670 record(s) found
மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி. மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை. சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது. அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார். சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான சிறுகதைகள் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எழுதப்பட்டன. மேலும் பெரும்பாலான கதைகள் நமது நம்பிக்கை மாத பத்திரிகையில் வெளியானதை தொகுக்க பெற்ற நூல் கே.அசோகன்.
சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக் கலையிலும், சிற்பக் கலையிலும் தேர்ச்சி பெற்ற நர்த்தகியாக காட்டப்படும் அபிமானவல்லி எதிர்மறை பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது விறுவிறுப்பைக் கூட்டுகிறது. காஞ்சியில் மகுடாபிஷேகம் செய்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது என திடீர் திருப்பங்களுடன் அமைந்துள்ளது. ஆதித்த சோழன் மகன் கன்னர தேவன் ஆன்மிகத்தில் ஈடுபட்டது; நம்பி, குறளப்பர் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தது போன்ற நிகழ்வுடன் சுவாரசியம் தரும் நுால்.
சோனாசலம் தன் இரண்டாவது பெண் ஹேமாவிற்கு அவள் காதலிக்கும் ஜனாவையே கல்யாணம் செய்து வைக்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் துப்பறியும் புலியான பெரிய மாப்பிள்ளை டாக் நரசிம்மன் ஜனாவைப்பற்றி அவதூறாகக் கூறி அவனையும் ஹேமாவையும் பிரிக்க நினைக்கிறார். முதலிரவை தடுத்து நிறுத்துகிறார். தன் மேல் அபாண்டமாக பழி சுமத்தி பெரிய மாப்பிள்ளையை படாதபாடு படுத்த ஹைதராபாத் செல்கிறான் ஜனா. அவர் வீட்டிலேயே செந்தமிழ் பேசத் தெரிந்த சமையல்காரனாக வேலைக்கு சேருகிறான். நிஷா என்ற பெண்ணை கடத்தியதில் பெரிய மாப்பிள்ளை மாட்டிக் கொண்டு விட, ஜனா அவரை பிளாக்மெயில் செய்கிறான். P.M. (பெரிய மாப்பிள்ளை) யை தன் வாயாலேயே C.M. (சின்ன மாப்பிள்ளை) நல்லவர் என்று கூற வைக்கிறான்.
கதை படிப்பது என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. பறவைகள், விலங்குகளை வைத்து கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்த கதை கற்பிக்கும் நீதியை கேட்டு மகிழுங்கள்.
நகைச்சுவை எழுத்து என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும், யாரையும் கேலியும், கிண்டலும் செய்யாமல், மனம் நோகடிக்காமல் எழுதுவது என்பது ஒரு கலை. 'வெறும் துணுக்குத் தோரணமல்ல. ஒரு சிறிய முடிச்சு, அதைச்சுற்றிய இயல்பான நகைச்சுவை, ஒரு எதிர்பாராதமுடிவு எல்லாம் சேர்ந்திருந்தால்தான் அந்த எழுத்துக்கு சுவைகூடும்.' அந்தச் சுவையை, நாமும் வாசித்து தெரிந்து கெள்வோம் வாருங்கள்...!.
சிறுதலைப்பின்கீழ் அறியவேண்டிய, ஆச்சரியப்படக்கூடிய, நகைச்சுவைப்படக்கூடிய, கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்களை நமக்கு அனைத்து காய்கறிகளுடன் கூடிய அவியல் போல, எழுத்துவடிவியலான ஓர் அவியலை நாமும் வாசிப்போம் கோவை அனுராதாவின் பாணியில்...
"வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்" இது ரொம்பப் பழைய மொழி... "இருக்கற வீட்டுல ரெனவேஷன் வேலை பண்ணிப் பார்... உன் தாவு தீர்ந்துரும் பார்" இது தான் புது மொழி... வீட்டுல சமையலறைய ரெனவேஷன் பண்றதுகுள்ள நான் பட்ட பாடு இருக்கே... எப்படி அல்லோலப் பட்டேன்னு தெரிஞ்சுக்கணுமா? இந்தக் கதையை... உகும் என் அனுபவத்தைப் படிங்க... சிரிச்சுக்கிட்டே புரிஞ்சுப்பீங்க...
இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. கதைகளுக்கும் எதார்த்ததுக்கும் தூரம் அதிகம்!! கதைகளின் நிகழ்வுகள் கடைசியில் எப்படி முடியும் என்று நகைச்சுவையாக சொல்லப்பட்ட கதை. கணக்கிலடங்கா சொத்துக்களுக்கு உரிமையாளனான நாயகன் ஒரு சாதாரணப் பெண்ணை மனைவியாக்கிக் கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறேன். படிங்க! வயிறு குலுங்க சிரிங்க!.
பெற்றோர் என்றால் ஈசன் தருவதை பெற்றுக் கொண்டவர்கள் என்று பொருள். பெற்றோருக்கு ஈசனால் அருளப்பட்ட குழந்தைகளை, ஆசைகளின் அடைமொழியாகவே இன்று பெற்றோர்கள் உணர்வது வருந்தத்தக்கது. சின்ன வயதிலேயே அவர்கள் கேட்கும் கேள்விகளை மதித்தும் சிந்தித்தும் பதில் தரும் பெற்றோர்களே கைவிளக்காகின்றனர். அது எப்படிப்பட்ட சின்னஞ்சிறிய கேள்வியென்றாலும் பெற்றோர்கள் அதற்கு விடை தேட வேண்டும். "சோப்புக்குமிழி ஏன் வெடிக்குது?", "ஆகாயம் ஏன் விழலை?", "சாருவுக்கு தாத்தா சொன்ன குட்டி குட்டிக்கதைகள்" சில குணங்களை குழந்தைகளிடம் சேர்க்க விரும்பி எழுதப்பட்டதே இந்நூல்.
சிறுபிள்ளைகளுக்கு சின்னச் சின்ன கதைகள் பிடிக்கும் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் கதைகள் வாயிலாக நன்னெறிகளை புகுத்தும்போது அவர்களின் வாழ்க்கை சீர்படுகிறது. எதிர்கால சமூகம் செழுமை காணும் ஆகவே அவர்கள் மனம் விரும்பும்படி குறிப்பாக பள்ளிப் பிள்ளைகளுக்காக அவர்களின் நலனின் அக்கறை கொண்டு எழுதப்பட்ட இச்சிறு நூல் நிச்சயம் படிப்போருக்கு பயன் தரும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்கிறேன்.
இச்சிறுகதையில் இடம் பெற்றுள்ள அக்பர் சக்கரவர்த்தி கலைகளிலும், விடுகதைகள், புதிர்கள் போடுவதிலும் கெட்டிக்காரர். நகைச்சுவை ததும்ப பேசுவதில் வல்லவர். அவரது அமைச்சரவையில் பீர்பால் என்ற அமைச்சர், இருந்தார். அவர் அரசருக்கு ஈடு கொடுத்து புதிர்களையும், வழக்குகளுக்கான தீர்வுகளையும் வழங்குவதில் கை தேர்ந்தவராகவும் திகழ்வதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
ஆதிரையன் என்ற ஒரு சிறுவன். நாகரிக உலகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும் நல்லவனாக இருக்கிறான். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவன் தாத்தா, அவனுக்கு நல்ல சிந்தனைகளைப் போதிக்கிறார். காளியப்பன் என்ற சமூகவிரோதியோடு போராட சக்தியில்லாமல் துவண்டுகிடந்த தன் மலைக்கிராமத்தை அவன் விவேகமான, சாதுரியமான நடவடிக்கைகளினால் எவ்வாறு காப்பாற்றுகிறான் என வாசிப்போம்.
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த இரண்டு இளவரசர்கள் பற்றிய சிறுவர் கதை இது. பிறப்பால் வினோதத் தோற்றங்களுடன் பிறக்கும் இரண்டு இளவரசர்கள் சளைக்காமல் போராடி வாழ்க்கையில் ஜெயிக்கும் கதை. கல்வி, மாயாஜாலம், போர்த்திறன் அனைத்தையும் குருகுலத்தில் கற்ற பிறகு அனுபவ அறிவைப் பெற அற்புதங்கள் நிறைய மாயவனத்தில் புகுந்து சாகசங்கள் செய்கிறார்கள் இளவரசர்கள். பூக்களின் உலகு, காய், கனிகளின் உலகு, பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இவற்றின் உலகங்களையும் பற்றி, இந்தக் கதையில் இளவரசர்களுடன் சேர்ந்து நாமும் தெரிந்து கொள்ளலாம். மாயாஜாலங்கள் நிறைந்த ஃபேண்டஸி ஸ்டோரியான இந்தக் கதையைப் படித்து இரசியுங்கள்.
சிறுவர், சிறுமிகளை வெகுவாகக் கவர்ந்த விடுகதைகளின் தொகுப்பே இந்நூல். பழமொழிகளை நினைவூட்டிக் கொள்ளல், திருக்குறள், இலக்கியம், பழமொழிகள், அறிவியல், தேசியம், பொது அறிவு தொடர்பான விளையாட்டுகள் எல்லாம் உண்டு. வீட்டிற்குள்ளேயே நண்பர்களோடு விளையாடி மதிப்பெண்கள் போட்டுக்கொள்ளலாம். மூளைக்குச் சுறுசுறுப்புணர்வை ஊட்டும் நூல். தமிழோடு விளையாடி மகிழ்ச்சி பெறுங்கள்!.
குழந்தைகள் என்றாலே ஆனந்தம். பாடல்கள் என்றாலும் அவர்களுக்கு ஆனந்தம் அதீதக் கற்பனைகள் என்றால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம். உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தெரிந்த ஒரு ஆங்கிலப் பாடலின் முக்கியக் கதாப்பாத்திரம் இந்த முட்டை மொட்டை. மொட்டை முட்டைக் கதாப்பாத்திரம்1797-களில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஒரு விடுகதையாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இக்கதாப்பாத்திரம் 1870 in James William Elliot என்பவர் National Nursery Rhymes and Nursery Songs என்ற நூல் மூலம் பிரபலமடைந்தது என்றும் Alice's Adventures in Wonderland சிறுவர் கதையின் தொடர்ச்சியாக வந்த Through the Looking-Glass and What Alice Found என்ற கதையில் ஒரு கதாப்பாத்திரமாகவும் இந்த முட்டை மொட்டை வருகின்றார் என்றும் Thereamericansongwriter.com என்ற இணைய தளம் குறிப்பிடுகிறது.
வண்ணத்துப் பூச்சி கவிதை நூல் குழந்தைகளுக்கான கவிதைகளாக வெளிவந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். சில கவிதைகள் குழந்தைகள் கூறுவது போலவும், சில கவிதைகள் குழந்தைகளின் மனநிலையை பிரதிபலிப்பது போலவும் அமைந்துள்ளன. பெரியவர்கள் படிக்கும்போது அவர்களின் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்வது உறுதி. இந்த வண்ணத்துப் பூச்சி உங்கள் கரங்களில் மகிழ்ச்சியாக அமரும் என எதிர்பார்க்கின்றேன். கவிஞர். த. நிர்மலாதேவி.
சிறுவர் இலக்கிய வரிசையில் நான் நிறைய சிறுகதைகள் எழுதி இருப்பினும் நாவல் எழுதியதில்லை. சங்கப் பலகை முகநூல் குழுமத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு எது வரைந்தாலும் கிடைக்கும் மந்திரப் பென்சில் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்தான் என்பதுதான் கதை. சங்கப்பலகை குழுமத்தால் சிறப்பு பரிசுக்கு இந்த நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது கூடுதல் மகிழ்ச்சி. பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமார் சாரும் இந்த தொடர் சங்கப்பலகையில் வருகையில் வாசித்து கருத்திட்டது எனக்கு பெருமிதம்.
இந்த நாடகத்தில் வரும் கதிரவன் நேர்மைக்கும், சத்தியத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறான். தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட நற்குணங்களை கடைசி வரை விடாது. உண்மைகாகப் போராடி வெற்றியடைந்தானா? இல்லையா? தன் மன ஒளியால், இருண்டு கிடக்கும் நெஞ்சங்களில் ஒளியேற்றப்பட்டதா? படிக்கும் சிற்றர்களின் நெஞ்சங்களில் 'சத்திய தீபம்' ஏற்ற உதவுமா? என்பதை, வி.ர. வசந்தனின் 'மங்காத தங்கம்' நாடகக் கதையின் வாயிலாக காணலாம்...!.
கொரோனா பெருந்தொற்றின் விளைவால் ஏற்பட்ட ஊரடங்கு காலம் பெரியவர்களைவிட குழந்தைகளைப் பல மடங்கு அதிகமாகவே பாதிப்புக்குள்ளாக்கியது. ஓடி ஆடித் திரிய வேண்டிய குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் அவல நிலையை இந்த உலகம் கண்டது. பச்சைப் பசுங்கிளிகளாய் பறந்து திரிந்த பச்சிளம் பிள்ளைகள், லாக்டௌன் காலத்தில் சிரிப்பை மறந்து, மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். எதிர்பாராத சம்பவங்கள் மனித வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம். ஆனால், மனிதன் ஒரு போதும் தன்னம்பிக்கையைஇழக்கக்கூடாது; மனிதத்தை இழக்கக்கூடாது. நெருக்கடியான காலத்திலும் தலை நிமிர்ந்து வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நம்மை மேம்படுத்திக் கொள்வதுடன், நாம் சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும். கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள் வருங்காலத்தில் எத்தனை வந்தாலும், வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில், தன்னம்பிக்கையுடன் வாழ நம் குழந்தைகளுக்குப் பழக்குவோம் என்பதை இந்தக் கதைகளின் மூலம் எடுத்துரைக்கிறார் ஜி. மீனாட்சி.