6 record(s) found
பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும், சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும், பகடியும், நகைச்சுவையும், கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை. பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் வந்துவிடாது. கற்றுத்தரும் முறைகளில் மாற்றம் தேவை. அதற்கு எளிய வழி கதை சொல்வதே. கதை, ஒரு மொழியின் கட்டமைப்பையும், அதன் வளத்தையும் உங்களுக்குச் சொல்லித் தரும்.
"திருக்குறள்" பள்ளியில் படிப்பதற்கு மட்டுமல்ல, நம்முடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம். வாழ்வின் எந்த நிலையிலிருந்தும் உயர்ந்து வெற்றி பெறுவதற்கான வழிகளை 18 குறள்களின் மூலம் இப்புத்தகம் எடுத்துச் சொல்கிறது. எளிதில் புரிந்து கொள்வதற்காக, வரைபட வடிவில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதுமையான விளக்கங்களுடன், இன்றைய தலைமுறைக்கான சிந்தனைகளுடன் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்!.
அறியாமை இருளை அகற்றி, அகத்தின் வலிமை கூட்டி, தனியொரு மனிதன் தன்னம்பிக்கையுடன் வாழும். நெறிதனையும் இந்நூலில் அறியலாம். தனியொரு மனிதனின் ஒழுக்கத்தை பற்றியும் இயற்கையின் ஜீவசுகம் பற்றியும் உணரலாம் மற்றும் அன்பின் மகத்துவம் பற்றியும் பல நிதர்சனமான உண்மைகளின் வெளிப்பாடுகளும், வேதனைகளும், அதனைகளையும் முறைகளையும் மற்றும் நட்பு, காதல், போன்றவையும் சமுதாயம் பற்றிய கருத்துக்களையும் இந்நூலில் காணலாம். எனவே இந்நூல் வாசகர்களின் சிந்தனையில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கி வாழும் வழிதனை செம்மைபடுத்தும், நல் வழிகாட்டியாக கவிதை வடிவில் இந்த கடம்பசாரல் எனும் நூல் வாசகர்களின் மனதில் என்றும் இன்பச்சாரலாய் திகழ்ந்திடும் என கருதுகின்றேன்.
"ஒரு வீட்டின், ஒரு நாட்டின், உலகத்தின் நன் நடத்தை பெண்களின் வாழ்வு முறையை பொருத்தே அமைகிறது"என அவதார புருசர் சொல்கிறார். பண்பாட்டையும் நாகரீகத்தையும் மேம்படுத்த உதவி செயும் வள்ளுவப் பெருந்தகையின் நெறிமுறை கருத்துக்களை இப்புத்தகத்தில் காணலாம். பெண்கள் தங்களது ஆன்மாவை நிரந்தர பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வழி வகைகளும் உள்ளது. நிந்தர மகிழ்ச்சியை பெற்றிட வாழ்த்துக்கள்.
இளம் வயதில் மனதில் பதிந்துவிட்ட கருத்துக்கள் முதுமையிலும் அகலாது. சிறந்த / உயர்ந்த மனிதர்களாக எப்பொழுதும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ தெய்வீகம் தந்துள்ள நன்நடத்தை கருத்துக்களை அனைத்து மாணவ மாணவிகளும் இதயத்திலும் மனதிலும் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். "ஒழுக்கம் உயர்வு தரும். சுத்தம் சுகம் தரும். நன் மதிப்பும் நிரந்தர மகிழ்ச்சியும் அடைந்திட வாழ்த்துக்கள்.
They say 'Tamizhukkum Amudhendru Per'. This short ebook has 101 Golden Tamil Sayings that not only provides us with wise knowledge but also is short and crisp. Brevity is its strength. This hand-picked collection of 101 Tamil Sayings can be applied to many areas of life. Read and get benefited. It's FREE!.