1,757 record(s) found
இரண்டு டிராக்குகளில் பயணம் செய்யும் துப்பறியும் கதை இது. ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போலத் துவங்கி .. கடைசியில் இரண்டு கதைகளுக்கும் சரியான காரண காரியங்களுடன் தொடர்பை வெளிப்படுத்தும் யுத்தியில் எழுதப்பட்ட இந்த தயங்காதே, தப்பில்லை!' கதையில் ஒரு டிராக்கில் ஒரு அடையாளம் தெரியாத பிணத்தைக் கைப்பற்றும் ஒரு காவல் அதிகாரி அந்த வழக்கைத் துப்பறிவார். மற்றொரு டிராக்கில் ஒரு சினிமா கதாநாயகியின் வாழ்க்கைப் பின்னனியும், அதில் படரும் மர்ம முடிச்சுகளும் பிரதானமாக இடம் பெறும். புதிர்கள் அவிழும் தருணத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கும்.
ஒரு நல்ல பத்திரிகையாளனாக வர வேண்டும் என்கிற எளிய லட்சியத்துடன் சென்னை வரும் கதாநாயகனுக்கு ஒரு அரசியல்வாதியின் அறிமுகம் கிடைக்கிறது. அவருக்கு மேடைப் பேச்சுகள் தயாரித்துக் கொடுக்கிறான். அந்த அரசியல்வாதி அவனைப் பகடைக் காயாக்கி தன் அரசியல் எதிரியைப் பழி வாங்கத் திட்டமிடுகிறார். அதை அறியாத அப்பாவி கதாநாயகன் அவரின் சதியில் சிக்கிக்கொள்ள... வெகுண்டெழும் அவன் மிகவும் சாமர்த்தியமாக அந்த சதியிலிருந்து வெளியில் வந்து அவரை எப்படி செல்லாக் காசாக்குகிறான் என்பதைச் சொல்லும் கதையே... 'வெற்றிக் குதிரை'.
குடும்ப சூழ்நிலைகளுக்காக ஆபத்தான ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கிறாள் கதாநாயகி உத்ரா, பவளப்பாறைகளின் அழிவைத் தடுக்கவும் செயற்கையாய் ஒரு பவளத்திட்டை அமைக்கவும் நிறுவனம் ஒன்றுடன் கைகோர்க்கும் கதாநாயகன் பரத், தைரியம் ஒன்றே துணையாய் இவர்களுடன் நட்புகரம் கோர்க்கும் பத்மினி. நிச்சயமாய் இது முக்கோண காதல் கதை இல்லை. கடலுக்கு அடியில் கிடைக்கும் கனிம வளங்களை யாருக்கும் தெரியாமல் கைப்பற்ற முயற்சிக்கும் அந்நியதேசத்துடன் கூட்டு சேரும் பரத்தின் நண்பனிடம் இவர்கள் மூவரும் சிக்கிக் கொள்கிறார்கள். அரசியல்வாதி ஒருவரின் விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுகிறது அதைக் கண்டுபிடிக்க வரும் அதிகாரி அலெக்ஸ். பிளாஸ்டிக் மீன்கள், உயிர்கொல்லும் திமிங்கலம், அதன் வாழ்வியல் என்று கதை நகர்கிறது. எல்லா சிக்கல்களும் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதை கேட்டு மகிழுங்கள்.
2000 ம் வருடம் நடந்த உண்மை கதை அன்பான குடும்பம் அதில் உறவுகளின் காதல் நுழைந்து விரிசல் ஏற்படுத்துகிறது. குடும்ப உறவுகள் அவளுக்கு அன்னியமாய் போக அக்காவின் கணவனின் வக்கிரப்பார்வைகளை சுமந்தபடியே அவள். எதிர்கால வாழ்விற்கென காத்திருக்கச் சொல்லி கடல் கடந்து சென்ற காதலனுக்காக காத்திருக்கிறாள். அதன் நடுவில் நண்பன் என்னும் பெயரில் ஒரு நச்சுப்பாம்பு. விஷம் என்று அறியாமலேயே அவ்வுறவில் தன்னை இழக்கிறாள். பின் காற்றில் கலந்து சுயம் தொலைக்கிறாள்.
அஷ்டமாசித்து வரிசையில் நான்காவது சித்தான அணிமா பற்றி சிந்தித்து பின் அதற்கேற்ப கதை காலத்துடன் வடிவமைக்கப்பட்ட விறுவிறுப்பான நாவல் தொகுப்பு...
கிரண், ராவ், அலெக்ஸ் - இந்த மூன்று பாத்திரங்களும் எனது துப்பறியும் நாவல்களில் தொடர்ந்து இடம்பெறும் நெகடிவ் பாத்திரங்கள். ஒரு பிரபல விஞ்ஞானியைக் கடத்தவேண்டும் என்று அவர்களுக்கு ஒரு பெரிய வேலை தரப்படுகிறது. அதை எதிர்பார்க்கும் காவல்துறையின் துப்பறியும் மூளைகள் களத்தில் இறக்கிவிடப்படுகின்றன. விஞ்ஞானியைக் கடத்த மூவர் போடும் சாமர்த்தியமான திட்டங்கள் ஜெயித்தனவா, இல்லை அவை போலீஸ் போடும் திட்டங்களால் முறியடிக்கப்பட்டனவா என்பதை பரபரப்பாக விவரிக்கும் புதினமே. ஆகாயத்தில் ஆரம்பம்'
அவனது இதய துடிப்பை அவள் கேட்ட நொடியில் இருந்து அது அவளுக்கானதாக ஆகிப் போகிறது. ஆனால் ஏற்கனவே துடிப்பை நிறுத்தி விட்ட ஒரு இதயம் அவளைத் தேடி அலைகிறது. தன்னை அரவணைக்க ஓரு இதயம் தேடும் அவளின் நிலை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே.
தென் பாரதத்தில் திருச்சிராப்பள்ளி அருகே காவேரி நதி தனது இரு கரங்களையும் நீட்டி, ஸ்ரீரங்கம் எனும் ஓர் அழகிய தீவை அணைத்துக்கொண்டிருக்கிறாள். இங்கே ஸ்ரீ வைகுண்டத்தைப் புவியின் மீது இறக்கி வைத்தாற்போல் அமைந்திருக்கும் அரங்கனின் சந்நிதி காண்பவர் மனதை ஆட்கொள்ளும். இன்றிலிருந்து சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால், பதினான்காம் நூற்றாண்டில், ஸ்ரீரங்கம் கோவிலை நோக்கி ஓர் பேராபத்து, தில்லி படையினர் ரூபத்தில் வருகிறது. ஸ்ரீரங்கத்து மக்கள் தங்களுக்குப் பிரியமான அரங்கனைக் காக்க அந்த அசுரப்படையை எதிர்த்து போர் புரிய முடிவெடுக்கிறார்கள். அந்த மக்களின் படையில், தான் பிறந்தது அந்த பெருமாளுக்காகவே என்று நினைத்து வாழும் வெள்ளாயி எனும் தேவதாசியும் அடக்கம். கடவுளைக் காக்க மனிதர்கள் மேற்கொண்ட போராட்டம் என்னவாயிற்று? வாருங்கள்... வெள்ளாயியுடன் நாமும் பிரயாணித்து ஸ்ரீரங்கத்து மக்கள் அரங்கனின் மீது கொண்ட அலாதியான அன்பினை உணர்வோம்!
ஓம் நமோ நாராயணாய
.
Thriller Based Fiction Written By Rajeshkumar.
Thriller Based Fiction Written By Devibala.
Thriller Based Fiction Written By N.C.Mohandass.
Thriller Based Fiction Written By Arnika Nasser.
Thriller Based Fiction Written By Rajeshkumar.
Thriller Based Fiction Written By Arnika Nasser.
Thriller Based Fiction Written By Arnika Nasser.
Thriller Based Fiction Written By Rajeshkumar.
Thriller Based Fiction Written By Thiruvarur Babu.
Thriller Based Fiction Written By Rajeshkumar.
Thriller Based Fiction Written By N.C.Mohandass.
Thriller Based Fiction Written By Rajeshkumar.