127 record(s) found
ஒன்றாக பணி புரியும் இரு நண்பர்களின் உரையாடலை வாசிக்கலாம் வாருங்கள் பாஸ் Just Time Pass.
சிறுதலைப்பின்கீழ் அறியவேண்டிய, ஆச்சரியப்படக்கூடிய, நகைச்சுவைப்படக்கூடிய, கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்களை நமக்கு அனைத்து காய்கறிகளுடன் கூடிய அவியல் போல, எழுத்துவடிவியலான ஓர் அவியலை நாமும் வாசிப்போம் கோவை அனுராதாவின் பாணியில்...
உயர்ந்த கருத்துடன் சிரித்து, சிந்திக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்நூல். இதில் சுந்தரி என்பவள் யார்? இவள் செல் சுந்தரியாக மாறியது எப்படி என்பதை வாசித்து அறிலாம்...
வாழ்க்கையில் துன்பத்தில் உழல்பவர்கள், சோகமான நாட்களைக் கழிப்பார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும், 'டானிக்'காக இந்தச் சிரிப்பு நாடகங்களை அளித்து மகிழ்கிறோம். படிக்கும் போதே சிரிக்கச் செய்யும் நாடகங்களை நீங்களும் படியுங்கள். வாழ்க்கை இன்பமயமானது. சிரித்துக்கொண்டேயிருந்தால் நோய்களும் அணுகாது. அதனால் இந்நாடகங்களைப் படியுங்கள்-சிரித்து மகிழுங்கள்! சிந்தித்து, மறுபடியும் சிரியுங்கள்!.
பொதுநலம் பொன்னுசாமி' என்னும் இந்த நாவல் தலைப்பில் வரும் 'பொன்னுசாமி' என்பவர்தான் கதையின் நாயகன். பொதுநல விரும்பியான இவர் நல்லது செய்யப்போய் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சிரிக்க சிரிக்க சொல்லிருக்கிறார் நாவலாசிரியர் கோவை அனுராதா அவர்கள். தனது மனைவியை கிண்டல்செய்வதும், எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களில் இருந்து வெளிவர யோசித்து செயல்படுத்துவதிலும் பொன்னுசாமியின் அறிவுத்திறன் படிப்பர்களுக்கு சிரிக்கவும், சுவாரசியம் ஏற்படுத்துவதற்கும் நாவல் முழுக்க பல விஷயங்கள் நிறைந்திருக்கிறது. எனவே, படிக்க ஆரம்பித்தால் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டுமா அப்படியானால் நிச்சயம் 'பொதுநலம் பொன்னுசாமி'யை படியுங்கள்.
இந்நாடக நூலில் 'இரண்டாயித்து ஐம்பதில் கல்யாணம்' என்ற நாடகம் வரதட்சணை இல்லாத தலை தீபாவளியாக முடிகிறது. நாடகத்தின் நாயகி வருங்காலத் தலைமுறைக்குக் கூறும் அறிவுரை வரதட்சணையை ஒழிக்கும் என நம்புவோம். 'உண்மைக்கு ஒரு கல்யாணம்' என்ற நாடகத்தில் சத்தியமூர்த்தியின் நேர்மை சாந்தியைத் தன் வீட்டு மருமகளாக்குகிறது. சத்தியமூர்த்தியின் மகன் இளங்கோ இந்தக்கால இளைஞனாகவே காணப்படுகிறான். முதிய சமுதாயத்துக்கும் இளைய சமுதாயத்துக்கும் உள்ள தலைமுறை இடைவெளி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப்படி எட்டு நாடகங்கள் எதிர்காலச் சமுதாயத்தை வாழ வைக்க; வளர வைக்க பெருமைமிகு கோவைஅனுராதா அவர்களால் படைக்கப்பட்டுள்ளன. இளைய பாரதம் வாழ அவர் படைத்த நாடகக் கனிகளைச் சுவைத்து மகிழ்வீர்!.
இந்த நாடகத்தை நீங்க படிக்கிறதுக்கு முன்னால் சில வரிகள்... என் மனசுல படறதை உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைப்படறேன். அண்ணைக்கும் சரி... இன்னைக்கும் சரி... மக்கள் மத்தியில நாடக இலக்கியத்துக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. இருபது வருஷமா நாடகம் போட்டுட்டு இருக்கிற நான் இதை அனுபவத்துல பாக்கறேன். ஒரு தயாரிப்பாளரா, எழுத்தாளரா, நடிகரா, இயக்குநரா நான் பல வேலைகள் செய்யறதால கஷ்டங்கள் நிறைய இருந்தாலும், நாம போடற நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து இரசிகர்கள் சிரிக்கும்போது அந்த கஷ்டங்களெல்லாம் பறந்து போகுது. ஒரு தரம் பவுடர் பூசி நடிச்ச எந்த ஒரு நடிகனும், அந்த ஆசையை வாழ்க்கையில் மறக்கறது கஷ்டம். பிரசவ வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்னு சொல்ற மாதிரி நாடக வைராக்கியத்தைக்கூட சொல்லலாம். சே... நாய் படாதபாடு படறோம்... இனிமே நாடகத்துக்கு போகக்கூடாதுண்ணு நினைப்போம். ஆனா யாராவது மேடையில் நடிக்கிறதை பார்த்தா உடனே நாமும் பவுடர் போடணும்னு ஆசை வந்துரும். மற்ற எழுத்தாளர்கள் தன்னோட படைப்பு ஜனங்க மத்தியில எப்படி எடுபடுதுன்னு தெரிய கொஞ்சம் காத்திருக்கணும். ஆனா நாடக எழுத்தாளனுக்கு அப்பவே ரிசல்ட் தெரிஞ்சுரும். அதுவும் நகைச்சுவை நாடகம் போடறவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா சோக நாடகம், சீர்திருத்த கருத்துக்களைச் சொல்ற நாடகங்களைப் போடற போது பாக்கற ஜனங்க போசாமத்தான் உட்கார்ந்திருப்பாங்க. சில இடத்துல கை தட்டலாம். கை தட்டாமலும் ரசிக்கலாம். ஆனா நகைச்சுவை நாடகம்னு சொல்லிட்டு போட்டா, அது உண்மையாகவே நகைச்சுவையா இருந்தா யாரும் சிரிக்காம இருக்க முடியாது. அதனால எங்க பாணியில ரிஸ்க் அதிகம். வெறும் நகைச்சுவையோடு நிற்காம கொஞ்சம் சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகளும் இருந்தா அதுக்கு ஒரு தனி மதிப்புதான். அப்படித்தான் என்னோட நாடகங்கள் இருக்கிறதா பார்த்தவங்க சொன்னாங்க. ஆனா... என்னைப் பொறுத்தவரைக்கும் என் எழுத்துக்கள் மேல இன்னும் முழு திருப்தி கிடைச்சதில்லே... ஒவ்வொரு நாடகம் எழுதும் போதும் இன்னும் நல்லா எழுதணும்னுதான் நினைப்பேன். பார்த்தவங்க பாராட்டும் போதுதான் நான் ஒரு எழுத்தாளன்ங்கிற நினைப்பே வரும். எத்தனையோ நாடகங்கள் நேர்மையைப் பற்றியும், ஊழல் இல்லாத வாழ்க்கையோட அவசியத்தைப் பற்றியும் வந்துகிட்டு இருக்கு. படிக்கிறதுக்கும், பாக்கறதுக்கும் நல்லா இருக்கே தவிர, அவைகளை நாம கடைபிடிக்கிறமாங்கறது சந்தேகம்தான்.... அப்படிக் கடைபிடிச்சிருந்தா நம்ம நாடு இன்னும் எவ்வளவோ முன்னேறியிருக்கும். அதனால் ஒரு நாடகம் மக்களைத் திருத்தும், அல்லது கெடுக்கும் அப்படிங்கிறதை என்னால ஒத்துக்க முடியலே... ஒண்ணு செய்யலாம்... மனசு விட்டு சிரிக்க வைக்கலாம். சிரிச்சா இரத்த ஓட்டத்துக்கு நல்லதுன்னு விஞ்ஞானப்பூர்வமா / நிரூபிச்சிருக்காங்க... அதுனால் நகைச்சுவை நாடகங்கள் உடல் நலத்திற்கு நல்லதுங்கற முடிவுல நாம அதை ஏத்துக்கலாம். இப்பவெல்லாம் மேடையில் சீரியசான நாடகங்களே குறைஞ்சு போச்சு. லைட்டா ஒரு கருவை எடுத்துட்டு, மக்களைச் சிரிக்க வைக்கத்தான் எல்லாருமே விரும்பறாங்க. எவ்வளவோ பிரச்சினைகளை வாழ்க்கையில் அனுபவிக்கிற ஜனங்களும், மனம் விட்டுச் சிரிச்சிட்டுப் போகத்தான் வறாங்க. அவங்களுக்குத் தெரியாத எந்தக் கருத்தையும் நாம சொல்லிட முடியாதுங்கறதுதான் என்னோட முடிவு. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை ஆகிய மூன்று வழிகளிலும் வெளியான பத்து நாடகங்கள் இந்தப் புத்தகத்துல வந்திருக்கு. இவைகளை நீங்க படிச்சி மகிழலாம்... மேடையில நடிச்சும் மத்தவங்களை மகிழ்விக்கலாம். நல்லிதயம் படைத்த தமிழ் வாசகர்களிடையே என் முதல் நூலை நம்பிக்கையுடன் படைக்கிறேன். வளரும் இந்த நாடக எழுத்தாளனை ஊக்குவித்து, வாழ்த்துங்கள் என வேண்டுகிறேன்.
இருபத்தைந்து சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் சுருக்கமாகவும் கருத்தாழம் மிக்கதாகவும் நகைச்சுவை உணர்வை தூண்டும் விதத்திலும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கவலையும், சலிப்பும் மிகுந்த வாழ்க்கை வாழும் இன்றைய மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐய்யமில்லை. எனவே அனைவரும் இந்நூலினைப் படித்து மகிழ்ந்திட வாழ்த்துகிறோம்.
பாலகணேஷ் 25 ஆண்டு காலம் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். பல்வேறு பத்திரிகைகளில் புத்தக வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து இப்போது எழுத்துத் துறையில் இருக்கிறார். 2010ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நகைச்சுவைக் கதைகள், மர்மக் கதைகள் இரண்டு துறைகளிலும் எழுதுவதில் விருப்பம் உள்ளவர். வரும் ஆண்டுகளில் நிறையப் புத்தகங்கள் எழுதி வெளியிடும் முனைப்புடன் உள்ளவர்.
அடுத்த சிறுகதைத் தொகுதி வெளியிடலாமா என்று பிரசுரமான சிறுகதைகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கையில் அடுத்தடுத்து நகைச்சுவைச் சிறு கதைகளாகத் தட்டுப்பட 'அட! ஓரு நகைச்சுவை சிறுகதைத் தொகுதியே போட்டுவிடலாம் போலிருக்கிறதே' என்ற எண்ணம் உதயமாயிற்று. இதைப் படிப்பவர்கள் சிரித்து மகிழ்வார்கள் என்ற உத்திரவாதத்தை தன் அணிந்துரையில் மிக 'ஜாலி'யாகத் தருபவர் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நகைச்சுவை எழுத்தாளர் திரு ஜே. எஸ்.ராகவன் அவர்கள். மிகக் குறைந்த அவகாசத்தில் ஒரு அணிகலனைப் போல் ஜொலிக்கும் அணிந்துரையை அளித்துள்ள திரு ஜே.எஸ்.ராகவன் அவர்களுக்கும் (வேறு வழியே இல்லாமல்!) இதைப் படித்துச் சிரித்து மகிழப் போகும் உங்கள் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி! - ரேவதி பாலு.
இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. கதைகளுக்கும் எதார்த்ததுக்கும் தூரம் அதிகம்!! கதைகளின் நிகழ்வுகள் கடைசியில் எப்படி முடியும் என்று நகைச்சுவையாக சொல்லப்பட்ட கதை. கணக்கிலடங்கா சொத்துக்களுக்கு உரிமையாளனான நாயகன் ஒரு சாதாரணப் பெண்ணை மனைவியாக்கிக் கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறேன். படிங்க! வயிறு குலுங்க சிரிங்க!.
Thuppariyum Sambu is a detective short-story series in Tamil, written by Devan in the early 20th century. The novel's protagonist is Sambu, a not-very-intelligent bank clerk in middle age, who solves difficult crime puzzles out of serendipity but is quick to explain as well as take credit. Sambu's character is sometimes considered to be a comical version of Sherlock Holmes. Sambu is described by Devan as having a bald fringe, a prominent nose and a weak chin. Along with a generally bewildered stare his appearance invariably invites people to term him asadu (stupid), an assessment not far from the mark. This becomes an asset for Sambu as criminals often underestimate him. Even though Sambu displays a certain reasoning and cunning, it is Lady Luck who leads him to literally stumble on the truth. A typical Sambu story has him clutch a newly built window railing as he trips over some obstacle, and some stolen diamonds hidden in the cement by a mason come to light. The drama is maintained by Sambu triumphing over people who have previously laughed or ridiculed him, with Sambu often being the last to understand that he has actually solved the crime. Sambu's stalwart companion in the police force is Inspector Gopalan, who usually brings a case to the detective's attention. Sambu and Gopalan usually have great regard for each other save for occasional irritants in their relations caused by Sambu's thin skin. Sambu eventually gets married to Vembu, who is clearly smarter than her husband and spares no criticism of her husband's vacuousness. The two eventually have a son called Sundhu who also helps in his father's work in solving crimes. Sambu's detective career is launched when the Director of the bank where he works fires him for letting a corrupt bank manager escape. Sambu gets sweet revenge when the same Director eventually summons him to recover a lost pearl necklace. In another story Sambu traps the same corrupt manager who used to take great pleasure in referring to him at work as "that idiot". Sambu's best moments are when he walks into his old office on the case of the pearl necklace and haughtily ignores his former colleagues who once showed him scant respect.
1932 முதல் ஆனந்த விகடன் மூலம் எழுதத் தொடங்கிய தேவன் இருபத்தைந்து ஆண்டுகளாக ஏராளமான கதைகள் கட்டுரைகளை எழுதி தனக்கென ஒரு வாசகர் கூட்டத்தையே உருவாக்கினார். இப்படிப்பட்ட வாசகர்களின் கூட்டம் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஏனெனில் அவருடைய எழுத்துக்கள் காலத்தால் அழியாதது. ஆனந்த விகடனின் வளர்ச்சிக்கு உதவியவர்களுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் எஸ்.வி.வி.யும், தேவனும் ஆவார்கள். இவர்கள் ஆனந்த விகடனில் தொடர் கதைகளை எழுதும்போது, ஒவ்வொரு வீட்டிலும், 'யார் முதலில் படிப்பது?' என்று பெரிய யுத்தமே நடக்குமாம்; அப்படிப்பட்ட ஒரு குதூகலம். பிறர் மனதைப் புண்படுத்தாத ஹாஸ்யம், மாறாத தெய்வ பக்தி, மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி., தேவன் எழுத்துக்களைப் படித்து ஆங்கில மோகத்தையே விட்டொழித்தனராம். தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு, பல அபத்தங்களைச் செய்துவரும் இன்றை மாமனிதர்கள் இதைக் கவனிக்க வேண்டும். வருடங்கள் பல மறைந்தாலும், தேவனுடைய எழுத்துக்களும், இருப்பதில் தான் ஆச்சரியமா! படித்துத்தான் பாருங்களேன்.
Devan was a competent and accomplished writer, who used several interesting and varied techniques in fiction writing. From travelogues to recipes, from detective stories to social dramas, he has written them all. Devan was born in 1913 at Thiruvidaimarudur in Thanjavur district, Tamil Nadu, India, where he did his schooling. He came to Kumbakonam Government College to complete his B.A. degree. He worked as a school teacher for a year, before joining the popular Tamil weekly magazine, Ananda Vikatan in 1933. Devan's first foray into the world of writing was through the humorous short story "Mister Rajamani", written when he was in his twenties. During this time, he wrote about 20 serials, more than 500 stories, articles and travelogues. A common feature in all his works was his gentle sense of humour. He was a very popular writer and stories abound of how, when a new issue of Ananda Vikatan came out, everyone in the family would fight to get hold of the copy first. During this time, he wrote about 20 serials, more than 500 stories, articles and travelogues. A common feature in all his works was his gentle sense of humour. He was a very popular writer and stories abound of how, when a new issue of Ananda Vikatan came out, everyone in the family would fight to get hold of the copy first. About ten of Devan's writings were also dramatised by several Tamil drama troupes, even during his lifetime. He himself wrote most of the dialogues for the plays. More recently, some of his works like Thuppariyum Sambu, Sriman Sudharsanam and Mister Vedhantham were made into television serials also. Only one of his novels, gOmathiyin kAdhalan, was made into a movie, starring T. R. Ramachandran and Savithri.
வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட், ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல. அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது. வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்ட ஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாற வேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல், மணல், ஜல்லியைவிட அதிக அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தி இருக்கிறார் தேவன். நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால் 'சொர்க்கத்தின் சொந்தக்காரர்' புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது!.
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி', கதை, கட்டுரை, அரசியல், சிரிப்பு, சரித்தம் என பல பிரிவுகளில் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். எஸ். வி. வி., தேவன், மகரம், நாடோடி... போன்றவர்கள் தங்கள் கதைகளுக்கிடையே நகைச்சுவையை அள்ளித் தெளித்தனர்.இவர்களுடைய முக்கியத்துவம் கதைக்குத்தான் இருக்குமே ஒழிய, நகைச் சுவைக்கு இருக்காது. இருந்தாலும் சொல்லும் நகைச்சுவை சற்று தூக்கலாகவே இருக்கும். அதனால் வாசகர்கள் மனத்தில் இவர்களுடைய நகைச்சுவை மிக மிக ஆழமாகப் பதிந்து, இவர்களை நகைச்சுவை எழுத்தாளர்களாகவே போற்றத் தொடங்கி விட்டனர்.சொல்லப் போனால், நகைச்சுவைக்கென்றே அரசியல் சம்பவங்களை உருவாக்கி, யாருடைய மனதும் புண்படாத வகையில் எழுதியவர் 'சோ' தான் முன்னணியில் இருப்பவர். இதைப்போல தேவனும் அந்தக் கால அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 'துக்ளக்' இதழில் சத்யா இது போன்ற கட்டுரைகளை இப்போது எழுதிக்கொண்டு வருகிறார்.தேவன், சோ போன்றவர்களின் நகைச்சுவையில் இருக்கும் அழுத்தம், சத்யாவின் எழுத்தில் இருக்காது. இருந்தாலும், இன்றைய நகைச்சுவை எழுத்தாளர்களில் முன்னணியில் நிற்பவர்களுள் ஒருவர் சத்யா. அடுத்தது ஜே.எஸ். ராகவனைக் குறிப்பிடலாம்.இவர் நகைச்சுவை கதைகள் மட்டுமே எழுதுபவர். இவரும் எஸ். வி. வி.யைப் போல ஆங்கிலத்திலும், தமிழிலும் தரமான நகைச்சுவையை தருவதில் வல்லவர். தமிழில் மிகவும் பிரபல்யமாகப் போற்றப்படும் நூல்களுள், தேவன் எழுதிய 'துப்பறியும் சாம்பு'வும் ஒன்று. இந்தத் தொடரை மிக மிக அழகாகப் படைத்துள்ளார் தேவன்.தேவன் மறைந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும், அவர் படைத்த கதைகளும், கட்டுரைகளும் சிரஞ்சீவியாக வாழ்கின்றன. அந்த அளவுக்கு அவருடைய எழுத்து அமைந்ததுதான் ஆச்சரியம். தேவன் தன் சொந்த வாழ்க்கையில் பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்தவர். எப்போதும் அமைதியாக இருப்பார்.அதிர்ந்து பேசக்கூடியவர் அல்ல. இப்படிப்பட்டவர் இவ்வளவு நகைச்சுவை கட்டுரைகளையும், கதைகளையும் அளித்தது, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒருவேளை இதுபோல எழுத, இந்த மாதிரி ஆசாமிகளால்தான் முடியுமா என்பதும் தெரியவில்லை.ஆனால், 'சோ' அவர்களுடன் பேசும்போது கூட நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது."எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நான் தேவன் நூல்களை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருப்பேன்" என்று கிரேஸி மோகன் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம்.எஸ். வி. வி., தேவன் நூல்களை மிகவும் போற்றி பாராட்டுபவர்களில் எழுத்தாளர் சுஜாதாவும் ஒருவர்.'சோ'வுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் தேவன். இவர்கள் எல்லாம் இன்று முன்னணி எழுத்தாளர்களாக இருந்தாலும், மனம் திறந்து தேவன் எழுத்துக்களை பாராட்டத் தயங்கியதில்லை. இப்படிப்பட்ட எழுத்துக்கள் நமக்குக் கிடைத்தது பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். பெருமை கொண்டால் மட்டும் போதுமா? நிறைய வாங்கிப் படிக்கவும் வேண்டும். நீங்கள் சுவைத்தது போல, உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் சுவைக்க முயலுங்கள். அதனால் அனைவரும் பயனடைவார்கள்.
தேவன், இயற்பெயர் ஆர். மகாதேவன். 1913 செப்டெம்பர் 8 அன்று திருவிடைமருதூரில் பிறந்தார். பி.ஏ. படித்து, சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, தொடர்ந்து இருபத்து மூன்று ஆண்டுகள் விகடன் நிறுவனத்தில் பணியாற்றினார். 1942 முதல் 1957 வரை 'ஆனந்த விகடன்' நிர்வாக ஆசிரியராக இருந்தார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நாவல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆர்.எம்., அம்பி, விச்சு, காயத்ரி, மயூரம், கேட்டை போன்ற புனைப்பெயர்களிலும் ஏராளமாக எழுதியுள்ளார். தேவன், ஒரு நாடக ஆசிரியரும்கூட; ஸிம்ஹம் என்ற பெயரில் வானொலி நாடகங்கள் இயற்றியிருக்கிறார். தேவன், எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக இருமுறை பதவி வகித்தார். 1957 மே 5 அன்று, தனது 44 - வது வயதில் காலமானார்.
Devan was a competent and accomplished writer, who used several interesting and varied techniques in fiction writing. From travelogues to recipes, from detective stories to social dramas, he has written them all. Devan was born in 1913 at Thiruvidaimarudur in Thanjavur district, Tamil Nadu, India, where he did his schooling. He came to Kumbakonam Government College to complete his B.A. degree. He worked as a school teacher for a year, before joining the popular Tamil weekly magazine, Ananda Vikatan in 1933. Devan's first foray into the world of writing was through the humorous short story "Mister Rajamani", written when he was in his twenties. During this time, he wrote about 20 serials, more than 500 stories, articles and travelogues. A common feature in all his works was his gentle sense of humour. He was a very popular writer and stories abound of how, when a new issue of Ananda Vikatan came out, everyone in the family would fight to get hold of the copy first. During this time, he wrote about 20 serials, more than 500 stories, articles and travelogues. A common feature in all his works was his gentle sense of humour. He was a very popular writer and stories abound of how, when a new issue of Ananda Vikatan came out, everyone in the family would fight to get hold of the copy first. About ten of Devan's writings were also dramatised by several Tamil drama troupes, even during his lifetime. He himself wrote most of the dialogues for the plays. More recently, some of his works like Thuppariyum Sambu, Sriman Sudharsanam and Mister Vedhantham were made into television serials also. Only one of his novels, gOmathiyin kAdhalan, was made into a movie, starring T. R. Ramachandran and Savithri.
Devan was a competent and accomplished writer, who used several interesting and varied techniques in fiction writing. From travelogues to recipes, from detective stories to social dramas, he has written them all. Devan was born in 1913 at Thiruvidaimarudur in Thanjavur district, Tamil Nadu, India, where he did his schooling. He came to Kumbakonam Government College to complete his B.A. degree. He worked as a school teacher for a year, before joining the popular Tamil weekly magazine, Ananda Vikatan in 1933. Devan's first foray into the world of writing was through the humorous short story "Mister Rajamani", written when he was in his twenties. During this time, he wrote about 20 serials, more than 500 stories, articles and travelogues. A common feature in all his works was his gentle sense of humour. He was a very popular writer and stories abound of how, when a new issue of Ananda Vikatan came out, everyone in the family would fight to get hold of the copy first. During this time, he wrote about 20 serials, more than 500 stories, articles and travelogues. A common feature in all his works was his gentle sense of humour. He was a very popular writer and stories abound of how, when a new issue of Ananda Vikatan came out, everyone in the family would fight to get hold of the copy first. About ten of Devan's writings were also dramatised by several Tamil drama troupes, even during his lifetime. He himself wrote most of the dialogues for the plays. More recently, some of his works like Thuppariyum Sambu, Sriman Sudharsanam and Mister Vedhantham were made into television serials also. Only one of his novels, gOmathiyin kAdhalan, was made into a movie, starring T. R. Ramachandran and Savithri.