1,734 record(s) found
Chaindavi always lives with an inferiority complex about herself. She falls in love with a man for the first time in her life at the age of eighteen. When the two begin to fall in love, she realizes that he loves her only as a competition, and she breaks down completely. Due to this, she decides that there is no more love in her life and goes abroad. She returns to the village as a graduate. Then again she falls in love, but that love also fails. But one guy brings her out of her sorrow. He is in love with Chaindavi. But after failing in love twice, will Chindavi accept his love or not? What is the reason for falling in love twice?.
1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன. சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன. குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது. அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது 'கோலத்தில் சிக்கிய புள்ளிகள்' என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது. தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார். இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார். கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார். சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.
வணக்கம்,காதல் கஃபே – இந்திய ஃபிரெஞ்சு நேசத்தைப் பேசும் இனிமையான காதல் கதை. புதுச்சேரியை நிகழ்விடமாகக் கொண்டு பெயருக்கு இணங்க காதலைக் கொண்டாடும் இக்கதைக்களனில் ஃபிரெஞ்சு உணவுகள், பாண்டிச்சேரியின் வாழ்விடங்கள், ஃபிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் தற்போதைய நீட்சிகள் எனப் பல சுவையான விஷயங்கள் கதையோட்டத்தின் ஊடே சுவாரஸ்யமாகப் பின்னப்பட்டுள்ளன.பிரியத்தின் சொற்களுக்கு இடையே சற்றே மனம் நிறுத்தி சிந்திக்கச் சிறு சிந்தனை இழையும் உள்ளோடும் நன்றி!அன்புடன்,ஹேமா ஜெய்.
Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
கள்வனின் காதலி ஒரு காதல் காவியம். இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட கால கட்டத்தில் பூங்குளம் என்னும் சிறிய கிராமத்தில் முத்தையனும் கல்யாணியும் காதலர்கள் விதி இவர்களது வாழ்விலும் விளையாடியது. முத்தையனை எல்லோரும் பயப்படும் ஒரு கொள்ளையனாக மாற்றியது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைய நேர்ந்தபோது அங்கும் விதி சிரித்தது!...அதன் முடிவு...? (இந்த நாவல் ஒரு வெற்றிகரமான திரைப்படமாக 1955ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பானுமதி நடித்து வெளியாகியது)
பெற்றோர்களை இழந்து, அண்ணன்களும் கைவிடப்பட்ட நிலையில் நிராதரவாக கைவிடப்பட்ட கீர்த்தனா என்ன ஆனாள்?இரண்டாவது திருமணம் செய்யாமல் தனிமரமாக, மகள் ரம்யாக்காக வாழும் இளமாறன் வாழ்க்கையில் கீர்த்தனா எவ்வாறு நுழைந்தால்? படிப்போம் வாருங்கள் வா பொன்மயிலை....
நாயகன் விஷ்வா, நாயகி வர்ஷா இருவரும் புதுமண தம்பதகள். திருமணமான முதல் நாளில் இருந்தே விஷ்வா தனது மனைவியை நெருங்க முடியாமல் தவிக்கிறான். வர்ஷாவின் இதழ் பதிக்க தடைபோடும் விஷ்வாவின் வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வு தான் என்ன? சக்தி, கனிஷ்காவின் ஆழமான காதல், சுவாரஸ்யமான ஊடல், ரொமான்ஸ் ரசிக்க வைக்கும் க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் பல அதிரடி திருப்பங்கள், ரொமான்ஸ், மர்மங்கள் நிறைந்த வித்தியாசமான கதைக்களம்...
பம்பாய் விமான நிலையத்திலிருந்து வந்த 'ஏர்கிராஸ்' விமானம் சென்னைக்கு அருகில் வந்தபோது விபத்துக்குள்ளானதை அறிந்த ராம்குமார், அனைவரையும் ட்ரீட்மெண்ட்டிற்காக தன்னுடைய நர்ஸிங்ஹோமிற்கு அழைத்துச் செல்கிறான். தன்னிலை மறந்து இருக்கும் நித்யா யார்? எங்கிருந்து வந்தாள்? ராம்குமார் கண்டுபிடித்தானா? நித்யாவிற்கு நினைவு வந்ததா? இல்லையா? என்பதை 'இந்துமதி'யின் 'நினைவே இல்லையா நித்யா?' இக்கதையில் வாசிப்போம் வாருங்கள்...!.
எங்கோ பிறந்த இரு மலர்கள் ஓர் இரவு இரயில் பயணத்தில் நட்புறவு கொண்டு வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தார்கள். இருவரின் காதல் இருவரும் அறிந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவர்களின் காதலை அவரவர் வீட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம். அவளது குடும்பத்தில் அவன் வேண்டாதவனாக ஆகிவிடுவானோ? இருவரின் காதலும் கைகூடுமா? அவர்களின் வாழ்க்கை நிலைக்குமா? வாசித்து பாருங்கள் கதையின் சுவாரசியத்தை...
சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த வினாடி நடந்தது என்ன? தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட ஒரு மணி நேரத்திலேயே வாழாவெட்டியாக, சாருலதா தன் பிறந்தகம் சென்ற காரணம் என்ன? பாண்டியனையும் சாருவையும் நிரந்தரமாய் பிரிப்பதற்கு சதி செய்தவர்கள் யார், யார்? யாருக்கு யார் நிழலாய் நின்று இவர்களைச் சேர்த்து வைத்தார்கள்? நிழலாய் நின்ற காதலின் நிஜத்தை தெரிந்து கொள்ள வாசிப்போம்...
தன் ஆபத்துக் காலங்களில் எல்லாம் உடன் இருக்கும் வசுதாவை மணமுடித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பி அவள் பெற்றோரிடம் பெண் கேட்கிறான். தர மறுக்கிறார் அவர். அவரை மீறி வசுவால் வெளியே வர முடியவில்லை. தன் முதலாளியின் ஒரே மகளும் வசுதாவின் உயிர் தோழியுமான மாயாவை சந்தர்ப்பவசத்தால் மணம் முடிக்கிறான். மீண்டும் வசு அவன் வாழ்வில் இடைப்படுகிறாள். அவளை திருமணம் செய்ய வலியுறுத்துகிறாள் மாயா. மது மாயாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் மாயாவை பிரிகிறானா? வசுவை மணக்கிறானா? இனி கதைக்குள் போவோமா!.
நந்தினி தாய் தந்தையற்றவள். நந்தினி, பார்த்திபன் என்ற இளைஞனை காதலித்தாள். ரூபா நந்தினியின் உறவுக்காரப் பெண். அவள் நந்தினியின் காதலை பிரிக்க ஏன் நினைத்தாள்? பார்த்திபன் நந்தினி திருமணம் நடந்ததா? படித்து அறிவோம்...
கணவன் சந்திரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சீதா. அவன் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தும் அவளை அவன் வீட்டை விட்டு போ என்கிறான். அவன் தன் மறைந்த முதல் மனைவி மோகனா வை இன்னும் மறக்கவில்லை ...... அவளோடு தான் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க செல்கிறாள் சீதா. ஆனால் அவனுக்கு ஒரு கடந்த கால இருட்டு இருக்கு. அதை மறைக்க பாடுபடுகிறான். சீதா அவன் காதலுக்காக ஏங்க .....அவளுக்கு அவன் அன்பு கிடைத்ததா.....சீதாவை தொடருங்கள்.
பிரசன்னா, வாசவி இருவரும் பாசமிகுந்த உடன்பிறப்புகள். பிரசன்னாவிற்கு சுகந்தி என்கிற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. சுகந்தியின் அண்ணனான சந்தோஷும், வாசவியும் காதலித்தனர். ஒரு கட்டத்தில் சந்தோஷ், வாசவியின் மீது கோபம் கொண்டு அவளை பிரிகிறான். மனதில் நேசத்தை வைத்துக் கொண்டிருந்த வாசவியை சந்தோஷ் ஏற்றுக் கொண்டானா? அவளது நேசம் ஜெயித்ததா? காதலுடன் படித்து அறிவோம்...
ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...
நிலவின்றி வானம் இல்லை என்பதுபோல இந்த கதையின் நாயகி நிலா, வாணவராயனின் மேல் கொண்ட காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை சுவாரசியத்துடன் படித்து அறிவோம்...
"அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை செய்ய மாட்டேன் என்று இவ்வளவு உறுதியா சொல்ற நீ... எதுக்காக என்னைக் காதலிச்சாய்? எதுக்கா இப்போ என் வாழ்க்கையோடு விளையாடுகிறாய்?" சத்யநந்தன் கேட்டதும், மதுவின் கண்கள் வலியைக் காட்டின. "தப்புதான்... அம்மாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நான் காதலிச்சது தப்புதான்! அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அனுபவிக்கிறேன்!" கண்களில் நீருடன் மது சொன்னதும், சத்யா வேதனையோடு கண்களை மூடினான்! தன்னைக் காதலித்தது தவறு என்று காதலி சொல்லும்போது, எந்த காதலனுக்குத்தான் வேதனை இராது? ஆனால்... தானே அவளது இந்த வார்த்தைகளுக்கு காரணம் என்ற குற்ற உணர்வோடு அவளை நோக்கியவன், "சாரி... மது... வெரி வெரி சாரி!" என்றான் ஆத்மார்த்தமாக! "இல்லை சத்யா... நீங்க சொன்னது தப்பில்லை! என் மேல்தான் எல்லா தப்பும்! அதுதான் உண்மை! ஆனால்... நீங்க என்ன சொன்னாலும் என் முடிவை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது! அதுவும் உண்மை!" என்றவள் கண்கள், 'இத்தோடு விட்டு விடேன்' என்று அவனிடம் கெஞ்சின. அவள் விழிகள் வேண்டியதைச் செய்து விட வேண்டும் போலத் தோன்றினாலும், இப்போது விட்டு விட்டால், அவளை இழப்பது நிச்சயம் என்று தெரிந்தும், அவனால் விட்டு விட முடியுமா என்ன? இப்போது அவன் சொல்லப் போகும் வார்த்தைகள் அவளைக் காயப் படுத்தும் என்று சத்யாவுக்குத் தெரிந்தது. ஆனால்... இப்போது இதைச் சொல்லா விட்டால், வாழ் நாள் முழுதும் இருவரும் வருந்த வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தவனாக, அவளிடம் திரும்பினான். "இங்கே பாரு மது! ஒன்று நீ அத்தையின் ஆசையை நிறைவேற்றனும்! இல்லை... உனக்கு சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைச்சுக்கணும்! இது ரெண்டையும் செய்யாமல் இருந்தால், அத்தைக்கு..." என்றவன் குரல் கமறியது. தொண்டையை செருமி சரி செய்து கொண்டவன், "அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால், அவங்க ஆன்மா கூட உன்னை மன்னிக்காது!" தனது வேண்டுதலுக்கு இணங்கி இத்தோடு இந்தப் பேச்சை விட்டு விடுவான் என்று எண்ணி இருந்த மது, சத்யாவின் வார்த்தைகளில் திகைத்து அவனை நோக்கினாள்! 'என்ன சொல்கிறான் இவன்?' அவளுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை! மதுவின் முகத்தில் தெரிந்த குழப்பம், அவளுக்கு தான் சொன்னது விளங்கவில்லை என்பதை உணர்த்த, சத்யா மீண்டும் பேசினான். "ஆமாம்... அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்... நீ சொன்ன மாதிரி அவங்க உங்க திருமணம் பற்றி பேசியதுதான் அவங்க கடைசி வார்த்தை...கடைசி ஆசையா இருக்கும்! அதை நிறைவேற்றுவது உன் கடமையும் கூட! அதனால், ஒன்று நீ மகேந்திரனை கல்யாணம் செய்து கொண்டு அவங்க ஆசையை நிறைவேற்றனும்! இல்லை என்றால், நீ மனசார விரும்பிய என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்... தன் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கூட, தன் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிறைவாவது அவங்களுக்கு மிஞ்சும்! அதுதான் நீ அவங்களுக்கு கொடுக்க போற உண்மையான சந்தோஷமா இருக்கும்! நீ எடுக்கப் போற முடிவில்தான் நம்ம நாலு பேருடைய சந்தோஷம்... இன்னும் சொல்ல போனால்... இன்னும் ரெண்டு குடும்பங்களுடைய சந்தோஷசம் அடங்கி இருக்கு என்பதை மனதில் வைத்து பதில் சொல்லு! இப்பவே சொல்லணும் என்று இல்லை! நல்லா யோசிச்சு சொல்லு! நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்!" 'அவளது சத்யாவா ? அவனா என்னை மகேந்திரனைத் திருமணம் செய்து கொள் என்று சொன்னான்? அவனால், எப்படி அவளிடம் இப்படி சொல்ல முடிந்தது?'
பெற்றோர்களின் விருப்பத்திற்காக அருணா, சந்திரசேகரனை மணந்து கொண்டாள். சந்திரசேகரனால் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்ன? அதன் பின், டிஸ்பென்சரி வைக்க வரும் ரவீந்திரனின் செயல் அவர்களின் வாழ்க்கையே எப்படி புரட்டிப் போட்டது? சந்திரசேகரன் எடுத்த முடிவு என்ன? என்பதை, 'இந்துமதி'யின் நினைவுகள் நெஞ்சோடு தான் கதையில் காணலாம்...!.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தன் காதல் மனைவி வைதேகியுடன் வசித்து வந்தார் தனஞ்ஜெயன். இவர் புகழ்பெற்ற கம்பெனி முதலாளி. அழகான மகன், அளவற்ற செல்வம் என்று நதிபோல் ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. எதிர்பாராதவிதமாக இந்த நதி பிரிந்துவிட்டது. பிரிவிற்கு யார் காரணம்? இந்த நதி மீண்டும் இணைந்ததா? இல்லையா? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...
விக்கி, கல்யாணி இருவரும் இணைபிரியா காதலர்கள். ஆனால், விக்கியின் வேலை மற்றும் குறைவான சம்பளத்தின் காரணமாக இருவரும் பிரியும் நிலை வந்துவிட்டது எதனால்?கல்யாணியை மணந்து கொள்வதற்கு முன் வரும் நபர் யார்? கல்யாணிக்கும் அந்த நபருக்கும் திருமணம் நடந்ததா? விக்கி மற்றும் கல்யாணியின் காதல் கரை சேர்ந்ததா? நடந்ததை தெரிந்து கொள்ள வாசிப்போம் வாருங்கள்...