23 record(s) found
Selected by NLB librarians and endorsed by a selection committee chaired by Professor Edwin Thumboo, 82 poems, SIngaPoetry: An Anthology of Singapore Poems features 82 poems that highlight the experiences, places, observations and pivotal moments in the daily lives of Singaporeans. Visit <a href="http://www.nlb.gov.sg/readsingapore" title="ReadSingapore website" target="_blank">www.nlb.gov.sg/readsingapore</a> for the audio version of the anthology.
Selected by the Youth Book Selection Committee, the stories reflect the social values such as being grateful, of giving and having love in our lives. Having showcased tales from other parts of the Asian continent in the previous 2 years’ publications, 2014 sees us featuring stories from East Asia. The first story, Kaza Jizo, tells of the delight and timelessness of unconditional giving. The second story, The Ungrateful Tiger, is a Korean folktale that teaches us the dire consequences of greed and ingratitude. Finally, The Weaving Maid and the Cowherd is a tale of enduring love from China.
“காலம் கடந்து நிற்கும் படைப்பிலக்கியங்கள்: தலைமுறைகளை இணைக்கும் பாலம்” என்கிற இப்புத்தகத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட 20 சிறுகதைகளும் 4 கவிதைகளும் உள்ளன. இந்தப் படைப்பிலக்கியத் தொகுப்பு, தேசிய நூலக வாரியத்தின் “வாசிப்போம்! சிங்கப்பூர்” இயக்கத்துடைய 10-வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களை முன்னிட்டுப் படைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் படைக்கப்பட்ட திரட்டுகளிலிருந்து பலருடைய மனத்தைக் கவர்ந்த சிறுகதைகளை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் அவை இப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் கலாசாரத்தையும் மொழியையும் போற்றும் வகையில் அமைந்துள்ளன. காலம் கடந்து நிற்கும் படைப்புகள் இப்படைப்பிலக்கியத் திரட்டில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், தலைமுறைகளை இணைக்கும் பாலமாக அமையும் இச்சுவை மிகுந்த படைப்புகளை வாசித்து மகிழுங்கள்.
அன்று நளினிக்கு இரண்டு குடம் தண்ணீர் தேவைப்பட்டது. ஆனால் அவளால் ஒரு குடம் மட்டுமே கொண்டு வர முடிந்தது. இன்னுமொரு குடம் தண்ணீர் கொண்டு வர முயற்சி எடுக்கிறாள்.
மறைந்த தாயாரோடு புதைக்கப்பட்ட ஜேட் வளையலை எடுத்து பார்த்ததும் அவரின் நினைவுகள் திரும்பி வருகின்றன.
கிராமத்தின் பள்ளிவாசலில் திடீரென்று வரும் வெள்ளை யானை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பயத்தையும் உண்டாக்கியது. அதன் வருகை நன்மைக்கா? தீமைக்கா? என்று புரியாத கிராமவாசிகள் வெள்ளை யானையின் முடிவை நிர்ணயிக்கிறார்கள்.
கதையின் நாயகியின் கட்டை விரலை தேனீ கொட்டிவிடுகிறது. வலியை குறைக்க அவள் முயன்றும் முடியவில்லை. விரக்தியோடு சன்னல் திரைகளை விலக்கி இறைவனிடம் உதவி கேட்பதற்கு வெளியே பார்க்கிறாள். அப்போதுதான் இரவின் அழகு அவள் கண்களுக்கு தெரிகிறது.
அமெரிக்கத் தந்தைக்கும் சீன தாயாருக்கும் பிறந்த மகன் ஜாக், தாயார் செய்த காகித விலங்குகளுடன் விளையாடி வந்தார். அவர்கள் உறவு பாதிப்படைந்ததும் தாயாரின் அற்புத படைப்புகளுடன் விளையாடுவதை நிறுத்தினார். பின்னர் மீண்டும் அந்த விளையாட்டை நினைத்த போது, தாயார் இல்லை, ஆனால் அவர் எழுதிவைத்த செய்தியைக் கண்டெடுத்தார்.
அபு பக்கரின் மறைவுக்குப் பிறகு அவருடைய உடைமைகளைப் பார்க்கும் மகள் ஜமிலா, வீடியோ புகைப்படக் கருவியைக் கண்டெடுக்கிறாள். புதியதான அது மனைவி மைமுனுடன் அவர் மேற்கொள்ளவிருந்த ஹஜ்யாத்திரைக்காக வாங்கப்பட்டது. அந்த வீடியோ புகைப்படக் கருவியே ஆழ்ந்த துயரில் இருக்கும் தாயாரையும் மகளையும் இணைக்கிறது.
பெற்றோர் விட்டுச்சென்ற இரண்டு மரப்பெட்டிகள் பற்றிய கதையைச் சொல்கிறார் எழுத்தாளர்.
மலேசியாவில் நெகிரி செம்பிலானில் “அடாட் பொப்பாத்தே" வழக்கத்தின்படி குடும்பச்சொத்து, பெண்களுக்குச் சேரும். இந்தப் பழக்கத்தால் அதிருப்தி அடைகிறார் அங்கா. அவரின் மகள் “லேமாங்“ உணவைக் கற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும், அங்கா மறுக்கிறார்.
கணவரை இழந்த தாயாரால் வளர்க்கப்பட்ட மகன், தாயார் மனைவி சண்டையால் திண்டாடுகிறான். நிலைமை மோசமாக, தாயார் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு மனைவியின் பிரசவ வேதனையைப் பார்க்கும் மகன், தன் தாயாரின் அதே வேதனையை உணர்ந்து தாய் பிள்ளையின் பந்தத்தை மதிக்கிறான்.
மலாய் சமூகத்தின் நிலைமை பற்றியும் வரலாற்று சிறப்புமிக்கவர்கள் பலரைப் பற்றியும் சிந்திக்கிறார் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர்.
சிந்திக்கவைக்கும் இந்தக் கதை 4 வயது சிறுமி ஜனனியைப் பற்றியது. கணக்கு கேள்வியில் மாற்று வழியை நாடி விடை கண்டுபிடித்ததை, கணித ஆசிரியை ஏற்றுக்கொள்ளாததை ஜனனியால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதைக் கேட்க பள்ளிக்குச் சென்ற தாத்தாவிடமோ பள்ளியில் கற்றுக்கொடுத்த முறைப்படியே கல்வி பயில வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஜனனியின் புத்தாக்கச் சிந்தனையை தாத்தா ஏற்றுக்கொண்டாலும் பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
கதையின் நாயகி மன வளர்ச்சி குன்றிய குழந்தையுடன் ஒற்றைப் பெற்றோராக வாழ்க்கையைத் தொடங்குகிறாள். மகனைப் பார்த்துக்கொள்வது சவாலாக அமையும் அவளுக்கு நண்பர்கள், பணிப்பெண், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அன்பும் துணையும் கிடைக்கிறது.
பிலிப்பின்ஸ் நாட்டு பழங்கதையான இது கோழை எனக் காட்டிக்கொள்ள விரும்பாத நீர் எருமை, ஏழு மலைகளைக் கடப்பதற்கு ஆமையின் சவாலை ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பற்றியது.
இந்தியப் பழங்கதை. இரை தேடும் பசிகொண்ட சோம்பேறியான சிங்கம் எப்படி மற்ற மிருகங்களால் ஏமாற்றப்படுகிறது என்பதைப் பற்றியது
வியட்னாம் பழங்கதையான இது, பெருமைப்படும் புலியையும் அறிவுள்ள விவசாயியையும் பற்றியது.
மனித நேயத்தை விளக்கும் கதை.
நம் பிள்ளைகளின் குறைகளை மறந்து நிறைகளைப் பார்க்க வேண்டும் என்பதை கூறும் கதை.