11 record(s) found
குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் போன்ற குறட்டை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உடல் எடைக் குறைப்பு மற்றும் தூங்கப் போவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூக்கின் மேல் ஒட்டக்கூடிய பட்டைகள் (நேசல் ஸ்ட்ரிப்) மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தெரிந்துகொள்வோம். மேலும் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான நேர்மறை காற்று பாதை அழுத்த (CPAP) சிகிச்சை போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம். குறட்டை ஏற்படுவதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிவது மற்றும் அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவ சேவை வழங்குநருடன் எவ்வாறு ஆலோசிப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம்.மேலும், குறட்டை விடும் நபர் மற்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள்ளும் துணைவரின் தூக்கத் தரத்தை மேம்படுத்துவது, குறட்டை விடுவதினால் உறவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வசதியான மற்றும் உகந்த சூழலைஅமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் நூலாசிரியர்களில் ஒருவர் ஓவன் ஜோன்ஸ், இவர் வேல்ஸ் நாட்டின் பாரி நகரத்தைச் சேர்ந்தவர், இவர் பல நாடுகளில் வசித்திருக்கிறார் மேலும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ௧௯ 70 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, அவர் உளவாளிகளுடன் தொடர்ந்து பழகினார். பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்குப் பிறகு, சுரினாம் நாட்டில், 1982 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அவருக்குத் தொடர்பிருக்கிறது மற்றும் அவர் கூலிப்படையை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தபோது, பாலைவனப் புயல் ஏற்பட்டபோது பாரி நகரிலிருந்து ஜிப்ரால்டருக்கு நான்கு பேர் பயணம் செய்த குழுவில் துடுப்பு வளிக்கும் அடிமையாக பயணம் செய்தார் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் படகில் அவர்கள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணத்தின் போது, அவர்கள் பயணித்த படகு ஏறக்குறைய ஒரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் - தி அட்லாண்டிக் சேலஞ்சர் ஆகியவற்றில் மோதியது. 2004 ஆம் அண்டு முதல், அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து நாட்டில் வசித்தார். அவர் இப்போது தனது மனைவியுடன் அவரது ஆள் அரவமற்ற வடக்கு பகுதியில் இருக்கும் விவசாய கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் மேலும் கதை எழுதுவது மற்றும் அவர் எழுதிய கதைகளை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
அன்றாடம் நாம் அறிந்த கீரை, பழங்கள், காய்கறி வகைகள் போன்றவற்றின் நன்மை தீமைகளையும், அதை உபயோகிக்கும் முறை பற்றியும் அழகாக எடுத்துரைக்கும் நூல்....
இயற்கை தாவரங்கள் பூமித்தாயின் குழந்தைகள் எனலாம். மரம், செடி, கொடிகள் அனைத்தும் தாவரங்களே! மரங்கள் பூமியில் தோன்றி 30 கோடி ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என தாவர வல்லுநர்கள் கருதுகின்றனர். மரங்கள் மழை, காற்று, காய், கனிகள் மட்டும் நமக்கு தரவில்லை. மருந்துணவுகளையும் தருகின்றன. மரங்களின் வேர்களும், பட்டைகளும் தரும் மருத்துவ பலன்கள் தான் மனிதரை வாழ வைக்கின்றன. நோயின்றி இருந்தால்தான் ஆரோக்கியமும், ஆயுளும் கூடும். மரங்கள் அதன் பட்டைகளில் உள்ள அபூர்வ சக்திகள் அறிவியல் பெருக்கத்திற்கு முன்பாகவே சித்தர்களும். ஞானிகளும் கண்டறிந்து தங்களது மொழிப்புரையில் எழுதிவிட்டு போயுள்ளனர். அவர்களது அறிவுச்செல்வம்தான் இந்த இயற்கை மருத்துவம் ஆகும். நீண்ட ஆயுளுடன் வாழ வழிகாட்டும் "பட்டய கிளப்பும் பட்டை மருத்துவம்" என்ற இந்த நூல் மனிதகுலம் தழைத்தோங்க மிகவும் உதவும்.
"நம்மைப் பற்றி நாமே தெரிந்து கொள்ள வேண்டும். வந்தபின் பரிகாரம் தேடுவதைவிட, வருமுன் காப்பது நல்லது. ஆரம்ப நிலையில் சிகிச்சை எப்போதும் எளிமையானது; பெரிதாகிவிட்டால் சிக்கலாகிவிடும்; சிகிச்சையும் கடினமானது! இவற்றை எல்லாம் டாக்டர்கள் பலரும் என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு." அந்த அடிப்படையில் பொதுமக்களுக்குப் பயன்படக் கூடிய குறிப்புகளை, நிபுணர்களிடமிருந்து பெற்று, இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். மருத்துவ நிபுணர்களின் விலாசத்தையும் பயன்பெற விரும்புகிறவர்களுடைய கவனத்துக்காக அளித்துள்ளேன். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய, அன்றாட வாழ்க்கையில் ஆலோசனை பெறுவதற்குரிய, பயனுள்ள குறிப்புப் புத்தகமாக இது அமைந்துள்ளது. இந்த வசதியை வாசகர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்", "ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்" என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். தற்போது "ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்" என்ற நூலினை எழுதியுள்ளேன். தற்போதைய கோவிட்-19 சூழலில் ப்ராணயாமம் நமது உயிர்காக்கும் கவசம் என்பதை பலர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ப்ராணயாமா பயிற்சியினை ஒரு குருவின் துணைகொண்டு கற்றுக்கொள்வதே நல்லது. பாதுகாப்பானது. ப்ராணாயாமா பற்றிய ஒரு அறிமுக நூல் இது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ப்ராணயாமா பற்றிய அடிப்படை அறிவினை உங்களுக்கு இந்த நூல் தரும். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல். ஆரோக்கிய வாழ்விற்கு பிராணயாமம்" என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி.
வாசகர்களுக்கு வணக்கம். "ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்" எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே "ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்", "ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்" எனும் நூல்களை எழுதியுள்ளேன. இது போன்ற புத்தகங்கள் உங்கள் மனத்தையும் உடலையும் தூய்மையாக்கி ஆரோக்கியமானை வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அறிந்த தினமும் அரைமணிநேரம் ஒதுக்கி சூரியபகவானை வணங்கி நல்லதொரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த புத்தகத்தை மிகச்சிறப்பான முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மீண்டும் சந்திப்போம் அன்புடன் ஆர்.வி. பதி.
ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு விஷயம் ஆரோக்கியம். நன்றாக இருக்கும் போது நாம் நமது உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உடலானது சீர்கெட்டு வியாதிகள் வரும்போதுதான் நாம் ஆரோக்கியத்தைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குகிறோம். நமது உடலை முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் பாதுகாக்க வேண்டும். பண்பாடு மிக்க நமது பாரத நாட்டில் யோகிகள் யோகம் பிராணாயாமம், தியானம், முத்திரைகள் என பல அதிசயமான வழிமுறைகளைக் கண்டறிந்து நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவை அனைத்தும் பொக்கிஷங்கள் என்றால் அது மிகையாகாது. இவை அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமாகியுள்ளன. வெளிநாட்டினர் இத்தகைய பொக்கிஷங்களைப் பயின்று முழுப்பலன்களையும் அனுபவித்து வருகிறார்கள். நாமோ அவற்றின் அருமை பெருமைகளைப் பற்றி இன்னமும் தெரியாதவர்களாகவே இருக்கிறோம். "ஆரோக்கிய வாழ்விற்குப் பிராணாயாமம்" "ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்" என்ற நூல்களைத் தொடர்ந்து "ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்" என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். முத்திரைப் பயிற்சி பல அதிசய விஷயங்களை உள்ளடக்கியது. பயிற்சி செய்வது மிகவும் சுலபம். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. இந்த நூலில் மொத்தம் 32 முத்திரைகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல். "ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்" என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி. புத்தகங்களின் மூலம் ஒன்றாய் இணைவோம். புத்தகங்களின் மூலம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். மீண்டும் புத்தகங்களில் வாயிலாக சந்திப்போம்.
'ஒரே டென்ஷனா இருக்கு. தலைவலி மண்டயப் பிளக்குது. சூடா ஒரு கப் காப்பி குடிச்சா தேவலை... ' இப்படி, நாமே ஒரு தடவையாவது சொல்லியிருப்போம். மற்றவர்கள் சொல்வதையும் கேட்டிருப்போம். அத்துடன், சாதாரண பள்ளிக்கூட மாணவர்களில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை, தங்களது இயலாமையை மறைத்துக்கொள்ள ஒரு காரணமாக இருப்பது தலைவலிதான். அதேபோல், மாமியார் - மருமகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி போன்ற தவிர்க்க முடியாத உறவுகள்கூட, விருப்பமில்லா நேரங்களில் தஞ்சம் அடைவது இந்தத் தலைவலியில்தான். ஆக, சமூகத்தில் வேறு எந்த வலிகளையும்விட தலைவலிக்கு என்று ஒரு 'மரியாதை' இருக்கிறது. மனிதர்களாகப் பிறந்த நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தலைவலி ஏற்படுவது மிகச் சாதாரணமான ஒன்று. காரணமே இல்லாமல் வரக்கூடிய தலைவலிகள் உண்டு. தலைவலிக்கு இதுதான் காரணம் என்று சொல்லக்கூடிய வகையிலான தலைவலிகளும் உண்டு. எது எப்படி இருந்தாலும், தலைவலியா, அருகில் இருக்கும் மருந்துக் கடைக்குப் போய், ஏதோ ஒரு மாத்திரையை வாங்கிப்போட்டு அப்போதைக்கு தலைவலிக்கு தாற்காலிய நிவாரணம் தேடும் நிலையில்தான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். இதில், ஏழை பணக்காரன்; படித்தவன் படிக்காதவன்; ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, அப்போதைக்கு தலைவலியில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதில் இருந்துதான், அவர்களின் அறியாமை தொடங்குகிறது. இதில் ஆபத்து என்னவென்றால், உடனடி நிவாரணத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மிகச் சாதாரணமான / எளிதில் குணமாகக்கூடிய தலைவலியாக இருப்பதை, மிகத் தீவிரமான தலைவலியாக மாற்றிவிடக்கூடும். அத்துடன், விரும்பத்தகாத வேறு பக்க/பின் விளைவுகளையும் ஏற்படுத்தி விடலாம். அத்துடன், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயலாமையில் இருக்கும் மனிதர்களை, என்னிடம் தலைவலிக்கு நிவாரணம் / சிகிச்சை இருக்கிறது சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில், மக்களிடையே போதுமான விழிப்புணர்வும், எச்சரிக்கை உணர்வும் ஏற்பட வேண்டும். அதற்கு, தலைவலியைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். வேண்டாத சிகிச்சை முறைகள், தேவையற்ற மருந்துகள், வாழ்க்கையின் நல்ல தருணங்களின் இழப்பு, திறமைகளின் வீச்சுக் குறைவு போன்றவற்றைத் தவிர்க்க, தலைவலி பற்றிய ஓர் ஆதாரபூர்வமான அறிவு நமக்குத் தேவை. ஆக, 'தலைவலி - பாதிப்புகளும் தீர்வுகளும்' என்ற இந்தப் புத்தகம், உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும். இதில், மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படும் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரெய்ன், டென்ஷன் தலைவலி, நரம்பு மண்டலக் குறைபாடுகளால் ஏற்படும் தலைவலிகளைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.
இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன், ஒரு குறிப்பிட்ட நோய்க்குக் கூறப்பட்டுள்ள சிகிச்சைகளை மட்டும் படித்துப் பார்த்துவிட்டு, அந்தச் சிகிச்சைகளைக் கையாளத் தொடங்கிவிடக் கூடாது. அப்படித் தொடங்கினால், சிகிச்சைகளின் முழுப் பயனையும் பெற முடியாது. ஏனென்றால்,மற்ற வைத்திய முறைகளைப் போன்றது அல்ல இயற்கை வைத்திய முறை. இந்த முறைப்படி ஏதாவது ஒரு நோய்க்கு சிகிச்சை செய்துகொண்டாலே, உடம்பில் உள்ள மற்ற நோய்களும் தாமாகவே குணமாகிவிடும். நமது பிராண சக்தி தேவையான அளவுக்கு ஆக்கம் பெறுவதற்கான வழிமுறைகள் இதில் கையாளப்படுகின்றன. ஆகையால், அந்த வழிமுறைகள் யாவை, அவை எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாலொழிய, இந்த நூலில் உள்ள எந்த ஒரு சிகிச்சையையும் செவ்வையான முறையில் கையாள இயலாது.அவற்றை அவ்வாறு தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்நூல் முழுவதையும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது (முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில்) படித்தே ஆகவேண்டும்.அப்படிப் படித்துத் தெளிவுபெற்று, அதன்பின் சிகிச்சைகளில் இறங்கினால், இயற்கை வைத்தியத்தினால் குணமாக்க இயலாத வியாதி எதுவும் இல்லை என்பதை நீங்கள் உங்கள் அனுபவத்தாலேயே அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையாக உடல்வாகு இருப்பதால் முதன் முதலாக யோகா கற்க விரும்புபவர்கள் ஒரு குருவின் மூலம் நேரடியாக பயிற்சி பெருவதுதான் கலையின் சிறப்பு. இந்நூல் படத்துடன் விளக்கியிருப்பதால் அனைவருக்கும் எளிதில் யோகா கலை பிடிபடும்.சூர்ய நமஸ்காரம் என்பது நமது உடலின் பல்வேறு முக்கியமான மண்டலங்களாகிய சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், தசை நார்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் மூளை உள்ளிட்ட புலன்களை வலிமையாக வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும்.எட்டு வயதிற்கு மேற்பட்டு எண்பது வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு சாதாரண உடல்வாகுள்ள மனிதரும் இதனைச் செய்ய முடியும். இந்த சூரிய நமஸ்காரம் வளரும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பேரளவில் நன்மை பயக்கின்றது. தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வோருக்கு, கட்டுப்பாட்டுடன் கூடிய சீரான உடல் வளர்ச்சி, ஆரோக்கியத்துடன் கூடிய திறன்மிகுந்த உடல், அமைதியுடன் கூடிய சமநிலையான மனநிலை, ஆழ்ந்த கவனத்துடன் கூடிய கூடுதலான செயல்திறன், நினைவாற்றலுடன் கூடிய உணர்வுகளின் மீதான கட்டுப்பாடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.
"There isn't any joking with Dr. Okun about the 10 Secrets for a Happier Life in Parkinson's disease. This book is a critical resource for Parkinson's disease patients and families from around the world who speak different languages, but suffer from very similar and often disabling symptoms." –Muhammad AliThe most humbling experience of my life has been the time I have spent with families, and with patients suffering from Parkinson's and chronic neurological diseases. I use the word humbling, because time after time, in person, and also on the web forum, we have uncovered simple and addressable issues and secrets that have changed people's lives. For some sufferers it has meant walking again, for others it has restored their voices, and for many it has resulted in the lifting of a depression, anxiety and desperation cloud that has obscured their dreams, and robbed them of potential unrealized happiness. I never assume a sufferer or family member is aware of the "secrets" that may lead to hope and to a happier life. We must share these secrets, and this is the purpose of this book.Each chapter of this book reveals an important secret, and with each secret I will explain the insight, the rationale, the empiricism, and the science behind it. In each chapter I will also try to reveal a little more about myself, and a lot more about the patients and talented clinicians who gifted the Parkinson's secrets. These patients planted the seed of faith. They learned to grow hope, and they discovered the core values necessary to achieve happiness despite the chronic illness of Parkinson's disease.