1,707 record(s) found
அச்சுப் புத்தகமாக வந்த என்னுடைய முதல் கதை இது. தலைப்பிலேயே கதையின் கரு இருக்கிறது. சாக்லேடின் மணமும், தித்திப்பான மனமும் கொண்ட இரட்டை சகோதரிகளின் கதை இது. ஒரு புறம் காதலும், மறுபுறம் ஆன்லைன் கொள்ளையும் என கதையின் போக்கு சுவாரஸ்யமாக வடிவைக்கப்பட்டிருக்கிறது. படித்து பார்த்து மகிழுங்கள்.
பெருகிவரும் வாகனங்களாலும், இரவு நேரங்களில் பயணம் செய்வதாலும் விபத்துகள் அதிகரித்துள்ளன. விபத்தில் சிக்கிக் கொள்ளும் சுமித்ராக்கு என்ன நேர்ந்தது? சுமித்ராக்கு பழைய நினைவுகள் திரும்பி, தன் கணவர் டாக்டர் ராம்குமாரை ஏற்றுக் கொண்டாளா? தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினானா ராம்? மறக்குமா காதல் நெஞ்சம் வாசிப்போம் காதலுடன்.
அபிபாலாதாய் இருந்தும், தாயின் ஸ்பரிசம் இல்லாமல் வளர்ந்த கௌதம் அவனுக்கு வரமாய் கிடைத்த காதலிதான் தேவி. தேவிக்கும், கௌதமுக்கும் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? நட்பிற்கு இலக்கணமாய் விளங்கிய சிபி தான்யாவை மணந்தானா? மயக்கும் நீல நயனம் யாருடையது? நாமும் விழி அகலாது படிப்போம் நீல நயனங்களில்......
ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ தொண்டாற்றி, தன் அன்பான மனைவி சுமித்ரா மற்றும் அழகான குழந்தைகளான வர்ஷிக்கா, வருண் இவர்களின் அன்பிற்கு பாத்திரமானவர் ராம்குமார். ஸ்டேட் ரேங்க் எடுத்த தன் மகள் வர்ஷாவை மருத்துவ கல்லூரியில் சேர்க்கிறார். இந்நிலையில் கார்த்திக் என்பவன் வர்ஷாவின் எதிரியாகிறான். இவர்களின் மோதல் காதலாக மாறுமா? இதில் சுகன்யா, ஷமீல் என்பவர்கள் யார்? வர்ஷா இவர்களுக்கு செய்த உதவி என்ன? தன் பிள்ளைகளின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் மத்தியில், ராம்குமார் மற்றும் சுமித்ரா விதிவிலக்கா! இதில் வருணின் காதலி யார்? நாமும் கார்த்திக்குடன் மழைத்துளியில்...
"Dad's little princess" ஆக இருக்கும் நாயகி தென்றலின் கழுத்தில், எதிர்பாராத விதத்தில் நாயகன் பிரபஞ்சன் தாலிகட்ட, தந்தைக்கும், தன் கணவனுக்கும் இடையில் திணறும் நாயகி யாரைத் தேர்ந்தெடுப்பாள்? கணவனா? தகப்பனா? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்...
மருத்துவ உலகுக்கே சற்று சவாலாக விளங்கும் 'ஆர்ட்டிசம்' பாதித்த நாயகன். எதையுமே சுய சிந்தையில், சிந்தித்து செயல்படுத்த முடியாத, தெரியாத இளங்கோவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வந்தால்?அதை அவனால் அவளிடம் வெளிப்படுத்த முடியுமா? அப்படி வெளிப்படுத்தினால், அதை அவளால் ஏற்க முடியுமா? இளங்கோவின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
இது வரை உருவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்ட இரட்டையர்களின் கதையை மட்டுமே படித்து இருப்பீங்க. உருவங்களை மட்டுமல்ல... உணர்வுகளையும் இரட்டையர்கள் பகிர்ந்து கொண்டால்? காதலுக்கு விஞ்ஞானமும், ஆராய்ச்சியும் எதிராக திரும்பினால் வரும் எதிர்வினைகள் என்னவாக இருக்கும்? தெரிந்துகொள்ள படியுங்கள் தூங்கா விதைகள்.
வாழ்க்கையில் சின்ன சந்தோஷத்துக்கு ஏங்கும், நோயுடன் போராடும் நாயகியும், அனைத்தும் இருந்தும் வாழ முடியாத நாயகனும்... ஒரு புள்ளியில் சந்தித்து, தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார்கள் என அறிய பயணியுங்கள்... வண்ண நிழல்களுக்குள்...
ஒருவருக்கு ஒருவர் பிடிக்கத பொழுதும் பெற்றவர்களுக்காக செய்துகொள்ளும் திருமணம். விருப்பமில்லாமல் தொடர்ந்த அவர்களது வாழ்க்கை என்னவானது? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா? நேசம் கொண்டார்களா? விடை அறிய படியுங்கள் மனதைத்தா என் மானே.
ஒரு காதலினால் பாதிக்கப்படும் நாயகன், நாயகியின் குடும்பத்தில் மீண்டும் ஒரு காதல் கூடாது என இருக்க.... நாயகன் நாயகிக்கு இடையில் காணாமலே முளைவிடும் காதல்... அந்த காதல் கை கூடுமா? காணாக்காதல் கானல் நீராய் போகுமா? தெரிந்துகொள்ள படியுங்கள் கண்ணாமூச்சி ஏனடா.
அங்கையற்கண்ணி பல வருடங்களுக்கு முன்னர் தன் வாழ்க்கையை தானே தேர்ந்துகொள்ள, நிம்மதியாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு அதற்கான பலனை அங்கையற்கண்ணியின் மகன் புகழேந்தி சந்தித்தால்? அவனது எதிர்காலம்? வாழ்க்கை? காதல் என அனைத்தும் ஒரு புள்ளியில் இணைகையில், திருத்தவே முடியாத அந்த தவறின் பலன் என்னவாக இருக்கும்? பெரியவர்கள் செய்த தவறுக்கு, புகழேந்தியும், கனிகாவும் தங்கள் வாழ்க்கையை பலியிட வேண்டி வந்தால்? பெரியவர்களின் ஈகோவா? சிறியவர்களின் வாழ்க்கையா? எது வெல்லும்?.
நேசம் தாங்குமோ நெஞ்சம் கதையில் உங்களை சந்தித்த இந்திரனின் தம்பி சந்திரனின் கதை தான் இது. சந்திரன் எதற்காக திருமணம் என்றாலே தயங்கினான்? அவனது முகம் இருண்டதன் காரணம் என்ன என இந்த கதையில் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் தன் வாழ்வில் செய்த பெரும் பிழை... அதில் பாதிக்கப்படும் நாயகி... அவன் அதை எப்படி சரி செய்தான் என அறிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
பவித்ரன்... வாழ்க்கையை அதன் போக்கில் வாழப் பழகிக் கொண்டவன். பல ஊர்களை சுற்றி வருவதும், நாடுகளைச் சுற்றி வருவதையுமே பொழுதுபோக்காகக் கொண்டவன். அவனது உற்ற தோழி ரோஷினி. ரோஷினியே அவனுக்கு அண்ணியாக வர, அவள் தன் அண்ணனின் வாழ்வுக்குள் வந்த பிறகே தன் அண்ணன் ரிஷியின் மறு பக்கம் தெரிய, செய்வதறியாமல் திகைத்துப் போகிறான். ரோஷினிக்கும் அதே நிலையே இருக்க, அவர்களது வாழ்க்கை சிக்கலை சரி செய்ய போராடும் பவித்ரன். அதை அவன் சரி செய்தானா? இல்லையென்றால் அந்த சுழலுக்குள் பவித்ரனே சிக்கிப் போனானா? இதில் ரோஷினியின் நிலை என்ன? விடை அறிய படியுங்கள், "உன் நிழலில் நான்".
பவித்ரன்... வாழ்க்கையை அதன் போக்கில் வாழப் பழகிக் கொண்டவன். பல ஊர்களை சுற்றி வருவதும், நாடுகளைச் சுற்றி வருவதையுமே பொழுதுபோக்காகக் கொண்டவன். அவனது உற்ற தோழி ரோஷினி. ரோஷினியே அவனுக்கு அண்ணியாக வர, அவள் தன் அண்ணனின் வாழ்வுக்குள் வந்த பிறகே தன் அண்ணன் ரிஷியின் மறு பக்கம் தெரிய, செய்வதறியாமல் திகைத்துப் போகிறான். ரோஷினிக்கும் அதே நிலையே இருக்க, அவர்களது வாழ்க்கை சிக்கலை சரி செய்ய போராடும் பவித்ரன். அதை அவன் சரி செய்தானா? இல்லையென்றால் அந்த சுழலுக்குள் பவித்ரனே சிக்கிப் போனானா? இதில் ரோஷினியின் நிலை என்ன? விடை அறிய படியுங்கள், "உன் நிழலில் நான்".
உலகிலேயே மருத்துவம் மட்டுமே படிப்பு, வேலை என டாக்டர் மகளுக்கு, அதே துறை மருமகனை மட்டுமே தேடி அலையும் பெற்றவர்கள். அப்படி ஒருவனைத் தெரிந்தெடுக்க, அவன் கெட்டவன் எனத் தெரிந்தும் தவிர்க்க முடியாத நிலை கீர்த்திக்கு. கீர்த்தியை பல வருடங்களாக நேசித்தும், தான் மருத்துவர் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக காதலைச் சொல்லாத நாயகன் இந்திரன். இந்திரன் காதலைச் சொன்னானா? கீர்த்தியின் திருமணம் நடந்ததா? அவளது வாழ்க்கை என்னவானது? என அறிய கதைக்குள் பயணியுங்கள்.?.
இந்த உலகத்துல பெண் குழந்தைகள் மட்டும் சில அத்துமீறல்களுக்கு ஆளாகலை, சில இடங்களில் ஆண் குழந்தைகளும் அப்படியான அத்துமீறல்களுக்கு உள்ளாகுறாங்க. கதையின் நாயகன் "ஜேம்ஸ்" அப்படி ஒரு சூழலில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்க, அவனுக்குள் ஒரு காதல் வந்தால்? இவனுக்கு ஒரு அடாவடி நாயகி "சுஹானசா" கிடைத்தால்? அவன் வாழ்க்கை எப்படி மாறும்? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது. கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன். என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும். புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். 'புஸ்தக்' நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
நாயகன் : நீலன். நாயகி : பொற்சுவை. பழங்குடியின கிராமத்தில், பெரும் கட்டுப்பாடுகளுக்கு நடுவில், உலகில் இருந்து தனித்து வாழும் நாயகி. அந்த கிராமத்தை முன்னேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு, அரசாங்க உதவியோடு அவர்கள் கிராமத்துக்கு வரும் நாயகன். இருவரும் சந்தித்து காதலில் விழ, அவளை அடைய வேண்டி அவர்களது கிராமத்து வீர விளையாட்டு துவங்கி, அனைத்தையும் செய்து வெல்லும் நாயகன். இறுதியில் அவர்களது பாரம்பரிய கட்டுப்பாட்டில் சிக்கிக் கொள்ள, இருவரும் இணைந்தார்களா? நாயகியின் கிராமத்தை முன்னேற்ற வந்த நாயகன், தன் லட்சியத்தில் வென்றானா? அவர்களது கிராம மக்கள் வெளிச்சத்துக்கு வந்தார்களா? இவர்களது நிலை என்ன? இவற்றை எல்லாம் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் "மகரந்தப் பூக்கள்".
'கிருஷ்ணா' தன் வேலையின் காரணத்தால், 'ராதா'வின் அண்ணனுக்கு புத்தி புகட்ட வேண்டி செய்த செயல், அவளைப் பாதித்ததை அவன் உணரவே இல்லை. தன் அண்ணனுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதில், தனக்கு தண்டனை கொடுத்த கிருஷ்ணாவை ராதா தண்டித்தாளா? இல்லையென்றால் அவனது தவறை அவனுக்கு உணர்த்தினாளா? எனத் தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
கதையின் நாயகன் : அதர்வா. கதையின் நாயகி : உதயதாரா. உதயதாராவுக்கு திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிவுக்கு வர, புகுந்த வீட்டினர் செய்த சதியின் காரணமாக வாழ்க்கையே சூனியமாகும் நிலைக்கு தள்ளப்பட்ட நாயகி. நாயகனுக்கோ... வாழ்க்கையின் சந்தோஷங்கள் அனைத்தும் துவங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்திருக்க, கையில் குழந்தையோடு தனித்திருக்கிறான். இவர்கள் இருவரும் ஒரு வாழ்க்கை புள்ளியில் சந்தித்தால்? நாயகியின் உண்மை நிலை அறியாமல் திருமணம் செய்துகொள்ளும் அதர்வா, அவளது உண்மை நிலை தெரிய வருகையில் அவளைவிட்டு விலகுவானா? இல்லையென்றால் ஏற்றுக் கொள்வானா? உதயதாராவுக்கே தன் உண்மை நிலை தெரியாமலே அவனை மணந்திருந்தால்? தன் நிலை தெரிந்து அவனை விட்டு விலகுவாளா? இல்லையென்றால் அவன்மேல் கொண்ட நேசத்தால், அவனைவிட்டு விலக முடியாமல் தவிப்பாளா? விடையறிய முடியாத பல கேள்விகளின் சுழலுக்குள் அவர்கள் வாழ்க்கை சிக்கிக்கொள்ள, விடையறிய தொடர்ந்து பயணியுங்கள்.