127 record(s) found
சோனாசலம் தன் இரண்டாவது பெண் ஹேமாவிற்கு அவள் காதலிக்கும் ஜனாவையே கல்யாணம் செய்து வைக்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் துப்பறியும் புலியான பெரிய மாப்பிள்ளை டாக் நரசிம்மன் ஜனாவைப்பற்றி அவதூறாகக் கூறி அவனையும் ஹேமாவையும் பிரிக்க நினைக்கிறார். முதலிரவை தடுத்து நிறுத்துகிறார். தன் மேல் அபாண்டமாக பழி சுமத்தி பெரிய மாப்பிள்ளையை படாதபாடு படுத்த ஹைதராபாத் செல்கிறான் ஜனா. அவர் வீட்டிலேயே செந்தமிழ் பேசத் தெரிந்த சமையல்காரனாக வேலைக்கு சேருகிறான். நிஷா என்ற பெண்ணை கடத்தியதில் பெரிய மாப்பிள்ளை மாட்டிக் கொண்டு விட, ஜனா அவரை பிளாக்மெயில் செய்கிறான். P.M. (பெரிய மாப்பிள்ளை) யை தன் வாயாலேயே C.M. (சின்ன மாப்பிள்ளை) நல்லவர் என்று கூற வைக்கிறான்.
நம் குடும்பம் - ஒலிப்புத்தகம்1. நம் குடும்பம் ஹீரோ2. நம் குடும்பம் பெட்ரோல்3. நம் குடும்பம் - உறவுமுறை சொத்து.
இந்நாடகத்தில் ஐந்து வித்தியாசமான, கதைகள் உள்ளன. ஐந்து நாடகமும் வெவ்வேறு கருத்துக்களையும், நகைச்சுவையும் உள்ளடங்கியது இந்த ஒன்றில் ஐந்து நாடகம்.
முழுநீள நகைச்சுவைத் தொடர்கதை ஒன்று எழுத வேண்டுமென்ற ஆசை வெகு காலமாக என் உள்ளத்தில் இருந்து வந்தது. 'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?'. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. நம்முடைய கல்யாணமே அமெரிக்காவில் நடப்பதாக கற்பனை செய்தபோது அதில் பல வேடிக்கைகளுக்கும், 'தமாஷ்'களுக்கும் இடமிருப்பதாக ஊகிக்க முடிந்தது. அந்த கற்பனையே இந்த நாவலாகும். ஆனந்த விகடன் வார இதழில் 1963-ல் எழுத்தாளர் யாரென்று குறிப்பிடாமல், அத்தியாய எண் இல்லாமல் பதினோரு வாரங்கள் இடம்பெற்ற நகைச்சுவைத் தொடர்கதை 'வாஷிங்டனில் திருமணம்!' தொடரின் கடைசி அத்தியாயம் வெளியானபோதுதான் அந்தத் தொடரை எழுதியவர் 'சாவி' என்பது வாசகர்களுக்குத் தெரிந்தது! அந்த இதழிலும் கூட 'சுபம்' என்று தொடரை முடித்த பிறகு ஒரு கையெழுத்து போல்தான் அவரது பெயர் இடம் பெற்றது. அப்போது அவர் ஆனந்த விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த கதை பிறந்த விதம் குறித்து, பின்னர் வெளியான 'வாஷிங்டனில் திருமணம்' புத்தகத்தின் முன்னுரையில் அமரர் சாவி தெளிவாகவே விவரித்திருக்கிறார். இந்த நகைச்சுவைக் கதைக்கு அவர் தேர்ந்தெடுத்த விஷயமும் அது நடைபெறுவதற்கு அவர் தேர்ந்தெடுத்த களமுமே சட்டென்று சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. சாதாரணமாகக் கல்யாணங்களில் எதுவெல்லாம் யதேச்சையாக நடைபெறுமோ, அவற்றையெல்லாம் நகைச்சுவைக்கான இழையாகப் பின்னியெடுத்து, அதை வரிசைப்படுத்தி அழகாகக் கதையை நகர்த்திச் செல்கிறார் சாவி. நமது பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு நேர்மாறான மற்றொரு நாட்டில், நமது பண்பாட்டுக்குச் சேதாரம் ஏற்படாத வகையில் கற்பனை விரைவாகப் பயணிக்கிறது. இந்தக் களத்தில் அவர் அடிப்பதெல்லாம் சிரிப்பு 'சிக்ஸர்'கள்தான். பெரும்பாலும் நமது கல்யாணங்களின் போது, இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அந்த நேரத்திய பரபரப்பில் நமது பி.பி, எகிறினாலும் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது அவையெல்லாம் நகைச்சுவைக்கு உரியதாகிவிடும். அந்த அடிப்படைதான் இந்த நகைச்சுவைக் கதையின் அஸ்திவாரம்.
வண்ணக் கோலங்கள் - ஒலிப்புத்தகம்1. வண்ணக் கோலங்கள்2. மாடு வாங்குதல்3. மாமா திருடன் ஆள்மாறாட்டம்4. ஹிந்தி டியூசன்.
நகைச்சுவை எழுத்து என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும், யாரையும் கேலியும், கிண்டலும் செய்யாமல், மனம் நோகடிக்காமல் எழுதுவது என்பது ஒரு கலை. 'வெறும் துணுக்குத் தோரணமல்ல. ஒரு சிறிய முடிச்சு, அதைச்சுற்றிய இயல்பான நகைச்சுவை, ஒரு எதிர்பாராதமுடிவு எல்லாம் சேர்ந்திருந்தால்தான் அந்த எழுத்துக்கு சுவைகூடும்.' அந்தச் சுவையை, நாமும் வாசித்து தெரிந்து கெள்வோம் வாருங்கள்...!.
சிறுதலைப்பின்கீழ் அறியவேண்டிய, ஆச்சரியப்படக்கூடிய, நகைச்சுவைப்படக்கூடிய, கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்களை நமக்கு அனைத்து காய்கறிகளுடன் கூடிய அவியல் போல, எழுத்துவடிவியலான ஓர் அவியலை நாமும் வாசிப்போம் கோவை அனுராதாவின் பாணியில்...
"வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்" இது ரொம்பப் பழைய மொழி... "இருக்கற வீட்டுல ரெனவேஷன் வேலை பண்ணிப் பார்... உன் தாவு தீர்ந்துரும் பார்" இது தான் புது மொழி... வீட்டுல சமையலறைய ரெனவேஷன் பண்றதுகுள்ள நான் பட்ட பாடு இருக்கே... எப்படி அல்லோலப் பட்டேன்னு தெரிஞ்சுக்கணுமா? இந்தக் கதையை... உகும் என் அனுபவத்தைப் படிங்க... சிரிச்சுக்கிட்டே புரிஞ்சுப்பீங்க...
பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும், சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும், பகடியும், நகைச்சுவையும், கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை. பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் வந்துவிடாது. கற்றுத்தரும் முறைகளில் மாற்றம் தேவை. அதற்கு எளிய வழி கதை சொல்வதே. கதை, ஒரு மொழியின் கட்டமைப்பையும், அதன் வளத்தையும் உங்களுக்குச் சொல்லித் தரும்.
இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. கதைகளுக்கும் எதார்த்ததுக்கும் தூரம் அதிகம்!! கதைகளின் நிகழ்வுகள் கடைசியில் எப்படி முடியும் என்று நகைச்சுவையாக சொல்லப்பட்ட கதை. கணக்கிலடங்கா சொத்துக்களுக்கு உரிமையாளனான நாயகன் ஒரு சாதாரணப் பெண்ணை மனைவியாக்கிக் கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறேன். படிங்க! வயிறு குலுங்க சிரிங்க!.
இலக்கிய சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை. இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும். அப்படிப்பட்ட ஆற்றல் நம் நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகருக்கு உண்டு. இவர் பொதுவான கேள்விகளுக்கு தன் நகைச்சுவை மூலம் மிகவும் எதார்த்தமாக கூறிய பல பதில்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளதா? இல்லையா? எஸ். வி. சேகரின் பதில்கள் சிரிப்புடன்...
உயர்ந்த கருத்துடன் சிரித்து, சிந்திக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்நூல். இதில் சுந்தரி என்பவள் யார்? இவள் செல் சுந்தரியாக மாறியது எப்படி என்பதை வாசித்து அறிலாம்...
'பாச்சாயணம்'ன்னு ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சுட்டு நீங்க வாழ்த்துரை தரணும்னு எஸ்.எல்.நாணு கேட்டுக் கொண்டதுமே மனசுல ஓடின விஷயம், குடும்பங்களை வெச்சுக் கதை எழுதறதை விட்டுட்டு பாச்சா, பல்லியையெல்லாம் வெச்சுக் கதை எழுத ஆரம்பிச்சுட்டாரா இந்த மனுஷன்...? என்பதுதான். கிருஷ்ணசாமியை கிச்சான்னு கூப்டற மாதிரி பார்த்தசாரதியை பாச்சான்னு கூப்டுவாங்கன்னு கதையைப் படிச்சப்பறம்தான் புரிஞ்சது. குண்டலகேசி, மண்டோதரிங்கற மாதிரி பேர்களை ஏன் யாருக்கும் வெக்கறதில்லைங்கறதும் புரிஞ்சது. ஒரு முழு நாவலையும் புன்னகை விலகாத உதடுகளோடு படிக்க வைக்கறதுங்கறது ஒரு அரிய கலை. எஸ்.எல். நாணு அதில் பிஎச்டியே செஞ்சிருக்கார்.
கண்சுவின் அன்றாட அக்கப்போர்கள். கண்சு என்ற கணேசன் நிஜத்தில் என் அண்ணன். சிரிக்க சிரிக்க பேசுவான். முதலில் விளையாட்டாய் அவன் பேசுவதை வைத்து எழுத ஆரம்பித்து பின் நகைச்சுவையாக அவனை வைத்து கற்பனையிலும் கதைகள் தெறித்து விழுந்தன. இதில் எது கற்பனை எது நிஜம் என்பது எனக்கும் என் அண்ணன் கணேசனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். கதைகள் படிக்கும்போது உங்களுக்கு சிரிப்பு வந்தால் அதை எனக்கு தெரிவிக்க மறக்காதீர்கள். அடுத்த பகுதி எழுத உந்து சக்தியாக உங்கள் விமர்சனம் நிச்சயம் இருக்கும். அநேக பிரிய்ங்களுடன், லலிதா சங்கர்.
அந்த அன்பு சகோதரர் கிரேஸி மோகன் அவர்களுக்கு, என்னுடைய சிரந்தாழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்துமுகமாகவே அவருடைய பாணியில் இந்த நாடகத்தை எழுதியிருக்கிறேன். கிரேஸியும் கிரேஸி படைத்த மாதுவும் இவ்வுலகிற்கு அளித்திருக்கும் சிரிப்பு என்ற கொடை அனந்தம். அதற்கு என்னுடைய நன்றியின் சிறிய வெளிப்பாடே இந்நாடகம்.
லிங்கேஸ்வரன் என்பவன் புரோக்கராக செயல்படுபவர். இவர் சிவராமன் என்பவருக்கு சிங்காரியை மணமுடிக்க ஏற்பாடு செய்கிறான். இதில் சிங்காரியை சிவராமன் பணத்திற்காக திருமணம் செய்கிறான். இதற்கிடையில் கிருஷ்ணன் என்பவன் யார்? சிங்காரி மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு என்ன உறவு? வாசித்து அறிவோம்.
டாக்டர் லஷ்மி நாராயணன் மற்றும் அப்ஸராவிற்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. இதற்கிடையில் இருவரும் அடிக்கடி பீச்சில் சந்திக்கும் வழக்கம் உண்டு. இதன் விளைவே முரளி. கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும், பையனும் இப்படித்தான் இருக்கனும்னு ஒரு வரைமுறைய பெரியவங்க ஒரு காரணமாகத்தான் வைக்கிறாங்க. அதையும் மீறி நாங்க மாடர்ன் அப்படி இப்படின்னு கண்டபடி வெளியில சுத்தினா இந்த மாதிரி தேவையில்லாத குழப்பந்தான் வரும்... இவர்கள் திருமணத்தில் நடந்த குழப்பம் என்ன? இருவருக்கும் திருமணம் நடந்ததா? இக்குழப்பத்திற்கு முக்கிய காரணம் யார்? நாமும் குழப்பங்களை தீர்க்கும் நகைச்சுவை நடையில்...
காட்பாடி கனகசுந்தரத்தின் ஒரே மகனான தம்பி ராஜா என்கிற தம்பி சென்னையில் தனது தந்தையின்காலனியில் வரும் வாடகை பணத்தைக் கொண்டுவாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு தரகரின் மூலமாகஅண்ணாசாமியின் மகள் பாப்பாவை பெண் பார்க்கிறான். ஒரு தடவையாவது ஜெயிலுக்கு சென்றுவந்தரைத்தான் திருமணம் செய்வேன் என ஒரு நிபந்தனையை பாப்பா கூற, வேலையில்லாமல் போலீஸ்வேடம் தரித்து உலா வரும் ஒரு நாடக நடிகன் மற்றும் கைதி எண்ணாயிரத்தின் மனைவி நளாயினி,மகன் கஜா மற்றும் மகள் பிக்பாக்கெட் பிரமிளா இவர்களை பயன்படுத்தி திருமணம் முடிக்கும் வேளையில்நிஜ அப்பா வர குழப்பமான சூழ்நிலை உருவாகிறது. இறுதியில் ராஜா அனைத்துப் பிரச்சனைகளையும்சமாளித்து பாப்பாவை திருமணம் புரிகிறான்.
குடித்தனக்காரர்களிடம் தேவையில்லாத பத்து கட்டளைகள் போட்டு கொடுமைப்படுத்தும் ஆதிகேசவனின் வீட்டிற்கு 100வது ஆளாக அடமண்ட் ஐயாசாமி என்பவரை அழைத்து வருகிறான் அவரது மகன் பத்து. ஐயாசாமி மற்றும் ரத்த சாமுண்டேஸ்வரி அங்களாம்மாவின் பக்தையான அவர் மனைவி ஆகியவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஆதிகேசவன் அந்த வீட்டை விற்று விடுகிறான். ஐயாசாமியே அந்தவீட்டுக்காரராக மாறும் நிலை ஏற்பட தன் வீட்டிலேயே மீண்டும் 10 கட்டளைக்கு உட்பட்டு வாடகைக்கு குடியேறுகிறார் ஆதிகேசவன்.
இன்று நாடக உலகிலும் திரைப்பட உலகிலும் தனக்கென ஒரு பாணியைக் கடைப்பிடித்து தன்னிகரில்லாதவராய் விளங்கி வருபவர் திரு. எஸ்.வி. சேகர் அவர்கள். நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் நம்மை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தார். அவர் வழியில் இன்று எஸ்.வி. சேகர் அவர்களும் சிந்தனையைத் தூண்டும் சிரிப்பைத் தருகிறார்.நீங்கள் காரிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்ய நேரிட்டால், மறக்காமல் சேகரின் புத்தகங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். பயணக் களைப்பே தெரியாது; பொழுது போவதே தெரியாது. சிரித்துக் கொண்டே இருப்பீர்கள்.