1,757 record(s) found
பெற்றோருடன் லண்டன் புறப்பட்டு கொண்டிருக்கும் சாருவுக்கு வந்த கடிதம், அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. லக்ஷ்மி அம்மாள் தன் வீட்டை அவள் பேரில் எழுதி வைக்க விரும்புவதாக சொல்கிறார். அவர் யார்? அவருக்கும் தனக்கும் என்ன சம்பதமும் இல்லையே....பின் எப்படி இந்த விசித்திர நோக்கம் அவருக்கு வந்தது .குழம்பு கிறாள் சாரு. தெரிந்து கொள்ள போகிறாள். அஜகான லட்சுமி அம்மாள் திகிலான செயல்களால் பயந்து தப்பிக்கப் பார்க்கிறாள். லக்ஷ்மி அம்மாவை நடு இரவில் கத்தியை காட்டி மிரட்டுவது......சாருவின் காதலன் போல் இருக்க, திடுக்கிடும் சாரு......இப்படி திடர்ம் மர்மங்கள். இறுதியில் அவிழும் ரகசியங்கள், படியுங்கள்.
யோசனையில் இருக்கும் போது சிலர், கையில் இருக்கும் பென்சிலால் ஏதாவது கிறுக்கிப் போடுவர். பிரமனுக்கு அப்படி ஓர் ஓய்வு கிடைத்தது போலும் . தாரா...விபா வாழ்க்கை விதிகளை புரட்டி கிறுக்கி போட்டுவிட்டார். தாரா குடும்பம் இலங்கையை பூர்வீகமாக கொண்டு வாழும் தொழிலாள குடும்பம். சந்தோஷமான திருப்தி நிலவும். மனசுகள். கலவரம் ....போராட்டம் வெடிக்கிறது. அதில் சிதறிப் போகிறது குடும்பம் . தாரா...விபா அனாதை ஆகிறார்கள். அக்கா விபா வேலைக்காக ஊட்டி செல்கிறாள். தாரா அக்காவை தேடி ஊட்டி செல்கிறாள். அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி . கோணல் மாணலாகுறது அவர்களது வாழ்க்கை. தாராவை தொடருங்கள் மர்மம் விளங்கும் ....
திருவல்லிக்கேணியில் தன் தாய் ராஜலஷ்மியம்மாளுடன் வசித்து வந்தான் பரசு. வேலை தேடும் பட்டதாரியான இவனுக்கு, 'லீனா எண்டர்ப்ரைசஸ் பிரைவேட் லிமிடெட்'டில் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. பரசுக்கு வேலை கிடைத்ததா? இல்லையா? அதன்பின் நடந்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
மரத்தால் வடிவமைக்கப்பட்ட வீடு. அந்தத் தீவிலேயே அது ஒன்றுதான் வீடு. இந்தத் தீவிற்கே சொந்தக்காரனான மேஜர் ராஜேந்தருக்கு, தன் காதல் மனைவி மதுவின் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு காரணம் என்ன? இறுதியில் மதுவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? அந்தத் தீவிற்கே சென்று நாமும் காண வாருங்கள் வாசிப்போம்...!.
ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைகள் அடங்கிய ஓர் தொகுப்பு. இவை 1969 முதல் 2023 வரை – பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த முன்னணி மாத, வார, தின பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள்.
ஜெனிதா, ஜானவி இருவரும் யார்? அவள் செய்ய நினைத்தது என்ன? அவளோடு துணையாய் இணைந்தவன் அவளுக்கு உதவினானா...? சற்றே க்ரைம் கலந்த அதிரடி நாவல்! முதன்முறையாக இந்த ஸோனரைக் கையிலெடுத்து வடித்துள்ளேன். முற்றிலும் இது எனக்கும் என் வாசகவட்டமான உங்களுக்கும் புதிதே! வாசித்துவிட்டு சொல்லுங்கள்.
ஒரு சென்சிடிவ் ஆன ஒரு மெடிக்கல் த்ரில்லரை துளி ஆபாசமில்லாமல் சொல்லியிருப்பதாக நம்புகிறேன். பிறன்மனை கவர்தல் தண்டனைக்குரிய குற்றம் என்கிற நீதியை இந்த நாவல் உரக்கக்கூறுகிறது. செயற்கை கருத்தரிப்பில் ஆங்காங்கே நடக்கும் குற்றங்களை நாவலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன்.
திரைப்பட ஆர்ட்டிஸ்ட்டான சூர்யசுந்தர், கார் பங்களா என்று வசதியாக வாழ்ந்து வருகிறான். சூர்ய சுந்தரின் தீவீர ரசிகை செவ்வந்தி, எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறாள். அவள் இறப்பிற்கு யார் காரணம்? அவளின் இறப்பு சூர்ய சுந்தரை எவ்வாறு பாதித்தது? பரத், சுசிலா இந்தக் கேள்விகளுக்கான விடைகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின், 'ஹேண்டஸ் - அப்' கதையில் காணலாம்...!.
இன்றைக்குத் தமிழகத்தில் எரியும் பிரச்சனையாகத் தொடரும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்முறை என்கிற முக்கியமான பிரச்சனையான மையக்கருவாகக் கையிலெடுத்து அதன் பின்னணியில் சஸ்பென்ஸ் வைத்து நல்ல திருப்பங்களுடனும், அவசியமான சமூகக் கருத்துக்களுடனும் இந்தத் தொடரை அமைத்திருக்கிறார். நான் வெகுவாக ரசித்த சில வாக்கியங்கள்; அவள் காரின் சீட்டில் அமர்ந்து சீட்-பெல்ட்டுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பைக் கொடுத்தாள். அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்கள் வாயிலிருந்த ஸ்ட்ராவுக்குக்கூட கேட்டிருக்காது. கதவு ஒரு கோடு அளவிற்குத் திறந்தது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு அரசின் உதவி மையங்களை எப்படி 1098 எண் மூலம் அணுக வேண்டும் என்கிற அத்தியாவசியமான தகவலும் கதையில் வருகிறது. இந்தக் கதையில் இடம்பெறும் சில சம்பவங்களின் உண்மைத்தன்மைக்காக நிறைய படித்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.
பங்களாவில் வசித்து வரும் மூன்று நண்பர்களில் ஒருவனுக்கு அடிக்கடி அமானுஷ்ய தொல்லை ஏற்பட, ஜோதிடரின் கூற்றுப்படி அவனுக்கு மணம் முடித்து வைக்க முயலும் தாயார், தான் நினைத்த பெண்ணையே அவனுக்கு முடிக்க எண்ணுகிறார். அவனுக்கும் அவளை பிடிக்க, அவளோ அவனது செயல்களால் வெறுப்புற்று அவனது நண்பனின் அக்கறையான பேச்சில் ஈர்க்கப்படுகிறாள். மாப்பிள்ளையின் தாயாரின் எண்ணங்கள் ஈடேறுகிறதா? பங்களாவின் உரிமையாளர் யார்? திடீர் திடீரென்று பங்களாவில் நடக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? மர்ம பங்களா என்ற பெயர் எதனால் வருகிறது என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புனித மரியன்னை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நெருக்கமான ஆறு நண்பர்களில் இரண்டுபேர் பலூன் சிறுவனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்து பல்லவ்பூரில் ஆறு வயது சிறுவர்கள் கொல்லப்பட்டனர். ஆறு வயது சிறுவர்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? யார் அந்த பலூன் சிறுவன். பல்லவ்பூரில் நடக்கும் மர்மம் என்ன?.
ஆனந்த் விஜயா இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் காதல் ஏற்பட்டது. ஆனந்தின் நண்பன் மணியால் இவர்கள் காதலிப்பதை பொறுத்துக் கொள்ள இயலவில்லை. திடீரென ஆனந்த் இறந்து போனான். மணி இவர்களை என்ன செய்தான்? ஆனந்த் இறக்க காரணமானவன் யார்? கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நாவலின் துவக்கம் முதல் இறுதி வரை பரபரப்பும், திடுக்கிடலும், திருப்பங்களும் நிறைந்து வழிந்து ஓடுகிறது... எங்கோ நடக்கும் கொலை காட்சியை அப்படியே ஓவியமாக தீட்டுகிறான் வினோதன். அவனை விரும்புகிறாள் காந்தர்யா. அவனே அந்த கொலையை செய்து விட்டு அதை ஓவியமாக தீட்டுவதாக அவனை லாக்கப்பில் வைத்து பூட்டுகின்றனர். அடுத்து நடக்கும் கொலையை லாக்கப் அறையின் சுவற்றில் தீட்டுகிறான். அந்த காட்சிப்படியே இன்னொரு இடத்தில் கொலை நடந்திருக்கிறது. வினோதனின் இத்தகைய சக்தி எப்படி சாத்தியம்? என்பது குறித்து டாக்டர், மனோவியல் துறை புரபசர் அவர்களிடம் விவாதிக்கப்படுகிறது. "மனதில் உண்டாகும் எண்ணங்களுக்கு உருவம், ரூபம், வர்ணம் முதலான குணங்கள் உண்டு. அவற்றை படம் பிடித்து விடலாம்" என்ற உண்மையை நம்ப இயலாததாய் இருக்க... அடுத்து நடக்கப் போகும் கொலையை தடுக்க அவனை ஓவியம் வரையுமாறு உதவி கேட்கிறார் இன்ஸ்பெக்டர். கருப்பு உடை அணிந்த அந்த மர்ம உருவம் யார்? என்பது முடிவில் தெரியும் போது ... திடுக்கிட்டுகின்றனர். "சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவந்து சேர எட்டு நிமிடங்கள் பிடிக்கும். ஆனால், மனம் ஒரு நொடிக்குள் சூரியனுக்கு சென்று விடும்" என்பதற்கு உண்மையையும் நம்ப இயலாததாய் கருத, வினோதனின் இத்தகைய சக்தி எப்படி சாத்தியம் என்பது குறித்து டாக்டர் புரபசரிடம் காவல்துறை மீண்டும் விவாதிக்கிறது. இறுதியில் கருப்பு உடை அணிந்து கொலை செய்கிற அந்த உருவம் யாரென தெரிகிற போது கதையில் மட்டுமல்ல, வாசகர்களின் மனதிலும் தான் அந்த அதிர்ச்சி கலந்த திருப்பம் உண்டாகும். இனி கண்கள் எப்படி ஓவியம் வரையும்? என்பதை "கண்வரைந்த ஓவியம்" படித்து அறிந்து கொள்ளுங்களேன்...
ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த அபிநயாவும் பிரகாசும் காதலித்து வந்தார்கள். திடீரென்று பிரகாசுக்கு மாற்றல் ஆனது. அபிநயாவிற்கு வீட்டில் கல்யாணம் ஏற்பாடு செய்ய, மேனேஜரின் உதவியை நாடின அபிநயாவுக்கு, அங்கு நிகழ்ந்தது என்ன? பிறகு அவள் பிரகாஷ் வீட்டு பிரிட்ஜில் இருந்தது எப்படி? எப்படி அவள் இறந்தாள்? யார் கொலை செய்தார்கள்? கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த தப்பும் செய்யாத சந்திரனுக்கும், அவரது மனைவி ரோகிணிக்கும் எய்ட்ஸ் நோய் வரக் காரணம் என்ன? தற்கொலை செய்துகொள்பவரின் மரணத்தை ஆராயந்து மர்மத்தை விடுவித்தாரா டியாரா? தனக்கு நடந்த தவறுக்காக மக்களை பழிவாங்க நினைப்பவர் யார்? என கிருமியில் வாசிப்போம்...
விசாலாட்சிக்கும் சீனிவாசனுக்கும் திருமணமாகி 32 ஆண்டுகள் முடிந்ததை எண்ணி இவர்களின் பிள்ளைகள் அறுபதாம் கல்யாணத்திற்கு ஆயத்தம் பண்ணியிருந்தனர். விடிந்தால் அறுபதாம் கல்யாணம். ஆனால் சீனிவாசன் அன்றிரவு கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். சீனிவாசனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? பல மர்மங்கள் அடங்கிய கொன்றுவிடு விசாலாட்சியை வாசிப்போம் வாருங்கள்...
சதுரா துப்பறியும் நிறுவனம். தர்மமும் தயையும் தைரியமும் உயிர்க் கொள்கைகளாய் ஒன்று சேர்ந்த மூன்று இளைஞர்கள் நடத்தும் ஸ்தாபனம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கொடுந்தொற்று ஒன்று பாண்டிய நாட்டில் பரவ, அதனை முறியடிக்க முயல்கிறான் மன்னன் ஜடாவர்மன். இந்த இரண்டாயிரத்து இருபத்தொன்றில் ஒரு பழமையான கோயிலைக் கண்டுபிடிக்க முயல்கிறான் ஆராய்ச்சியாளன் வசந்த். இந்த இரு காலகட்டங்களும் சந்திக்கும் புள்ளி - அருவிக்கரைக் கோயில். அட, நம் அபிமான துப்பறிவாளர்கள் தர்மா, தன்யா, தர்ஷினி கூட இங்கே இருக்கிறார்களே!.
பட்டப் படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கும் தனபாலுக்கு வேலை கிடைத்ததா? அதன்பின் அவன் எடுத்த முடிவு என்ன? அகிலாவின் காதலனாகிய மதன் சூர்யா எண்டர்பிரைசஸ் அலுவலகத்தில் உயர்பதவி வகிக்கிறான். எதிர்பாராத விதமாக மதன் இறந்து விடுகிறான். இன்ஸ்பெக்டர் நியூட்டன் பரத் சுசிலாவின் உதவியால் தன் காதலன் இறப்பிற்கான காரணங்களை அகிலா கண்டுபிடித்தாளா? இல்லையா? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹேப்பி பரத் டே கதையில் காணலாம்...!.
மிகவும் அதிபுத்திசாலியாய் இருந்த சரவணக்குமாரை ஜோ அண்ட் ஜோ நிறுவனம் கடத்த நினைத்து, பொறுப்பை பார்க்கர் ஸ்மித்திடம் கொடுக்கிறார்கள். ஆனால், பார்க்ஸ்மித் அவர்களிடம் சரவணனை ஒப்படைக்கவில்லை. சரவணக்குமாரின் அப்பா ஜீவானந்தம் தன் மகனைக் கண்டுபிடித்துத் தரவேண்டி பரத் மற்றும் சுசியை நாடினார். சரவணனை இருவரும் கண்டுபிடித்தார்களா? ஏன் பார்க்ஸ்மித் சரவணனை அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. கதையை வாசியுங்கள்.