1,757 record(s) found
Thriller Based Fiction Written By Thekkur Anitha.
Thriller Based Fiction Written By Thekkur Anitha.
Thriller Based Fiction Written By Thekkur Anitha.
எஸ்டேட் ஒன்றிற்கு வரும் இளம்பெண்ணுக்கு நேரும் வித்தியாச அனுபவம், அவளை மிதமிஞ்சிய கிலிக்கு ஆளாக்குகிறது. அதனை கண்டறிய தன் காதலனுடன் சேர்ந்து முயற்சிக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள் என்ன..? என்பதையும், அதே எஸ்டேட்டில் சில வருடங்களுக்கு முன் தனக்கு நேர்ந்த இன்னலுக்கு பழிவாங்கும் விதமாய் "பெண் ஒருவள்" ஆவியாக வந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்க முற்படுகிறாள். பாதிக்கப்பட்ட அவளுக்கும், எஸ்டேட்டுக்கு புதிதாய் வந்த இளம்பெண்ணுக்கும் என்ன தொடர்பு..? என்பதையும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
பெற்றோருடன் லண்டன் புறப்பட்டு கொண்டிருக்கும் சாருவுக்கு வந்த கடிதம், அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. லக்ஷ்மி அம்மாள் தன் வீட்டை அவள் பேரில் எழுதி வைக்க விரும்புவதாக சொல்கிறார். அவர் யார்? அவருக்கும் தனக்கும் என்ன சம்பதமும் இல்லையே....பின் எப்படி இந்த விசித்திர நோக்கம் அவருக்கு வந்தது .குழம்பு கிறாள் சாரு. தெரிந்து கொள்ள போகிறாள். அஜகான லட்சுமி அம்மாள் திகிலான செயல்களால் பயந்து தப்பிக்கப் பார்க்கிறாள். லக்ஷ்மி அம்மாவை நடு இரவில் கத்தியை காட்டி மிரட்டுவது......சாருவின் காதலன் போல் இருக்க, திடுக்கிடும் சாரு......இப்படி திடர்ம் மர்மங்கள். இறுதியில் அவிழும் ரகசியங்கள், படியுங்கள்.
யோசனையில் இருக்கும் போது சிலர், கையில் இருக்கும் பென்சிலால் ஏதாவது கிறுக்கிப் போடுவர். பிரமனுக்கு அப்படி ஓர் ஓய்வு கிடைத்தது போலும் . தாரா...விபா வாழ்க்கை விதிகளை புரட்டி கிறுக்கி போட்டுவிட்டார். தாரா குடும்பம் இலங்கையை பூர்வீகமாக கொண்டு வாழும் தொழிலாள குடும்பம். சந்தோஷமான திருப்தி நிலவும். மனசுகள். கலவரம் ....போராட்டம் வெடிக்கிறது. அதில் சிதறிப் போகிறது குடும்பம் . தாரா...விபா அனாதை ஆகிறார்கள். அக்கா விபா வேலைக்காக ஊட்டி செல்கிறாள். தாரா அக்காவை தேடி ஊட்டி செல்கிறாள். அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி . கோணல் மாணலாகுறது அவர்களது வாழ்க்கை. தாராவை தொடருங்கள் மர்மம் விளங்கும் ....
அமானுஷ்யம் இன்னும் எல்லோராலும் உணர முடியாத ஒன்று. கிராமங்களில் காத்துக் கருப்பு, பேய் பிசாசு கதைகள் இந்த நூற்றாண்டிலும் உலவி வருகிறது. அப்படி உலவி வந்த ஓர் கதையை என் கற்பனையில் கொஞ்சம் விரிவாக்கி ஓர் சிறு நாவலாக இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளேன். இதில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவை என்பதுதான் இந்த நாவலின் ஹைலைட்.
Thriller Based Fiction Written By Thiruvarur Babu.
Thriller Based Fiction Written By Thiruvarur Babu.
Thriller Based Fiction Written By Thiruvarur Babu.
Thriller Based Fiction Written By Thiruvarur Babu.
Thriller Based Fiction Written By Thiruvarur Babu.
எனது கை வண்ணத்தில் வெளிவரும் இரண்டாவது கிரைம் நாவல் 'நேசத்தின் நிழல் கறுப்பு'... அடுத்தடுத்து வாழ வேண்டிய பருவத்தில் இளம் குருத்துக்கள் கொல்லப்படுகிறார்கள்... இதை செய்யும் கொலையாளி யார்...? எதற்காக இந்தக் கொலைகள்...? என்பதை நமது நாயகன் அஜய், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவுடன் இணைந்து விறுவிறுப்புடன் துப்பறிந்து கண்டு பிடிக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளைப் படித்து மகிழுங்கள்...
இது ஒரு கிரைம் நாவல்... அடுத்தடுத்து பிரபல பிரமுகர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்... அதற்குக் காரணம் என்ன...? அவர்களைக் கொல்லுவது யார்...? அநாமிகா யார்...?' நாயகன் அஜய் விறுவிறுப்புடன் துப்பறிந்து கண்டு பிடிக்கும் திகில் காட்சிகளைப் படித்து மகிழுங்கள்.
நகைச்சுவை இல்லாமல் வேறு ஒரு களத்தில் ஒரு நாவல் எழுதினால் என்ன என்று ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. யோசித்துக் கொண்டிருந்ததில் அக்மார்க் அமானுஷ்ய கதைக்கான கரு ஒன்று மனதில் தோன்றியது. இந்த கதையில் முக்கியமான பாத்திரம் சித்தர். அவர்தான் ஆட்டுவிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயங்களிலும் திகிலுடனும், பல மர்மங்களுடனும் உங்களுடன் பயணிக்க வருகிறது பச்சை மலை மர்மம்...
நான் எழுந்திருக்க முயன்ற அதேகணம், "அம்மாஆஆ ..." என்றொரு கூக்குரலுடன் ஓர் உருவம் என் மீது சாய்ந்தது. தாங்கிப் பிடித்தேன். கையில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்டியது. ரத்தமா? அந்த உருவத்தை மெல்ல படுக்க வைத்தேன். மெல்லக் கையை கீழே இறக்கிக் கொண்டுவர, கை எதிலோ இடித்தது. பிடித்து இழுத்தேன். அது ஒரு கத்தி என்பதை உடனே உணர முடிந்தது. கீழே போட்டுவிட்டு உடல் நடுங்க எழுந்து நின்றேன். பக்கத்து அறையில் அவள், இங்கே இவன்... நள்ளிரவில் இரண்டு படுகொலைகள்... இதற்கு ஐவிட்னஸ் 'ஐ'யே இல்லாத நான். கடவுளே... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சில செகண்டுகள் யோசித்தேன். "முட்டாள்... உடனே... உடனே இந்த இடத்தை விட்டு விலகு ஓடு..." என்றது மூளை.
பாலகணேஷ் 25 ஆண்டு காலம் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். பல்வேறு பத்திரிகைகளில் புத்தக வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து இப்போது எழுத்துத் துறையில் இருக்கிறார். 2010ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நகைச்சுவைக் கதைகள், மர்மக் கதைகள் இரண்டு துறைகளிலும் எழுதுவதில் விருப்பம் உள்ளவர். வரும் ஆண்டுகளில் நிறையப் புத்தகங்கள் எழுதி வெளியிடும் முனைப்புடன் உள்ளவர்.
வினோதமான கனவுகளால் துரத்தப்பட்டு, அந்தக் கனவுகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை அறிந்து கொள்ளத் துடிக்கிறான் ரூபேஷ். உண்மை பெரிய அதிர்ச்சியாக அவனைத் தாக்குகிறது. அவனுடைய சிறு வயதுத் தோழியான ரூபிணிக்கு நடந்த கொடுமைகள் தெரிய வருகின்றன. அகால மரணம் அடையும் ரூபிணியின் ஆவி, தனக்கு நடந்த அநீதிக்குத் தகுந்த தண்டனை வழங்கத் துடிக்கிறது. அந்த ஆத்மாவின் ஆசைகள் நிறைவேறினவா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு வடநாட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றிய உண்மைச் செய்திகளின் அடிப்படையில் எனது கற்பனையைக் கலந்து தந்திருக்கிறேன். பெண்களுக்கு உண்மையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்ல முயற்சி செய்ததால் என்னால் வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை.படித்துப் பாருங்கள்.
மதுரையில் புதிதாக வேலைக்குச் சேரும் அதர்வா, தன்னுடைய குடும்பத்திற்காக வீடு தேடி அலைகிறான். கொலைக் குடில் என்று அழைக்கப்படும் வீடு அவனுக்கு மனதிற்கும் பிடிக்கிறது. வீட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்குகிறான். வினோதமான அனுபவங்கள் அவனுக்கு ஏற்படுகின்றன. கொலைக் குடில் என்ற பெயர் எப்படி வந்தது, அந்த வீட்டிற்கும், அதர்வாவின் உயிர் நண்பன் வெங்கட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.
ஜெய்ப்பூரில் ஆரம்பித்து, தில்லி, மதுரை, செண்பகக் கோட்டை என்று பயணிக்கும் த்ரில்லர் கதை. சிறிதளவு அமானுஷ்யம், சிறிதளவு ஆன்மிகம், சிறிதளவு வரலாறு என்று அனைத்து அம்சங்களும் கலந்த விறுவிறுப்பான கதை. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்ட வஞ்சகர்கள் தங்கள் சதிச் செயல்களால் நல்லவர்களை வீழ்த்துவதையும், நீதி இறுதியில் நிலைநாட்டப் படுவதையும் எனது கற்பனையில் கலந்து நிறைய திருப்பங்களுடன் சுவாரஸ்யமான கதையாக வடித்திருக்கிறேன். செண்பகக் கோட்டை ஜமீனின் பழைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.