130 record(s) found
சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக் கலையிலும், சிற்பக் கலையிலும் தேர்ச்சி பெற்ற நர்த்தகியாக காட்டப்படும் அபிமானவல்லி எதிர்மறை பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது விறுவிறுப்பைக் கூட்டுகிறது. காஞ்சியில் மகுடாபிஷேகம் செய்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது என திடீர் திருப்பங்களுடன் அமைந்துள்ளது. ஆதித்த சோழன் மகன் கன்னர தேவன் ஆன்மிகத்தில் ஈடுபட்டது; நம்பி, குறளப்பர் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தது போன்ற நிகழ்வுடன் சுவாரசியம் தரும் நுால்.
பொன்னியின் செல்வனை யாரால் மறக்க முடியும்? படிக்கும் போது இந்த இடங்களை எல்லாம் பார்த்திட வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இல்லை. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய உணர்வுகளுடன் இயைந்த பயணத்தையும் அதன் மூலமும் என்னுள் கிளர்ந்த உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
இது என்னுடைய மூன்றாவது வரலாறு சார்ந்த குறுநாவல். இம்முறை சேரர்களை கற்பனையில் சிறையெடுத்தேன். இந்த" சேரமான் வஞ்சி" குறுநாவலும், "செம்புலப் பெயல் நீராய்" என்னும் சரித்திரச் சிறுகதையும், ஸ்ரீ அனந்த நாராயணன் சிறுகதைப்போட்டியிலும் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றவை. இத்துடன் "வீரம் வெளைஞ்ச மண்ணு", "மந்திரோபதேசம்", "வெற்றிச் செல்வி" சிறுகதைகளும் கூட உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துமென நம்புகிறேன்.
காந்திய எளிமையும், வட்டார வழக்குச் சொல்லகராதியின் தலைமகனாகவும், தமிழ்நிலத்துக் கலாச்சாரத் தொன்ம வாழ்வியலைப் பேசுபொருளாகவும் வைத்து, முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக நின்றவர். இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீடம் விருதைப் பெறுவதற்கு எவ்வகையிலும் தகுதியான கி. ராஜநாராயணனை வாசித்தும், பழகியும் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிச் சேர்த்த நல்முத்துகளே இக்கட்டுரைகள்.
"சரித்திரம் போற்றும் சந்திப்புகள் - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்கள், தேசிய தலைவர்கள், மத்தியில் நடைபெற்ற சுவாரசியமான சந்திப்புகள், நிகழ்வுகளின் குறிப்புகளும், உரையாடலும், அதனின் தொகுப்பும் - ஆசிரியர் எஸ். மதுரகவி மகாத்மா காந்தி , பாரதியார், நிவேதிதா தேவி, பாலகங்காதர திலகர் , மற்றும் பலரின் உரையாடல்களின் சிறு தொகுப்புக்களுடன் ஆசிரியருக்கு உதவிய அனைத்து நூலகங்களுக்கும் , பதிப்புக்களுக்கும் நன்றிகள். Introduction to Sarithiram Potrum Sandhippugal - a Historical book in Tamil by S.Madhurakavy This is a historical book in Tamil which describes various meetings among national leaders and social reformers. It contains some of the landmark meetings such as Bharathiyar's meeting with mahatma Gandhiji, Bharathiyar's meeting with Swami Vivekananda's disciple Niveditha devi, Gandhiji and Tamil scholor TKC, Tilak and Swami Vivekananda, Nehruji and Mohamed Iqbalji, Anna and Kamaraj, J.C.Kumarappa and Gandhiji and so on. This is book which will be useful to the young generation to know about the leaders of the land and their noble thoughts and deeds. This book has been written with documentary evidences for meetings described. Senior Journalists of Tamilnadu Valar Thozhil tamil busness magazine editor Thiru.K.Jayakrishnan and Thiru. Karu.Santhanam have given foreward for this book."
காலி, கள்ளன், துரோகி என்று கெட்ட குணங்களை மீறி சிப்பாய், படைத்தலைவன், மதுரை அரசன் என்று தன் வீரத்தால் மாவீரனாக விளங்கியதை நான் நாவலாக்கியுள்ளேன். இந்நாவலைப் படிப்பதற்கு வாசகர்க்குச் சுவை குன்றாமல் படைக்க முயற்சித்துள்ளேன். அதே சமயம் வரலாறும் நடந்த ஆண்டுகளும் இதில் ஆதாரமானவைதான் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாலும் சில செவிவழிச் செய்திகளும் பாரம்பரியம் மிக்க தகவல்களும் படிப்பதற்கு இதில் நாவலின் சுவை கூட்ட சேர்க்கப்பட்டுள்ளது.
"மன்னா... இதென்ன விபரீத யோசனை? அரசாங்கம் சாராயக் கடைகள் நடத்துவதா? சரித்திரத்தில் இதுவரை கண்டிராத யோசனையாகவும் அல்லவா இருக்கிறது? படு கேவலமான யோசனையாகவும் இருக்கிறதே...! நீருக்குப் பதில் சாராயம் குடித்தால் மக்கள் கதி என்னாவது?" "இங்கேதான் நீர் எமது ராஜதந்திரத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரே திட்டத்தில் பல கனிகளைக் கொய்பவன் இந்த மணிமாறன். மக்கள் சாராயத்தை நிறையக் குடிக்கட்டும். விளைவாக குறைவாகச் சாப்பிடுவார்கள். உணவுப் பஞ்சம் தீரும். இது ஒரு கனி." "அடடே..." "சாராய விற்பனையை அரசே நடத்துவதால் நமக்கும் கஜானா நிறையும். இது இரண்டாவது கனி." "ஆஹா... பிரமாதம் அரசே..." "குடிசாராயம் சாப்பிடும் மக்கள் சீக்கிரத்தில் உயிரை விடுவதால் நாட்டில் ஜனத்தொகையும் குறையும். இது மூன்றாவது கனி." பெருமையாகப் பார்க்கிறான் மணி. "எப்படியுள்ளது சாத்தனாரே எமது முக்கனித் திட்டம்?" "ஆஹா... அபாரம் அரசே. தங்களைப் போல மதி நிறைந்த மன்னரைச் சரித்திரம் கண்டதில்லை!"
கொள்ளிடத்தின் மறுகரையை ஆண்டு வந்த சிவஞானத்தேவன், மங்களாம்பிகையின் மகன் இந்த வீரதேவன். பாண்டிய நாட்டு வீரர்களால் சிவஞானத்தேவன் கொலை செய்யப்படுகிறான். மங்களாம்பிகை தனியாக வீரத்தேவனை வளர்த்து வருகிறாள். வீரத்தேவன் கொள்ளிடக்கரையில் எதார்த்தமாக பார்த்த பவளவல்லியை காதலிக்கிறான். இந்த பவளவல்லி தனது குடும்ப எதிரியான பொன்னம்பலத்தேவரின் பேத்தி என்று தெரிய வந்தால் மங்களாம்பிகை என்ன செய்வாள்? என்பதை படித்து அறிவோம்...
"பயண இலக்கியம் படைப்பதென்பது ஒரு தனி ஆற்றல். எப்படி சிறுகதை, புதினம், கவிதை எல்லாம் தனித்தனி ஆற்றல் தேவைப்படும் இலக்கிய வகையோ அப்படிப் பயண இலக்கியமும் ஒரு தனித்திறன் தேவைப்படும் எழுத்துக்கலை" என்பார் கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள். அந்த வகையில் தான் சென்று வந்த சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றி எழுதுவதில் தனித்திறன் பெற்று தனி முத்திரை பதித்து வருகிறார் எழுத்தாளர் ஆர்.வி.பதி அவர்கள். அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அவர் எழுதியள்ள "திகைக்க வைக்கும் திண்டுக்கல்" என்ற நூல் ஆகும்.திண்டுக்கல் பெயர்க்காரணம் கோட்டை ஓர் அறிமுகம் திண்டுக்கல் பூட்டுகாந்தி மகாத்மாவும் திண்டுக்கல்லும் என திண்டுக்கல் பற்றிப் பல சுவையான அரிதானத் தகவல்களை அவருக்கே உரிய எளிய தமிழ்நடையில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.
பதிமூன்று தலைமுறையாக மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இந்த மணிமுடியும் உடைவாளையும் தேடிக் கொண்டிருக்கிறான். அதை அவன் அடைந்து எடுத்து சென்று தன் சபதத்தில் வெற்றி அடைய விடக் கூடாது என்று சோழர்களின் வாரிசுகள் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பாண்டிய அரசர்களின் அட்டவணையில் சுந்தர பாண்டியன் பதிமூன்றாவது மன்னன். எனவே மூன்றாம் ராசராசனை எதிர்த்த சுந்தர பாண்டியன் இந்த காலக்கட்டத்தில் மாறனாக வருகிறான்.அநபாய சோழனின் உதவிக்கு, பொன்னியின் செல்வனின் பெரிய பழுவேட்டரையராக, இன்றைய அநபாயனின் தந்தை பேராசிரியர் அமுதவாணனும் தெலுங்கு சோடர்கள் என்னும் சோழர்களும் மாறனின் உதவிக்கு ரவிதாசனும் ஈழத்து விஜயபாகுவின் மகள் விஜயலக்ஷ்மியும்பாண்டிய ஆபத்துதவிகளும் துணை நிற்கின்றனர். இதனிடையே, இன்றைய அநபாயனின் இந்நாள் காதலியான காயத்ரியும் அவள்குடும்பத்தினரும் மட்டும் கதை மாந்தர்கள். கற்பனைப் பாத்திரங்கள்.பாண்டியர்களின் மணிமுடியை பாண்டியனின் பதிமூன்றாம் ஜென்மமான மாறன் எடுத்தானா? அல்லது சோழர்களின் இன்றைய வாரிசான அநபாயன் அதை முறியடித்தனா? இதை தான் புதினமாக புனைந்திருக்கிறேன்.
மராத்திய மண்ணில் பிறந்து, தஞ்சை மண்ணில் ஆட்சி புரிந்து மக்களின் மனங்களை வென்றவர்! எல்லா செயல்களிலும் தன் பெயரை நிலைநாட்டி ஆளுமைத் தன்மையுடன் விளங்கியவர்! தமிழுக்குத் தொண்டாற்றியவர்! அவர்தாம் தஞ்சைக்குப் புகழாரம் சூட்டிய மாமன்னர் "இரண்டாம் சரபோஜி" ஆவார். அம் மன்னருடைய வாழ்க்கை வரலாறு தான் "சரித்திர நாயகன் இரண்டாம் சரபோஜி"என்னும் வரலாற்று நூலாகும். உலகப் புகழ்ப் பெற்றுள்ள, சரசுவதி மகால் நூலகம், மராட்டிய அரண்மனை, மனோரா கோட்டை, சார்ஜா மாடி, கோவில்கள், முதலியவற்றைத் தோற்றுவித்தவர்!இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னரின் சிறப்புகளை திருமதி. இரா.இந்திராபாய் அவர்கள் தக்க வரலாற்று ஆதாரங்களுடன் சுவைபட எடுத்தியம்பியுள்ளார். அருமையான சரித்திர நூல் - குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் நூல். எழுத்துலகிற்குப் பெருமை சேர்க்கும் இனிய நூல் என்றால் மிகையாகாது!.
தனக்கு பதிலாக கடவுளை அரசனாக்கி விட்டு அவரின் சார்பாக கொடுங்கோலாட்சி நடத்துகிறான் ஜெயசிம்மன். அவனை எதிர்த்து புரட்சி செய்கிறான் பார்த்திபன். அவனுக்கு உதவி செய்ய வந்து சேர்கிறார்கள் கள்வனானஆதித்தனும் அரிஞ்சயனும். மூவரும் இணைந்து எப்படி ஆட்சியை கைப்பற்றுகிறார்கள் என்பதுதான் நாவலின் சுருக்கம்.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள்.
கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள்.
உலகறிந்த உண்மையை எடுத்துச் சொல்லும் போது, 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்று ஒரு உவமையைச் சொல்வார்கள். ஆனால், இன்று உலகத்தையே உள்ளங்கைக்குள் அடக்கிய ஊடகமாக 'இணையம்' வந்துவிட்டது. இணையத்தின் வழியாக, உடனுக்குடன் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை காணமுடிகிறது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இன்றையச் சூழலில், 'இணையம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை' என்று சொல்லும்படியாக, இன்று இணையத்தின் தேவை அவசியமான ஒன்றாகி விட்டது. உலகில் 54.4 சதவிகிதம் பேர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உலக மொழிகளில் இணையப் பயன்பாட்டில் 301 மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இம்மொழிகளில் ஆங்கிலம் அதிகளவாக 52.7 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. உலகில் இணையத்தின் வழியாக, ஆங்கில மொழியின் பரவல் வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நம் பயன்பாட்டிற்கும், தேவைகளுக்குமான நூறு இணையதளங்களைக் கண்டறிந்து, அந்த இணையதளங்களில் இடம் பெற்றிருக்கும் தகவல்களைப் பற்றிய குறிப்புகள், அந்த இணையதளத்தின் முகவரி போன்றவைகளைத் தொகுத்து, 'பயனுள்ள 100 இணையதளங்கள்' எனும் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நூல் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுடையதாக இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வேங்கை நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் நடைபெறுகிறது போர். வளநாட்டு வீரன் ஒருவன் தன் படைகளுடன் வந்து பாண்டிய நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறான். போரில் பாண்டிய நாடு வெல்கிறது. வளநாட்டின் இளவரசன் இளமாறனுக்குத் தன் தங்கையை மணமுடிக்க பாண்டியன் விரும்ப அவன் மனமோ வேங்கை நாட்டின் இளவரசியை நாடுகிறது. வேங்கை நாட்டு மன்னன் வள நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் பகை உண்டாக்க சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி பலித்ததா? இளமாறன் சூழ்ச்சியை எவ்வாறு முறியடித்தான்? யாரை மணமுடித்தான்? ஒரு பரபரப்பான சரித்திரக் கதை "பாசறை"