6,351 record(s) found
கணவன் சந்திரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சீதா. அவன் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தும் அவளை அவன் வீட்டை விட்டு போ என்கிறான். அவன் தன் மறைந்த முதல் மனைவி மோகனா வை இன்னும் மறக்கவில்லை ...... அவளோடு தான் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க செல்கிறாள் சீதா. ஆனால் அவனுக்கு ஒரு கடந்த கால இருட்டு இருக்கு. அதை மறைக்க பாடுபடுகிறான். சீதா அவன் காதலுக்காக ஏங்க .....அவளுக்கு அவன் அன்பு கிடைத்ததா.....சீதாவை தொடருங்கள்.
ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...
"அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை செய்ய மாட்டேன் என்று இவ்வளவு உறுதியா சொல்ற நீ... எதுக்காக என்னைக் காதலிச்சாய்? எதுக்கா இப்போ என் வாழ்க்கையோடு விளையாடுகிறாய்?" சத்யநந்தன் கேட்டதும், மதுவின் கண்கள் வலியைக் காட்டின. "தப்புதான்... அம்மாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நான் காதலிச்சது தப்புதான்! அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அனுபவிக்கிறேன்!" கண்களில் நீருடன் மது சொன்னதும், சத்யா வேதனையோடு கண்களை மூடினான்! தன்னைக் காதலித்தது தவறு என்று காதலி சொல்லும்போது, எந்த காதலனுக்குத்தான் வேதனை இராது? ஆனால்... தானே அவளது இந்த வார்த்தைகளுக்கு காரணம் என்ற குற்ற உணர்வோடு அவளை நோக்கியவன், "சாரி... மது... வெரி வெரி சாரி!" என்றான் ஆத்மார்த்தமாக! "இல்லை சத்யா... நீங்க சொன்னது தப்பில்லை! என் மேல்தான் எல்லா தப்பும்! அதுதான் உண்மை! ஆனால்... நீங்க என்ன சொன்னாலும் என் முடிவை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது! அதுவும் உண்மை!" என்றவள் கண்கள், 'இத்தோடு விட்டு விடேன்' என்று அவனிடம் கெஞ்சின. அவள் விழிகள் வேண்டியதைச் செய்து விட வேண்டும் போலத் தோன்றினாலும், இப்போது விட்டு விட்டால், அவளை இழப்பது நிச்சயம் என்று தெரிந்தும், அவனால் விட்டு விட முடியுமா என்ன? இப்போது அவன் சொல்லப் போகும் வார்த்தைகள் அவளைக் காயப் படுத்தும் என்று சத்யாவுக்குத் தெரிந்தது. ஆனால்... இப்போது இதைச் சொல்லா விட்டால், வாழ் நாள் முழுதும் இருவரும் வருந்த வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தவனாக, அவளிடம் திரும்பினான். "இங்கே பாரு மது! ஒன்று நீ அத்தையின் ஆசையை நிறைவேற்றனும்! இல்லை... உனக்கு சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைச்சுக்கணும்! இது ரெண்டையும் செய்யாமல் இருந்தால், அத்தைக்கு..." என்றவன் குரல் கமறியது. தொண்டையை செருமி சரி செய்து கொண்டவன், "அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால், அவங்க ஆன்மா கூட உன்னை மன்னிக்காது!" தனது வேண்டுதலுக்கு இணங்கி இத்தோடு இந்தப் பேச்சை விட்டு விடுவான் என்று எண்ணி இருந்த மது, சத்யாவின் வார்த்தைகளில் திகைத்து அவனை நோக்கினாள்! 'என்ன சொல்கிறான் இவன்?' அவளுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை! மதுவின் முகத்தில் தெரிந்த குழப்பம், அவளுக்கு தான் சொன்னது விளங்கவில்லை என்பதை உணர்த்த, சத்யா மீண்டும் பேசினான். "ஆமாம்... அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்... நீ சொன்ன மாதிரி அவங்க உங்க திருமணம் பற்றி பேசியதுதான் அவங்க கடைசி வார்த்தை...கடைசி ஆசையா இருக்கும்! அதை நிறைவேற்றுவது உன் கடமையும் கூட! அதனால், ஒன்று நீ மகேந்திரனை கல்யாணம் செய்து கொண்டு அவங்க ஆசையை நிறைவேற்றனும்! இல்லை என்றால், நீ மனசார விரும்பிய என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்... தன் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கூட, தன் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிறைவாவது அவங்களுக்கு மிஞ்சும்! அதுதான் நீ அவங்களுக்கு கொடுக்க போற உண்மையான சந்தோஷமா இருக்கும்! நீ எடுக்கப் போற முடிவில்தான் நம்ம நாலு பேருடைய சந்தோஷம்... இன்னும் சொல்ல போனால்... இன்னும் ரெண்டு குடும்பங்களுடைய சந்தோஷசம் அடங்கி இருக்கு என்பதை மனதில் வைத்து பதில் சொல்லு! இப்பவே சொல்லணும் என்று இல்லை! நல்லா யோசிச்சு சொல்லு! நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்!" 'அவளது சத்யாவா ? அவனா என்னை மகேந்திரனைத் திருமணம் செய்து கொள் என்று சொன்னான்? அவனால், எப்படி அவளிடம் இப்படி சொல்ல முடிந்தது?'
வினோத் என்பவன் அண்ணியின் அரவணைப்பில் வாழ்பவன். சுனிதா தான் நினைத்தது நிறைவேற வேண்டும் என எண்ணுபவள், தன்னை மிஞ்சி எதுவும் இல்லை என்ற கருத்துடையவள். வினோத் சுனிதாவிற்கு திருமணம் நிச்சியக்கப்படுகிறது. இதில் கௌதம் என்பவன் உள்ளே வருகிறான். அந்த கௌதம் யார்? இதில் முள்ளாக இருந்தது யார்? மலராக இருந்தது யார்? வினோத், சுனிதா இருவரும் இணைந்தார்களா! வாங்க பார்ப்போம்.
கழுத்தில் மாலைவிழாமல் கையில் குழந்தையுடன் வாழும் பெண்ணுக்குத் திருமணம். ஏனிப்படி? என்ன நடந்தது? அந்த குழந்தையின் தந்தை யார்? அவளுடைய திருமணத்திற்கு பின்னான புதிய உறவுகள் அவளை ஏற்றுக் கொண்டதா? சிக்கலை உண்டாக்கியதா? அவள் நிலைமை என்ன? இதை காதலாய் திகட்டதிகட்டச் சொல்கிறது இந்தப் புதினம். தாம்பத்யத்தின் ரகசியத்தைக் கூறுகிறது இந்த நாவல். இந்த? "நிலவொன்று கண்டேன்"
இந்த முதல் தொகுப்பில் இருக்கும் 15 கதைகளில் பெரும்பாலும் போட்டிகளில் வெற்றி பெற்றக் சிறுகதைகளே. இந்த நூலில் உள்ள அணிந்துரையிலும், வாழ்த்துரையிலும் சொல்லப்பட்டதைப் போல ஒவ்வொரு சிறுகதையும் ஒரு வாழ்க்கைச் சித்திரமாய் மிளிர்கிறது. வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் தனித்துவமான நடையுடன் எழுதப்பட்ட ஜூனியர் தேஜ் அவர்களின் சிறுகதைகளை வாசித்து மகிழ்வோமே!.
புதிதாக வாங்கிய வீட்டிற்கு ஹரிஷ் தன் பெற்றோருடன் தாத்தாவோடு குடிபுகுகின்றான். அங்கே அமானுஷ்யம் இருப்பதாக அவனுக்குள் தோன்ற, ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் இருப்பது இன்விசிபிள் பெண் யாஷிதா என்று தெரியவருகிறது. அந்த பெண் உருவம் இல்லாமல் எப்படி மாயமாய் அவ்விடம் இருக்கின்றால்? எதனால் அப்படி ஓரு நிலை? பழைய நிலைக்கு மாறுவாளா? என்று நகைச்சுவை கலந்த பேண்டஸி முறையில் கதையை அறிவோம்.
கணவனே பிரபல கார்ட்டியாலஜிஸ்ட் கணவரின் குடும்பத்திற்கு ஒரு நவீன மருத்துவமனையே சொந்தம். புகுந்தவீட்டில் தடுக்கி விழுந்தால் மருத்துவர்கள் அப்படியும் வானதிக்கு வந்த ப்ரச்னைதான் என்ன? அதிலிருந்து எப்படி மீள்கிறாள்? மனசெல்லாம் உனையெழுதி காத்திருக்கும் டாக்டர் எஸ்கேவைத் தொடருங்களேன்... "கேம்ஷோ" ஒரு பிரபல டி. வி சேனல் நடத்தும் ரியாலிட்டி கேம்ஷோவில் ஒரு பள்ளிமாணவி தன் கல்லூரிப்படிப்புக் கனவுக்காக கலந்து கொள்கிறாள். அந்தச் சிறுமியைச் சுற்றி நடக்கும் காதல் நாடகம் துரோகம் வாஞ்சையுடன் வஞ்சகமாய் காட்டப்படும் அப்பா பாசம் இவற்றில் மீண்டு இலக்கை அடைவாளா .?இனம்கண்டு மீள்வாளா? வீழ்வாளா? கனவு நனவாகுமா? இல்லை வாழ்வே அமுத விஷமாகுமா? கேம்ஷோவின் கதாநாயகி சன்விதாவை காக்க நாமும் உள்நுழைவோமா?.
முற்றும் முடிய இது ஒரு காதல் கதை. கதையின் நாயகன் ஜகதீஷ் நாயகி மான்யதா. சிறுவயதில் இருவருக்குமிடையே நடந்த சம்பவம் மான்யதாவின் ஆழ் மனதில் அவன் மீது வெறுப்பாக நின்று விடுகிறது. மான்யதாவை இந்த கிராமத்தின் பக்கம் ஐந்து வருடங்கள் வர விடாமல் செய்து விடுகிறது. இப்போது சேனபதியின் மகள் காவ்யாவின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறாள் மான்யதா. அங்கே ஜெகதீஷ் இருக்கிறான். இருவருக்குமான உறவும் உரிமையும் ஊடலும் காதலும்... என்று சுவாரஸ்யத்துடன் போகிறது இந்த கதை.
அழகாகப்பிறந்து விட்டதால், நிறைய அவதிகளுக்கு ஆளாகிறாள் நாயகி. அளவோடு குடும்பத்தை அமைத்துக் கொள்ளாததால் ஆத்திரத்துக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாகும் இவளின் தந்தை. அந்த அதட்டலுக்கும், அவசரத்திற்கும், அன்புக்கும் சுமை தாங்கியாய் ஆகும் இவளின் தாய். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொருகோணங்கள் எல்லா கோணங்களும் ஒரே திசைவழியில் சாத்தியமில்லை. என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!.
மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி. மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை. சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது. அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார். சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!.
குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள். பல்வேறு பத்திரிக்கைகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இன்றைய பிஞ்சுகளுக்கு உபதேசம் செய்வதை விட, கதைகள் மூலம்தான் நல்ல ஒழுக்க நெறிகளைப் புகட்ட முடியும், அன்பு, மரியாதை, கனிவு, கருணை எல்லாமே அவர்களுக்கு கதைகள் மூலம் சொல்ல முடியும். அந்த முயற்சியின் தொகுப்புதான் இந்த தேவதை.
சசி என்பவன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக பணி புரிகிறான். இவன் மனைவி மது. 'ட்விங்கிள்' என்ற ஒரு பெண் குழந்தை உண்டு. மதுவின் கடந்த காலத்தை நினைவுபடுத்த ஸ்ரீராம் மதுவின் வாழ்வில் வருகிறான். யார் இந்த ஸ்ரீராம்? மதுவின் கண்ணோட்டத்தில் இவன் யார்? மதுவை வைத்து என்ன சாதிக்க நினைக்கிறான்? இதெல்லாம் சசிக்கு தெரிய வருமா? தெரிந்துவிட்டாலோ சசியின் முடிவு என்னவாக இருக்கும்? வாருங்கள் வாசிப்போம்...
ஒரு பெண் வீட்டுக்கு ஒரு சமையல்காரியாகவும் குழந்தை பெற்றுத் தரும் மெஷின் ஆகவும் மாமியார் மாமியாரை கவனிக்கும் ஒரு வேலைக்காரியாகவும் தான் இருக்க வேண்டும். அவளுக்கு என்று தன்மானமோ, சுயமரியாதையோ கூடாது என்று நினைப்பவர்கள் தான் அதிகம். இதில் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று அறிந்து, அவனை உதறி, விவாகரத்து வாங்கி துணிந்து நிற்கும் மங்கை பலருடைய பேச்சுக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிறாள். உனக்கு என்ன தெரியும் என்ற கணவரின் பேச்சை உதறித் தள்ளி வாழ்க்கையில் உயர்கிறாள். அப்பா மாதிரி உன்னிடம் காசு இல்லை நீ எனக்கு என்ன செய்ய முடியும் என்று விவாகரத்தின் போது அப்பாவிடமே தங்கி விடுகிறாள் பெண் அபர்ணா. மகன் மட்டும் இவளுடன் வருகிறான். தறி கெட்டுப் போன பெண் அபர்ணா வாழ்க்கையில் வழுக்கி விழுந்த சமயத்தில், அவள் காதலனின் தங்கையை எழில் திருமணம் செய்து கொண்டால் அபர்ணாவையும் ஏற்றுக் கொள்வதாக காதலன் வீடு சொல்ல மறுத்து விடுகிறாள் மங்கை. நீ செஞ்சது தப்பு. உன்னுடைய ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இன்னொருவர் வாழ்க்கையை அழிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று கூறி விடுகிறாள். பெண் வாழ்க்கை திருந்தியதா? எழில் ஆசைப்பட்ட பெண்ணை மணம் செய்து கொடுத்தாளா? மங்கைக்கு உதவியாக இருந்த ஜெகா, மேனகாவுடன் சேர்ந்து என்னென்ன சாதனைகள் செய்தாள் என்று எல்லைகளற்ற வானம் கதையில் தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு பெண் நியாயம் இல்லாத, ஒழுக்கக் குறைவான விஷயங்களை செய்யக்கூடாது. தன்மானமும் சுயமரியாதையும் தைரியமும் மிக முக்கியம் என்பதை விளக்குகிறாள் மங்கை.
சின்னுவுக்கு அக்கீயின் பேரில் ஈர்ப்பு இல்லைதான். இது கல்லூரிக் காலத்திலேயே நீடிக்கிறது. ஆனால் சின்னுவும் ரூபிணியும் விரும்புகிறார்கள். எதிர்பாராமல் ரூபிணியின் துர்மரணம் நிகழ்கிறது. சின்னு உடைந்து போய் அக்கீயை விட்டு விலக நினைக்கிறான். இடையில் ரோகிணியின் நிச்சயமற்ற ஊடுருவல்! ஆனால், பூமாவின் நினைவில் அக்கீயையும் துறந்து, சின்னு கடந்து செல்கிறான். இறுதியில் மீண்டும் இருவரும் ஓர் உச்சக்கட்டத்தில் சந்திக்கிறார்கள். ஒருவேளை நிரந்தரமாக இழந்தவர்களையே நினைத்து வாழ்க்கையைத் தொலைத்து விடுவதில் என்ன பயன் என்பதை அக்கீசியா, சின்னசாமிக்கு உணர்த்தியிருக்கலாம்.
காதலித்துப் பல கடினமான சோதனைகளைக் கடந்து கடிமணம் புரிந்துகொண்ட கணவனுடன் இன்பமாக வாழ இயலாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றாள் மாமியார். அவள் மனம் மாறும்வரை தன் இனிய உணர்வுகளின் துணை கொண்டு சாம்பவி இல்லறம் நடத்தி வருகின்றாள். திடீரென்று இரு விருந்தாளிகளின் வருகையால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? அதன் பின்னர் என்ன நிகழ்ந்தது என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
குறும்பு பேச்சும், கேலியும் கைவந்த கலையாய் 28 வயது வசீகர இளைஞன் திறமைமிக்க பிஸினஸ்மேன் பிரமோத். அதே நேரத்தில், ஆண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் இளம் பெண் எழுத்தாளர் மஞ்சரி. இவர்களுக்குள் முதலில் மோதலாகி, பின் நட்பாகி, பின் ஒரு தலை காதலாகி பின் ஏமாற்றத்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் இரு மனங்களும் சேர்ந்ததா? இல்லையா? என்பதை காதலின் இன்பத்தோடும் வலியோடும் சேர்ந்து வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்....!.
ரம்யா, சுஷ்மா இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பராக இருக்கிறார்கள். ரம்யாவின் குடும்பத்தில் அப்பா பொறுப்பிள்ளாமல் நடந்து கொள்கிறார். அம்மா அவளை வளர்க்கிறாள். அதேபோல் சுஷ்மாவின் வீட்டில் அம்மா தப்பான தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறாள். அப்பா அவளை வளர்க்கிறார். இவர்கள் இருவரும் "சிப்பிக்குள் முத்து" போல இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை படிந்து தெரிந்துகொள்வோம்.
நண்பனின் காதலை உடனிருந்து ரசிதத்தின் வெளிப்பாடு இந்த "Frienda போல யாரு மச்சான்". சென்னையின் கொளுத்தும் வெயிலில் வேலையின் தனிமை போக எனக்கு துணையாக இருந்தது என் நண்பனின் காதல். சின்ன சின்ன சண்டைகள், சண்டையில் புரிதல் தந்தது அவன் காதல். இந்த கிருக்கல்களை புத்தகமாக்குவது குறித்தும் உணர்த்தியது நண்பனின் பேச்சு. என் சின்ன சின்ன பார்வையையும் வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் சுற்றுப்புறம். இந்த எழுத்துகளுக்கு ஆணிவேர் பின் வரும் ஒன்றரை வரியே. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. –குறள்.
மனோ எழுச்சியின் தீவிரத்தால், எண்ண அலைகளை பீறிட்டு எழச்செய்து, உத்வேகத்துடன் ஓர் உணர்வுப் போராட்டம் நிகழ்த்தி, காலத்தின் கரத்தால் விலக்கப்பட்டிருந்த ஓர் உறவின் இழையைத் தேடிப்பிடித்துப் பற்றிக் கொள்ளும் இளம் பெண்ணின் கதை.