைவேற வேண்டும் என எண்ணுபவள், தன்னை மிஞ்சி எதுவும் இல்லை என்ற கருத்துடையவள். வினோத் சுனிதாவிற்கு திருமணம் நிச்சியக்கப்படுகிறது. இதில் கௌதம் என்பவன் உள்ளே வருகிறான். அந்த கௌதம் யார்? இதில் முள்ளாக இருந்தது யார்? மலராக இருந்தது யார்? வினோத், சுனிதா இருவரும் இணைந்தார்களா! வாங்க பார்ப்போம்.
நாயகன் விஷ்வா, நாயகி வர்ஷா இருவரும் புதுமண தம்பதகள். திருமணமான முதல் நாளில் இருந்தே விஷ்வா தனது மனைவியை நெருங்க முடியாமல் தவிக்கிறான். வர்ஷாவின் இதழ் பதிக்க தடைபோடும் விஷ்வாவின் வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வு தான் என்ன? சக்தி, கனிஷ்காவின் ஆழமான காதல், சுவாரஸ்யமான ஊடல், ரொமான்ஸ் ரசிக்க வைக்கும் க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் பல அதிரடி திருப்பங்கள், ரொமான்ஸ், மர்மங்கள் நிறைந்த வித்தியாசமான கதைக்களம்...
தன் ஆபத்துக் காலங்களில் எல்லாம் உடன் இருக்கும் வசுதாவை மணமுடித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பி அவள் பெற்றோரிடம் பெண் கேட்கிறான். தர மறுக்கிறார் அவர். அவரை மீறி வசுவால் வெளியே வர முடியவில்லை. தன் முதலாளியின் ஒரே மகளும் வசுதாவின் உயிர் தோழியுமான மாயாவை சந்தர்ப்பவசத்தால் மணம் முடிக்கிறான். மீண்டும் வசு அவன் வாழ்வில் இடைப்படுகிறாள். அவளை திருமணம் செய்ய வலியுறுத்துகிறாள் மாயா. மது மாயாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் மாயாவை பிரிகிறானா? வசுவை மணக்கிறானா? இனி கதைக்குள் போவோமா!.
கிராமத்து சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டும் என்றும் நோக்கத்தில், தன் அப்பா உருவாக்கிய பள்ளியை சரவணன் நிர்வகிக்கிறான். இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கணேச வாத்தியாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி என்ன? அவருகள் நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளில் சரவணன் உதவினாரா? இல்லையா? என்பதை, 'இந்துமதி'யின் 'என்னுயிர் நின்னதன்றோ' கதையில் காணலாம்...!.
ஹரி, நிஷாந்தி இருவரும் காதலித்து வந்தனர். ஹரியின் அண்ணனும், அண்ணியும் பிரிய காரணம் என்ன? அவர்களை சேர்த்து வைக்க நிஷாந்தி என்ன செய்தாள்? ஹரிஹரன், நிஷாந்தியின் திருமணம் நடைபெற்றதா? என்பதை மஞ்சள் வெயில் மாலை நேரத்தில் படித்து அறிவோம்...
ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...
பரந்த அந்த வீட்டடி மனையைக் கையில் குழந்தையுடன் சுற்றிப் பார்த்த திவ்யா... அருகிலிருந்த மகளிர் கல்லூரியைக் கண்டதும் சுரேஷை முறைத்தாள்... "எதுக்குடி முறைக்கிற...? என்னைப் போல இல்லாம என் பையனாவது எடுத்த எடுப்பிலேயே கவிழ்ந்திராம... நின்னு... நிதானிச்சு... ஆயிரக் கணக்கான பொண்ணுகள சைட் அடிச்சு... அதில ஒருத்திய தேத்தட்டுமேன்னு தொலை நோக்கு பார்வையில தாண்டி லேடிஸ் காலேஜ் பக்கமா வீட்டடி மனைய வாங்கிப் போட்டிருக்கேன்... அது புரியாம இவ கத்தறா... பாருடா உன் அம்மாவ... இவ்வாறு திவ்யாவை பார்த்து சுரேஷ் செல்லாமாக சொல்ல, அப்படி இவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? வாசிப்போமா இவர்களின் காதல் கதையை...
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
பிரபல திரைப்பட கதாநாயகர் மதுசூதனன். அவரின் மனைவி சித்ரா மற்றும் அவர்களின் ஒரே மகன் ஸ்ரீநாத். மதுசூதனனுக்கு தன் மகன் தன்னை போலவே நடிகராக வேண்டும் என்ற ஆசையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ, ஜுலி என்ற ஏழை குடும்ப பெண்ணை விரும்புகிறான். இதனால் அவர்கள் குடும்பத்தில் நடந்த குழப்பங்கள் என்ன? ஸ்ரீநாத் - ஜுலி இவர்களின் காதல் உண்மையான காதலா? அந்த சின்னஞ் சிறு இரு கிளிகள் இணைந்தார்களா? வாருங்கள் வாசிப்போம் காதல் சுவையுடன்...
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
திவ்யாவை பெண் பார்க்க வருகிறான் அபிஷேக். முதலில் வேண்டாம் என்பதும் பின் வேண்டும் என்பதும்... அதற்கான காரணங்களும்... என் ஒரு அழகான காதல்... காதல் மட்டுமே ஆன கதையும்... திவ்யாவின் தோழி பூர்ணா இன்றைய இளம் பெண்களுக்கே உரிய நாகரீகங்கள் என்னும் பெயரால் சீரழியும் வாழ்வை எப்படி சரி செய்து கொண்டாள்... என்று ஒரு புரட்சிகரமான போக்கையும் சில்வியா என்னும் திவ்யாவின் உடன் பணியாற்றும் தோழியின் கணவன் பாதை தவறி செல்லும்போது அவள் அந்த காலக்கட்டத்தைக் கையாண்ட அனுபவத்தையும் ஆரோக்கியம் என்னும் பெண்ணின் கல்லானாலும் கணவன் என்னும் வாழ்வியலும் அவனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது அவளின் மனிதாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக திவ்யாவின் அக்கா ரம்யாவின் திருமண வாழ்வின் குளறுபடிகள் அதை அவள் கணவன் சரி செய்த விதமும் இதன் ஊடாக ஷீலா என்னும் உறவினரின் உதவிகளும்... மற்றவற்றை கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.
விக்கி, கல்யாணி இருவரும் இணைபிரியா காதலர்கள். ஆனால், விக்கியின் வேலை மற்றும் குறைவான சம்பளத்தின் காரணமாக இருவரும் பிரியும் நிலை வந்துவிட்டது எதனால்?கல்யாணியை மணந்து கொள்வதற்கு முன் வரும் நபர் யார்? கல்யாணிக்கும் அந்த நபருக்கும் திருமணம் நடந்ததா? விக்கி மற்றும் கல்யாணியின் காதல் கரை சேர்ந்ததா? நடந்ததை தெரிந்து கொள்ள வாசிப்போம் வாருங்கள்...
சமூகத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமாகக் கொட்டிக் கிடக்கிறது. அந்த அறிவுதான் மிகச் சிறந்ததெனப் போற்றப் படுகிறது. முடிவுறாச் சமுத்திரத்திலிருந்து ஒரு துளி அளவேனும் ஒவ்வொருவரும் கண்டடைய வேண்டும் என்பதே 'நிழலைத் தேடுபவன்' என்ற இச்சிறுகதைத் தொகுப்பின் நோக்கம். அச்சிறு துளி நண்பர்களை, உறவினர்களை, பக்கத்து வீட்டுக்காரரை, சாலையில் நடந்து செல்பவரை, எளிய மக்களை, விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவரைப் புரிந்து கொள்ள, வாழ்க்கையை எதிர்கொள்ள இச்சிறு நூல் உதவினால், அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது?!.
அர்ஜீன் தன்னுடைய காதலை காவ்யாவிடம் தெரிவித்த பிறகு, காவ்யாவும் தன்னுடைய காதலை வெளிபடுத்தினாள். இருவரின் மனமும் இணைந்தபோது அதை தடுப்பதற்காக வந்தவர்கள் யார்? அவர்களின் சூழ்ச்சியால் நிகழப்போகும் விபரீதம் என்ன? அர்ஜீன் காவ்யா இவர்களின் காதல் என்ன ஆனது? வாசிப்போம் எங்கிருந்தோ ஆசைகள் - பாகம் 2...
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
கவிதை எழுதிப் பார்த்தால் என்ன என்கிற ஆர்வத்தின் கிறுக்கல்கள் இவை. இலக்கணம் தெரியாமல் மரபில் போகக் கூடாது என்கிற நல்புத்தி வசதியாய் இப்படி முயற்சி செய்ய வைத்தது. மனதில் தோன்றும் வார்த்தைகளின் சிறகடிப்பின் தொகுப்பு இது. வானம் விரிந்து கிடக்கிறது. எல்லா வகைப் பறவைகளுக்குமாய். நீ பறக்காதே என்று அது தடை சொல்வதில்லை. அவரவர் துணிவு. அவரவர் சிறகின் பலம். என் கவிதை வானம் இது. வண்ணத் தீற்றல்களில் உங்களுக்கும் ஒத்த ரசனை வாய்த்தால் எனக்குக் கிட்டிய விருதாய்க் கொள்வேன்.
கழுத்தில் மாலைவிழாமல் கையில் குழந்தையுடன் வாழும் பெண்ணுக்குத் திருமணம். ஏனிப்படி? என்ன நடந்தது? அந்த குழந்தையின் தந்தை யார்? அவளுடைய திருமணத்திற்கு பின்னான புதிய உறவுகள் அவளை ஏற்றுக் கொண்டதா? சிக்கலை உண்டாக்கியதா? அவள் நிலைமை என்ன? இதை காதலாய் திகட்டதிகட்டச் சொல்கிறது இந்தப் புதினம். தாம்பத்யத்தின் ரகசியத்தைக் கூறுகிறது இந்த நாவல். இந்த? "நிலவொன்று கண்டேன்"
ரம்யா, சுஷ்மா இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பராக இருக்கிறார்கள். ரம்யாவின் குடும்பத்தில் அப்பா பொறுப்பிள்ளாமல் நடந்து கொள்கிறார். அம்மா அவளை வளர்க்கிறாள். அதேபோல் சுஷ்மாவின் வீட்டில் அம்மா தப்பான தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறாள். அப்பா அவளை வளர்க்கிறார். இவர்கள் இருவரும் "சிப்பிக்குள் முத்து" போல இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை படிந்து தெரிந்துகொள்வோம்.
இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு ஸ்வரமும் இசைக்கும் கதையின் ஒவ்வொரு எபிசோடிலும்... முதல் பாதி அந்த ஸ்வரத்திற்கான கதையாக வரும்... பின்பகுதி... ஏழாவது ஸ்வரமான நிழல் ஆட்ட யுத்தத்தின் கதையாக வரும்... இவ்வாறு ஆறு ஸ்வரங்களிலும் பகுதிக் கதையாக பயணிக்கும் 'நிழல் ஆட்ட யுத்தம்...' ஏழாவது ஸ்வரத்தில் முழுமையான கதையாக... முழுப்பகுதியையும் ஆக்ரமித்து... தனித்து தன்னை உணர்த்தி வரும்... ஸ்வரம் நான்கு - மனம் கண்ட வைரம்... வாசிப்போம்.
'நம்மால் எதையும் சாதிக்க முடியும்' என்கிற ஒரு மகத்தான உண்மையைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்கு சுலபமாய் பாடம் நடத்த வருகிறது. இது இளம் எழுத்தாளர்களுக்கானது மட்டுமல்ல, எந்தத்துறையாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகத்தைப் படித்த பின் அவர்கள் அந்த துறையில் எவரெஸ்ட் உச்சியைத் தொடுவது சர்வ நிச்சயம். எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம்தான், மின்மினி வார இதழில் 1986ஆம் ஆண்டு ஒரு தொடராக வெளிவந்தது. மிக்க அன்புடன் ராஜேஷ்குமார்.
சின்னுவுக்கு அக்கீயின் பேரில் ஈர்ப்பு இல்லைதான். இது கல்லூரிக் காலத்திலேயே நீடிக்கிறது. ஆனால் சின்னுவும் ரூபிணியும் விரும்புகிறார்கள். எதிர்பாராமல் ரூபிணியின் துர்மரணம் நிகழ்கிறது. சின்னு உடைந்து போய் அக்கீயை விட்டு விலக நினைக்கிறான். இடையில் ரோகிணியின் நிச்சயமற்ற ஊடுருவல்! ஆனால், பூமாவின் நினைவில் அக்கீயையும் துறந்து, சின்னு கடந்து செல்கிறான். இறுதியில் மீண்டும் இருவரும் ஓர் உச்சக்கட்டத்தில் சந்திக்கிறார்கள். ஒருவேளை நிரந்தரமாக இழந்தவர்களையே நினைத்து வாழ்க்கையைத் தொலைத்து விடுவதில் என்ன பயன் என்பதை அக்கீசியா, சின்னசாமிக்கு உணர்த்தியிருக்கலாம்.
வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்தால்? அவளால் அதை ஏற்க முடியுமா? நாயகனை தன் கைக்குள் வைக்க நினைக்கும் அவனது தாய், இந்த கூட்டுக் கிளியை மருமகளாக தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? பேசவே தயங்கும் நாயகி, நாயகனின் நியாயமான ஆசையை உணராமல் அவனை விட்டு பிரிய, மீண்டும் அவர்கள் இணைந்தார்களா? நாயகனின் தாய் இந்த திருமணத்துக்கு சம்மதிப்பாரா? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த வினாடி நடந்தது என்ன? தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட ஒரு மணி நேரத்திலேயே வாழாவெட்டியாக, சாருலதா தன் பிறந்தகம் சென்ற காரணம் என்ன? பாண்டியனையும் சாருவையும் நிரந்தரமாய் பிரிப்பதற்கு சதி செய்தவர்கள் யார், யார்? யாருக்கு யார் நிழலாய் நின்று இவர்களைச் சேர்த்து வைத்தார்கள்? நிழலாய் நின்ற காதலின் நிஜத்தை தெரிந்து கொள்ள வாசிப்போம்...
ஏழு ஸ்வரங்கள் என்பது இந்தக் கதையின் பொது தலைப்பு... ஏழுஸ்வரங்களும் 'ச, ரி, க, ம, ப, த, நி' என்ற முதலெழுத்துக்களைக் கொண்டு சொல்லப்படுகின்றன... நானும் இந்த முதலெழுத்துக்களைக் கொண்டே ஒவ்வொரு ஸ்வரத்தையும் இசைக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் பெயர் சூட்டியிருக்கிறேன்... இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு கால கட்டத்தையும் சொல்லும்போது... அந்தக் காலத்தின் வரலாறுக்குள் நான் போக வேண்டியிருக்கிறது... சொல்லாடலில் இருந்து... அனைத்து தொனிகளும் மாறுவதில் இவை சரித்திரக் கதைகளாக மாறப் போகின்றன... ஆறு ஸ்வரங்களும் ஆறு கால கட்டத்தில் பிரிந்து கதை சொல்லும் போது... ஏழாவது ஸ்வரம் 'நிழல் ஆட்ட யுத்தமாக' உங்கள் கண்முன்னால் முதல் ஸ்வரத்திலிருந்தே பயணிக்கப் போகிறது... ஸ்வரம் ஒன்று - சந்தம் தந்த சொந்தம்... வாசிப்போம் வாருங்கள்.
"முடிஞ்சிருக்கும் கண்ணதாசன்... ஆனால்..." "இந்த ஆனா... ஆவன்னாவெல்லாம் என்கிட்ட வேண்டாங்க... அப்படி நடக்கலைன்னா உங்களை யாருன்னு கேட்கச் சொன்னீங்க... அதைத்தான் கேட்கிறேன்... நீங்க யார்...?" மனதில் அறை வாங்கினான் அர்ஜீன்... எந்தக் கேள்வியை கண்ணதாசன் கேட்டுவிடக் கூடாது என்று நினைத்தானோ... அந்தக் கேள்வியை கேட்டுவிட்டதில்... மனம் துடிக்க அங்கிருந்து வேகமாக வெளியேறினான்... கண்ணதாசன் எதற்காக அர்ஜீனனை பார்த்து இப்படி கேட்டான்? என்ன நடந்தது? வாசிப்போம்... எங்கிருந்தோ ஆசைகள் - பாகம் 3...
முட்டாள்...! உன்னை விட்டுட்டு வேறொருத்தி கூடக் காப்பி சாப்பிட நான் போவேனா...? எனக்கு உன்கூடப் பேசனும் காவ்யா... அதுக்கு தனிமை வேணும்... அர்ஜீனின் கண்களில் காதல் வழிந்தது... ஐ லவ் யு என்று கூறிய அர்ஜீனின் கரங்கள் முரட்டுத்தனத்துடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டன. காவ்யா திணறிப் போனாள்... பிறகு நடப்பது என்ன? இரண்டாம் பாகத்தில் தொடரும்...
திருவல்லிக்கேணியில் தன் தாய் ராஜலஷ்மியம்மாளுடன் வசித்து வந்தான் பரசு. வேலை தேடும் பட்டதாரியான இவனுக்கு, 'லீனா எண்டர்ப்ரைசஸ் பிரைவேட் லிமிடெட்'டில் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. பரசுக்கு வேலை கிடைத்ததா? இல்லையா? அதன்பின் நடந்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
நிலவின்றி வானம் இல்லை என்பதுபோல இந்த கதையின் நாயகி நிலா, வாணவராயனின் மேல் கொண்ட காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை சுவாரசியத்துடன் படித்து அறிவோம்...
கௌதம நீலாம்பரன் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சில எழுத்தாளர்களின் தித்திக்கும் சந்திப்புகளையும், சரித்திர நாவல்களையும், ஆயிரம் ஆசைக் கனவுகளையும் நெஞ்சில் தேக்கி, எழுதுகோலால் இதய நிலங்களில் உழுது கொண்டிருக்கும் ஒரு சாதாரண எழுத்தாளனின் வழிப்பயணத்தை காண வாருங்கள் வாசிப்போம்...!.
இப்போது நீங்கள் படிக்கவிருக்கும் 'ஜாலி கதைகள்' தொகுப்பு. வேறு வேறு சந்தர்ப்பங்களில் குமுதம், விகடகவி, குங்குமம், பாவையர் மலர் போன்ற பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள் இங்கே சங்கமித்துள்ளன. நகைச்சுவை, சமூகம், சரித்திரம் என்று வெரைட்டியான ஜானர்களில் அமைந்ததாகவும் சேர்த்திருக்கிறேன். மொத்தத்தில், படித்து முடித்ததும் இதழ்களில் ஒரு புன்னகையைத் தொற்ற வைக்கிற, உற்சாகமான மனநிலைக்கு மாற்றுகிற சிறுகதைகளின் தொகுப்பே இந்த 'ஜாலி கதைகள்'. (படித்ததும் நீங்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, நான் உறுதியாக நம்பியதைக் கூறிவிட்டேன். ஹி... ஹி...).
திவ்யாவை பெண் பார்க்க வருகிறான் அபிஷேக். முதலில் வேண்டாம் என்பதும் பின் வேண்டும் என்பதும்... அதற்கான காரணங்களும்... என் ஒரு அழகான காதல்... காதல் மட்டுமே ஆன கதையும்... திவ்யாவின் தோழி பூர்ணா இன்றைய இளம் பெண்களுக்கே உரிய நாகரீகங்கள் என்னும் பெயரால் சீரழியும் வாழ்வை எப்படி சரி செய்து கொண்டாள்... என்று ஒரு புரட்சிகரமான போக்கையும் சில்வியா என்னும் திவ்யாவின் உடன் பணியாற்றும் தோழியின் கணவன் பாதை தவறி செல்லும்போது அவள் அந்த காலக்கட்டத்தைக் கையாண்ட அனுபவத்தையும் ஆரோக்கியம் என்னும் பெண்ணின் கல்லானாலும் கணவன் என்னும் வாழ்வியலும் அவனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது அவளின் மனிதாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக திவ்யாவின் அக்கா ரம்யாவின் திருமண வாழ்வின் குளறுபடிகள் அதை அவள் கணவன் சரி செய்த விதமும் இதன் ஊடாக ஷீலா என்னும் உறவினரின் உதவிகளும்... மற்றவற்றை கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
சசி என்பவன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக பணி புரிகிறான். இவன் மனைவி மது. 'ட்விங்கிள்' என்ற ஒரு பெண் குழந்தை உண்டு. மதுவின் கடந்த காலத்தை நினைவுபடுத்த ஸ்ரீராம் மதுவின் வாழ்வில் வருகிறான். யார் இந்த ஸ்ரீராம்? மதுவின் கண்ணோட்டத்தில் இவன் யார்? மதுவை வைத்து என்ன சாதிக்க நினைக்கிறான்? இதெல்லாம் சசிக்கு தெரிய வருமா? தெரிந்துவிட்டாலோ சசியின் முடிவு என்னவாக இருக்கும்? வாருங்கள் வாசிப்போம்...
பம்பாய் விமான நிலையத்திலிருந்து வந்த 'ஏர்கிராஸ்' விமானம் சென்னைக்கு அருகில் வந்தபோது விபத்துக்குள்ளானதை அறிந்த ராம்குமார், அனைவரையும் ட்ரீட்மெண்ட்டிற்காக தன்னுடைய நர்ஸிங்ஹோமிற்கு அழைத்துச் செல்கிறான். தன்னிலை மறந்து இருக்கும் நித்யா யார்? எங்கிருந்து வந்தாள்? ராம்குமார் கண்டுபிடித்தானா? நித்யாவிற்கு நினைவு வந்ததா? இல்லையா? என்பதை 'இந்துமதி'யின் 'நினைவே இல்லையா நித்யா?' இக்கதையில் வாசிப்போம் வாருங்கள்...!.
ராதிகா, தனஞ்செயன் இருவரும் காதலர்கள். எந்த சூழ்நிலையிலும் பிரியக்கூடாது என்று ஒருவர்மேல் ஒருவர் பரஸ்பரம் உயிரையே வைத்திருந்தனர். இவர்களின் இந்தக் காதல் விஷயம் ராதிகாவின் குடும்பத்திற்கு தெரிந்து விடவே, இருவரையும் பிரிக்க முடிவு செய்து ஊரை விட்டே வேறு இடத்திற்கு சென்று விட்டனர். இறுதியில் ராதிகாவிற்கு நேர்ந்தது என்ன? தனா உடன் சேர்ந்தாளா? இல்லையா? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்...!.
எனக்கு இப்படி ஒரு கருவை வைத்து கதை எழுத தோன்றிய காரணம் சமூகத்தில் பல பெண்கள் இப்படி ஒரு பிரச்சனையில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலவிதமான கேலிக்கும், கிண்டலுக்கும் அவர்கள் ஆளாகும்போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கேட்டறிந்து கொண்ட நான் இந்தக் கதையை எழுத முன்வந்துள்ளேன். என்னங்க அப்படிப்பட்ட முக்கியமான கரு யோசிக்கறீங்களா...? அதைச் சொல்லாமல் விடுவேனா என்ன...? இரட்டை நாடி (குண்டாக) இருக்கும் பெண்கள் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதையும் பற்றிதான் இந்த கதையில் கொடுக்க வந்துள்ளேன். வாங்க கதைக்குள் பயணிக்கலாம்...
காவ்யாவின் மானத்தை காப்பாற்றியவன் அசோகன். அசோகனை கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய, அவனை நிரபராதி என்று நிரூபிக்க தன் மானம் போனாலும் பராவாயில்லை என்று தன்னுடைய கட்டுக்காவலை தகர்த்துவிட்டு சாட்சி சொல்ல வருகிறாள். வந்தவள் தன்னுடைய குடும்பத்தை இழந்து நிற்கதியாய் நிற்கிறாள். நிற்கதியாய் நின்றவளை தன்னுடையவளாக நிரந்தரமாக்கிக் கொண்டான் அசோகன். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்குள் வரும் சிறு சிறு ஊடல்களும், அதை இருவரும் எதிர்கொண்ட விதமும் கதையின் சுவாரஸ்யம். இறுதியில் காவ்யாவின் பிறந்த வீட்டார் அவளை ஏற்றுக் கொண்டார்களா? வாசித்து தெரிந்து கொள்வோம்.
இது ஒரு பயணக் கட்டுரை நூல். இதை படிக்கும் பொழுது நெதர்லாந்து துளிப் தோட்டத்தின் அழகையும், பாரீஸ் நகர ஈபிள் டவரின் பிரமிப்பூட்டும், சுவிட்சர்லாந்து பனிமலைகளின் குளிர்ச்சியையும், இத்தாலியின் புகழ்பெற்ற வெனிஸ், ஃபிளாரன்ஸ், ரோம் நகர வீதிகளில் நடை பயின்ற உற்சாகத்தையும் உங்களுக்கு தரும். மேலும் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் தருணம் மூன்று உலக அதிசயங்களையும், உலகின் புகழ்பெற்ற பல இடங்களையும் நீங்களே சுற்றிப் பார்த்து விட்டு வந்த உணர்வைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.