1,734 record(s) found
கணவன் சந்திரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சீதா. அவன் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தும் அவளை அவன் வீட்டை விட்டு போ என்கிறான். அவன் தன் மறைந்த முதல் மனைவி மோகனா வை இன்னும் மறக்கவில்லை ...... அவளோடு தான் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க செல்கிறாள் சீதா. ஆனால் அவனுக்கு ஒரு கடந்த கால இருட்டு இருக்கு. அதை மறைக்க பாடுபடுகிறான். சீதா அவன் காதலுக்காக ஏங்க .....அவளுக்கு அவன் அன்பு கிடைத்ததா.....சீதாவை தொடருங்கள்.
ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...
மாதவன், சாருகாசினி இருவரும் காதலித்து அவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சில நாட்களுக்குப் பின்னர் சாருவின் தோழியான மகேஸ்வரியின் திருமணத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு சாருவின் நிலைமை என்ன நிகழ்ந்து? அதனால் சாருகாசினி, மாதவன் இருவரின் வாழ்க்கையில் இறுதியில் நிகழ்ந்தது என்ன? என்பதையும் காண வாருங்கள் வாசிப்போம்...!.
"அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை செய்ய மாட்டேன் என்று இவ்வளவு உறுதியா சொல்ற நீ... எதுக்காக என்னைக் காதலிச்சாய்? எதுக்கா இப்போ என் வாழ்க்கையோடு விளையாடுகிறாய்?" சத்யநந்தன் கேட்டதும், மதுவின் கண்கள் வலியைக் காட்டின. "தப்புதான்... அம்மாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நான் காதலிச்சது தப்புதான்! அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அனுபவிக்கிறேன்!" கண்களில் நீருடன் மது சொன்னதும், சத்யா வேதனையோடு கண்களை மூடினான்! தன்னைக் காதலித்தது தவறு என்று காதலி சொல்லும்போது, எந்த காதலனுக்குத்தான் வேதனை இராது? ஆனால்... தானே அவளது இந்த வார்த்தைகளுக்கு காரணம் என்ற குற்ற உணர்வோடு அவளை நோக்கியவன், "சாரி... மது... வெரி வெரி சாரி!" என்றான் ஆத்மார்த்தமாக! "இல்லை சத்யா... நீங்க சொன்னது தப்பில்லை! என் மேல்தான் எல்லா தப்பும்! அதுதான் உண்மை! ஆனால்... நீங்க என்ன சொன்னாலும் என் முடிவை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது! அதுவும் உண்மை!" என்றவள் கண்கள், 'இத்தோடு விட்டு விடேன்' என்று அவனிடம் கெஞ்சின. அவள் விழிகள் வேண்டியதைச் செய்து விட வேண்டும் போலத் தோன்றினாலும், இப்போது விட்டு விட்டால், அவளை இழப்பது நிச்சயம் என்று தெரிந்தும், அவனால் விட்டு விட முடியுமா என்ன? இப்போது அவன் சொல்லப் போகும் வார்த்தைகள் அவளைக் காயப் படுத்தும் என்று சத்யாவுக்குத் தெரிந்தது. ஆனால்... இப்போது இதைச் சொல்லா விட்டால், வாழ் நாள் முழுதும் இருவரும் வருந்த வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தவனாக, அவளிடம் திரும்பினான். "இங்கே பாரு மது! ஒன்று நீ அத்தையின் ஆசையை நிறைவேற்றனும்! இல்லை... உனக்கு சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைச்சுக்கணும்! இது ரெண்டையும் செய்யாமல் இருந்தால், அத்தைக்கு..." என்றவன் குரல் கமறியது. தொண்டையை செருமி சரி செய்து கொண்டவன், "அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால், அவங்க ஆன்மா கூட உன்னை மன்னிக்காது!" தனது வேண்டுதலுக்கு இணங்கி இத்தோடு இந்தப் பேச்சை விட்டு விடுவான் என்று எண்ணி இருந்த மது, சத்யாவின் வார்த்தைகளில் திகைத்து அவனை நோக்கினாள்! 'என்ன சொல்கிறான் இவன்?' அவளுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை! மதுவின் முகத்தில் தெரிந்த குழப்பம், அவளுக்கு தான் சொன்னது விளங்கவில்லை என்பதை உணர்த்த, சத்யா மீண்டும் பேசினான். "ஆமாம்... அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்... நீ சொன்ன மாதிரி அவங்க உங்க திருமணம் பற்றி பேசியதுதான் அவங்க கடைசி வார்த்தை...கடைசி ஆசையா இருக்கும்! அதை நிறைவேற்றுவது உன் கடமையும் கூட! அதனால், ஒன்று நீ மகேந்திரனை கல்யாணம் செய்து கொண்டு அவங்க ஆசையை நிறைவேற்றனும்! இல்லை என்றால், நீ மனசார விரும்பிய என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்... தன் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கூட, தன் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிறைவாவது அவங்களுக்கு மிஞ்சும்! அதுதான் நீ அவங்களுக்கு கொடுக்க போற உண்மையான சந்தோஷமா இருக்கும்! நீ எடுக்கப் போற முடிவில்தான் நம்ம நாலு பேருடைய சந்தோஷம்... இன்னும் சொல்ல போனால்... இன்னும் ரெண்டு குடும்பங்களுடைய சந்தோஷசம் அடங்கி இருக்கு என்பதை மனதில் வைத்து பதில் சொல்லு! இப்பவே சொல்லணும் என்று இல்லை! நல்லா யோசிச்சு சொல்லு! நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்!" 'அவளது சத்யாவா ? அவனா என்னை மகேந்திரனைத் திருமணம் செய்து கொள் என்று சொன்னான்? அவனால், எப்படி அவளிடம் இப்படி சொல்ல முடிந்தது?'
கழுத்தில் மாலைவிழாமல் கையில் குழந்தையுடன் வாழும் பெண்ணுக்குத் திருமணம். ஏனிப்படி? என்ன நடந்தது? அந்த குழந்தையின் தந்தை யார்? அவளுடைய திருமணத்திற்கு பின்னான புதிய உறவுகள் அவளை ஏற்றுக் கொண்டதா? சிக்கலை உண்டாக்கியதா? அவள் நிலைமை என்ன? இதை காதலாய் திகட்டதிகட்டச் சொல்கிறது இந்தப் புதினம். தாம்பத்யத்தின் ரகசியத்தைக் கூறுகிறது இந்த நாவல். இந்த? "நிலவொன்று கண்டேன்"
கணவனே பிரபல கார்ட்டியாலஜிஸ்ட் கணவரின் குடும்பத்திற்கு ஒரு நவீன மருத்துவமனையே சொந்தம். புகுந்தவீட்டில் தடுக்கி விழுந்தால் மருத்துவர்கள் அப்படியும் வானதிக்கு வந்த ப்ரச்னைதான் என்ன? அதிலிருந்து எப்படி மீள்கிறாள்? மனசெல்லாம் உனையெழுதி காத்திருக்கும் டாக்டர் எஸ்கேவைத் தொடருங்களேன்... "கேம்ஷோ" ஒரு பிரபல டி. வி சேனல் நடத்தும் ரியாலிட்டி கேம்ஷோவில் ஒரு பள்ளிமாணவி தன் கல்லூரிப்படிப்புக் கனவுக்காக கலந்து கொள்கிறாள். அந்தச் சிறுமியைச் சுற்றி நடக்கும் காதல் நாடகம் துரோகம் வாஞ்சையுடன் வஞ்சகமாய் காட்டப்படும் அப்பா பாசம் இவற்றில் மீண்டு இலக்கை அடைவாளா .?இனம்கண்டு மீள்வாளா? வீழ்வாளா? கனவு நனவாகுமா? இல்லை வாழ்வே அமுத விஷமாகுமா? கேம்ஷோவின் கதாநாயகி சன்விதாவை காக்க நாமும் உள்நுழைவோமா?.
முற்றும் முடிய இது ஒரு காதல் கதை. கதையின் நாயகன் ஜகதீஷ் நாயகி மான்யதா. சிறுவயதில் இருவருக்குமிடையே நடந்த சம்பவம் மான்யதாவின் ஆழ் மனதில் அவன் மீது வெறுப்பாக நின்று விடுகிறது. மான்யதாவை இந்த கிராமத்தின் பக்கம் ஐந்து வருடங்கள் வர விடாமல் செய்து விடுகிறது. இப்போது சேனபதியின் மகள் காவ்யாவின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறாள் மான்யதா. அங்கே ஜெகதீஷ் இருக்கிறான். இருவருக்குமான உறவும் உரிமையும் ஊடலும் காதலும்... என்று சுவாரஸ்யத்துடன் போகிறது இந்த கதை.
சசி என்பவன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக பணி புரிகிறான். இவன் மனைவி மது. 'ட்விங்கிள்' என்ற ஒரு பெண் குழந்தை உண்டு. மதுவின் கடந்த காலத்தை நினைவுபடுத்த ஸ்ரீராம் மதுவின் வாழ்வில் வருகிறான். யார் இந்த ஸ்ரீராம்? மதுவின் கண்ணோட்டத்தில் இவன் யார்? மதுவை வைத்து என்ன சாதிக்க நினைக்கிறான்? இதெல்லாம் சசிக்கு தெரிய வருமா? தெரிந்துவிட்டாலோ சசியின் முடிவு என்னவாக இருக்கும்? வாருங்கள் வாசிப்போம்...
குறும்பு பேச்சும், கேலியும் கைவந்த கலையாய் 28 வயது வசீகர இளைஞன் திறமைமிக்க பிஸினஸ்மேன் பிரமோத். அதே நேரத்தில், ஆண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் இளம் பெண் எழுத்தாளர் மஞ்சரி. இவர்களுக்குள் முதலில் மோதலாகி, பின் நட்பாகி, பின் ஒரு தலை காதலாகி பின் ஏமாற்றத்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் இரு மனங்களும் சேர்ந்ததா? இல்லையா? என்பதை காதலின் இன்பத்தோடும் வலியோடும் சேர்ந்து வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்....!.
நண்பனின் காதலை உடனிருந்து ரசிதத்தின் வெளிப்பாடு இந்த "Frienda போல யாரு மச்சான்". சென்னையின் கொளுத்தும் வெயிலில் வேலையின் தனிமை போக எனக்கு துணையாக இருந்தது என் நண்பனின் காதல். சின்ன சின்ன சண்டைகள், சண்டையில் புரிதல் தந்தது அவன் காதல். இந்த கிருக்கல்களை புத்தகமாக்குவது குறித்தும் உணர்த்தியது நண்பனின் பேச்சு. என் சின்ன சின்ன பார்வையையும் வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் சுற்றுப்புறம். இந்த எழுத்துகளுக்கு ஆணிவேர் பின் வரும் ஒன்றரை வரியே. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. –குறள்.
மோகன் என்பவனும், பண்ணையாரின் மகள் பைந்தமிழும் காதலிக்கிறார்கள். பைந்தமிழின் அப்பாவிற்கு இது தெரிய வருகிறது. பைந்தமிழை எச்சரிக்கிறான். பைந்தமிழ் மோகனை மறக்கிறாள். பிறகு மோகனின் நிலை என்னானது? அதேபோல், அவனி என்பவளும், தன்னுடன் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவனான கார்த்திக் என்பவனும் காதலிக்கின்றன. கார்த்திக் விபத்தில் உயிர் இழக்கிறான். இப்பொழுது அவனியின் நிலை என்ன? மோகன் மற்றும் அவனி இருவரின் வாழ்க்கை என்னானது என்பதை படித்து அறிவோம்!.
இது ஒரு முக்கோணக் காதல் கதை. மித்ராவை அருணும், தினகரும் காதலித்தாலும் மித்ரா விரும்புவது தினகரை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் இணைய முடிந்ததா?....... மித்ரா வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததா?.........
வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்தால்? அவளால் அதை ஏற்க முடியுமா? நாயகனை தன் கைக்குள் வைக்க நினைக்கும் அவனது தாய், இந்த கூட்டுக் கிளியை மருமகளாக தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? பேசவே தயங்கும் நாயகி, நாயகனின் நியாயமான ஆசையை உணராமல் அவனை விட்டு பிரிய, மீண்டும் அவர்கள் இணைந்தார்களா? நாயகனின் தாய் இந்த திருமணத்துக்கு சம்மதிப்பாரா? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
திவ்யாவை பெண் பார்க்க வருகிறான் அபிஷேக். முதலில் வேண்டாம் என்பதும் பின் வேண்டும் என்பதும்... அதற்கான காரணங்களும்... என் ஒரு அழகான காதல்... காதல் மட்டுமே ஆன கதையும்... திவ்யாவின் தோழி பூர்ணா இன்றைய இளம் பெண்களுக்கே உரிய நாகரீகங்கள் என்னும் பெயரால் சீரழியும் வாழ்வை எப்படி சரி செய்து கொண்டாள்... என்று ஒரு புரட்சிகரமான போக்கையும் சில்வியா என்னும் திவ்யாவின் உடன் பணியாற்றும் தோழியின் கணவன் பாதை தவறி செல்லும்போது அவள் அந்த காலக்கட்டத்தைக் கையாண்ட அனுபவத்தையும் ஆரோக்கியம் என்னும் பெண்ணின் கல்லானாலும் கணவன் என்னும் வாழ்வியலும் அவனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது அவளின் மனிதாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக திவ்யாவின் அக்கா ரம்யாவின் திருமண வாழ்வின் குளறுபடிகள் அதை அவள் கணவன் சரி செய்த விதமும் இதன் ஊடாக ஷீலா என்னும் உறவினரின் உதவிகளும்... மற்றவற்றை கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த கனகா, தம்பியை வளர்க்க மிகவும் சிரமப்பட்டாள். அப்பாவின் கம்பெனி பணம், அம்மாவின் சேமிப்பு பணம் என்று சமாளித்து வரும்போதுதான் வினோதினியை சந்திக்க நேரிட்டது. இவள் யார்? எதற்காக கனகாவை சந்தித்தாள்? இவளால் கனகாவிற்கு நேரிட்டது என்ன? என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்.
Chaindavi always lives with an inferiority complex about herself. She falls in love with a man for the first time in her life at the age of eighteen. When the two begin to fall in love, she realizes that he loves her only as a competition, and she breaks down completely. Due to this, she decides that there is no more love in her life and goes abroad. She returns to the village as a graduate. Then again she falls in love, but that love also fails. But one guy brings her out of her sorrow. He is in love with Chaindavi. But after failing in love twice, will Chindavi accept his love or not? What is the reason for falling in love twice?.
நாயகன் விஷ்வா, நாயகி வர்ஷா இருவரும் புதுமண தம்பதகள். திருமணமான முதல் நாளில் இருந்தே விஷ்வா தனது மனைவியை நெருங்க முடியாமல் தவிக்கிறான். வர்ஷாவின் இதழ் பதிக்க தடைபோடும் விஷ்வாவின் வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வு தான் என்ன? சக்தி, கனிஷ்காவின் ஆழமான காதல், சுவாரஸ்யமான ஊடல், ரொமான்ஸ் ரசிக்க வைக்கும் க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் பல அதிரடி திருப்பங்கள், ரொமான்ஸ், மர்மங்கள் நிறைந்த வித்தியாசமான கதைக்களம்...
பம்பாய் விமான நிலையத்திலிருந்து வந்த 'ஏர்கிராஸ்' விமானம் சென்னைக்கு அருகில் வந்தபோது விபத்துக்குள்ளானதை அறிந்த ராம்குமார், அனைவரையும் ட்ரீட்மெண்ட்டிற்காக தன்னுடைய நர்ஸிங்ஹோமிற்கு அழைத்துச் செல்கிறான். தன்னிலை மறந்து இருக்கும் நித்யா யார்? எங்கிருந்து வந்தாள்? ராம்குமார் கண்டுபிடித்தானா? நித்யாவிற்கு நினைவு வந்ததா? இல்லையா? என்பதை 'இந்துமதி'யின் 'நினைவே இல்லையா நித்யா?' இக்கதையில் வாசிப்போம் வாருங்கள்...!.
எங்கோ பிறந்த இரு மலர்கள் ஓர் இரவு இரயில் பயணத்தில் நட்புறவு கொண்டு வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தார்கள். இருவரின் காதல் இருவரும் அறிந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவர்களின் காதலை அவரவர் வீட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம். அவளது குடும்பத்தில் அவன் வேண்டாதவனாக ஆகிவிடுவானோ? இருவரின் காதலும் கைகூடுமா? அவர்களின் வாழ்க்கை நிலைக்குமா? வாசித்து பாருங்கள் கதையின் சுவாரசியத்தை...
சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த வினாடி நடந்தது என்ன? தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட ஒரு மணி நேரத்திலேயே வாழாவெட்டியாக, சாருலதா தன் பிறந்தகம் சென்ற காரணம் என்ன? பாண்டியனையும் சாருவையும் நிரந்தரமாய் பிரிப்பதற்கு சதி செய்தவர்கள் யார், யார்? யாருக்கு யார் நிழலாய் நின்று இவர்களைச் சேர்த்து வைத்தார்கள்? நிழலாய் நின்ற காதலின் நிஜத்தை தெரிந்து கொள்ள வாசிப்போம்...