564 record(s) found
இது ஒரு பயணக் கட்டுரை நூல். இதை படிக்கும் பொழுது நெதர்லாந்து துளிப் தோட்டத்தின் அழகையும், பாரீஸ் நகர ஈபிள் டவரின் பிரமிப்பூட்டும், சுவிட்சர்லாந்து பனிமலைகளின் குளிர்ச்சியையும், இத்தாலியின் புகழ்பெற்ற வெனிஸ், ஃபிளாரன்ஸ், ரோம் நகர வீதிகளில் நடை பயின்ற உற்சாகத்தையும் உங்களுக்கு தரும். மேலும் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் தருணம் மூன்று உலக அதிசயங்களையும், உலகின் புகழ்பெற்ற பல இடங்களையும் நீங்களே சுற்றிப் பார்த்து விட்டு வந்த உணர்வைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான சிறுகதைகள் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எழுதப்பட்டன. மேலும் பெரும்பாலான கதைகள் நமது நம்பிக்கை மாத பத்திரிகையில் வெளியானதை தொகுக்க பெற்ற நூல் கே.அசோகன்.
சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக் கலையிலும், சிற்பக் கலையிலும் தேர்ச்சி பெற்ற நர்த்தகியாக காட்டப்படும் அபிமானவல்லி எதிர்மறை பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது விறுவிறுப்பைக் கூட்டுகிறது. காஞ்சியில் மகுடாபிஷேகம் செய்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது என திடீர் திருப்பங்களுடன் அமைந்துள்ளது. ஆதித்த சோழன் மகன் கன்னர தேவன் ஆன்மிகத்தில் ஈடுபட்டது; நம்பி, குறளப்பர் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தது போன்ற நிகழ்வுடன் சுவாரசியம் தரும் நுால்.
சோனாசலம் தன் இரண்டாவது பெண் ஹேமாவிற்கு அவள் காதலிக்கும் ஜனாவையே கல்யாணம் செய்து வைக்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் துப்பறியும் புலியான பெரிய மாப்பிள்ளை டாக் நரசிம்மன் ஜனாவைப்பற்றி அவதூறாகக் கூறி அவனையும் ஹேமாவையும் பிரிக்க நினைக்கிறார். முதலிரவை தடுத்து நிறுத்துகிறார். தன் மேல் அபாண்டமாக பழி சுமத்தி பெரிய மாப்பிள்ளையை படாதபாடு படுத்த ஹைதராபாத் செல்கிறான் ஜனா. அவர் வீட்டிலேயே செந்தமிழ் பேசத் தெரிந்த சமையல்காரனாக வேலைக்கு சேருகிறான். நிஷா என்ற பெண்ணை கடத்தியதில் பெரிய மாப்பிள்ளை மாட்டிக் கொண்டு விட, ஜனா அவரை பிளாக்மெயில் செய்கிறான். P.M. (பெரிய மாப்பிள்ளை) யை தன் வாயாலேயே C.M. (சின்ன மாப்பிள்ளை) நல்லவர் என்று கூற வைக்கிறான்.
இப்போது நீங்கள் படிக்கவிருக்கும் 'ஜாலி கதைகள்' தொகுப்பு. வேறு வேறு சந்தர்ப்பங்களில் குமுதம், விகடகவி, குங்குமம், பாவையர் மலர் போன்ற பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள் இங்கே சங்கமித்துள்ளன. நகைச்சுவை, சமூகம், சரித்திரம் என்று வெரைட்டியான ஜானர்களில் அமைந்ததாகவும் சேர்த்திருக்கிறேன். மொத்தத்தில், படித்து முடித்ததும் இதழ்களில் ஒரு புன்னகையைத் தொற்ற வைக்கிற, உற்சாகமான மனநிலைக்கு மாற்றுகிற சிறுகதைகளின் தொகுப்பே இந்த 'ஜாலி கதைகள்'. (படித்ததும் நீங்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, நான் உறுதியாக நம்பியதைக் கூறிவிட்டேன். ஹி... ஹி...).
நகைச்சுவை எழுத்து என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும், யாரையும் கேலியும், கிண்டலும் செய்யாமல், மனம் நோகடிக்காமல் எழுதுவது என்பது ஒரு கலை. 'வெறும் துணுக்குத் தோரணமல்ல. ஒரு சிறிய முடிச்சு, அதைச்சுற்றிய இயல்பான நகைச்சுவை, ஒரு எதிர்பாராதமுடிவு எல்லாம் சேர்ந்திருந்தால்தான் அந்த எழுத்துக்கு சுவைகூடும்.' அந்தச் சுவையை, நாமும் வாசித்து தெரிந்து கெள்வோம் வாருங்கள்...!.
சிறுதலைப்பின்கீழ் அறியவேண்டிய, ஆச்சரியப்படக்கூடிய, நகைச்சுவைப்படக்கூடிய, கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்களை நமக்கு அனைத்து காய்கறிகளுடன் கூடிய அவியல் போல, எழுத்துவடிவியலான ஓர் அவியலை நாமும் வாசிப்போம் கோவை அனுராதாவின் பாணியில்...
"வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்" இது ரொம்பப் பழைய மொழி... "இருக்கற வீட்டுல ரெனவேஷன் வேலை பண்ணிப் பார்... உன் தாவு தீர்ந்துரும் பார்" இது தான் புது மொழி... வீட்டுல சமையலறைய ரெனவேஷன் பண்றதுகுள்ள நான் பட்ட பாடு இருக்கே... எப்படி அல்லோலப் பட்டேன்னு தெரிஞ்சுக்கணுமா? இந்தக் கதையை... உகும் என் அனுபவத்தைப் படிங்க... சிரிச்சுக்கிட்டே புரிஞ்சுப்பீங்க...
இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. கதைகளுக்கும் எதார்த்ததுக்கும் தூரம் அதிகம்!! கதைகளின் நிகழ்வுகள் கடைசியில் எப்படி முடியும் என்று நகைச்சுவையாக சொல்லப்பட்ட கதை. கணக்கிலடங்கா சொத்துக்களுக்கு உரிமையாளனான நாயகன் ஒரு சாதாரணப் பெண்ணை மனைவியாக்கிக் கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறேன். படிங்க! வயிறு குலுங்க சிரிங்க!.
நொடியும் நிமிடமும் திரும்புவதில்லை. கடந்தது கடந்ததுதான்! மனிதப் பிறவிக்கு இலவசமாகக் கிடைத்த அரிய பொக்கிசம் நேரம், நேரமே! அரிதான நேரத்தை நழுவ விடாமல், வந்த வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு முன்னேறுபவரே வாழ்க்கையில் வெற்றியாளர்! இவ்வாறான நேரத்தைத் தொழிற்சாலைகளிலும், தனிமனித வாழ்விலும் மிகத் திறமையாகப் பயன்படுத்திப் பலன் பெறுவதே மனிதனின் கடமையும், பொறுப்பும் ஆகும். எவ்வாறு நேரத்தை ஆளுமை செய்வது என்று கட்டுரைகளாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து எல்லோரும் நலம் பெறலாம்!வளம் பெறலாம்!.
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் சுவாரசியமிக்கவை. நம்மை தைரியமூட்டி, நம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும் கருத்துக்கள் அடங்கியவை. நம்முடைய மனக்கண்களை திறந்து தெளிவுப்படுத்தும் இச்சிறுகதைகளை வாசிப்போம் வாருங்கள்...
'எந்தக் கலையாக இருந்தாலும், எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோபலட்சம் மக்களிடம் பேசக் கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி. 'சினிமா சங்கதி' எனும் நூலை மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ளார்.
உடல் மொழி என்பது மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்குப் பயன்படுத்தும் சொற்கள் அல்லாத சமிக்ஞைகளைக் குறிக்கிறது. இந்த சமிக்ஞைகளில் முகபாவங்கள், சைகைகள், தோரணை மற்றும் பிற உடல் குறிப்புகள் இருக்கலாம். வேலை நேர்காணல்கள், பேச்சுவார்த்தைகள் அல்லது சமூக தொடர்புகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் உடல் மொழியைப் புரிந்துகொள்வது உதவியாக இருக்கும். உடல் மொழியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களை நாம் இந்த புத்தகத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் போன்ற குறட்டை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உடல் எடைக் குறைப்பு மற்றும் தூங்கப் போவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூக்கின் மேல் ஒட்டக்கூடிய பட்டைகள் (நேசல் ஸ்ட்ரிப்) மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தெரிந்துகொள்வோம். மேலும் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான நேர்மறை காற்று பாதை அழுத்த (CPAP) சிகிச்சை போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம். குறட்டை ஏற்படுவதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிவது மற்றும் அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவ சேவை வழங்குநருடன் எவ்வாறு ஆலோசிப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம்.மேலும், குறட்டை விடும் நபர் மற்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள்ளும் துணைவரின் தூக்கத் தரத்தை மேம்படுத்துவது, குறட்டை விடுவதினால் உறவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வசதியான மற்றும் உகந்த சூழலைஅமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் நூலாசிரியர்களில் ஒருவர் ஓவன் ஜோன்ஸ், இவர் வேல்ஸ் நாட்டின் பாரி நகரத்தைச் சேர்ந்தவர், இவர் பல நாடுகளில் வசித்திருக்கிறார் மேலும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ௧௯ 70 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, அவர் உளவாளிகளுடன் தொடர்ந்து பழகினார். பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்குப் பிறகு, சுரினாம் நாட்டில், 1982 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அவருக்குத் தொடர்பிருக்கிறது மற்றும் அவர் கூலிப்படையை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தபோது, பாலைவனப் புயல் ஏற்பட்டபோது பாரி நகரிலிருந்து ஜிப்ரால்டருக்கு நான்கு பேர் பயணம் செய்த குழுவில் துடுப்பு வளிக்கும் அடிமையாக பயணம் செய்தார் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் படகில் அவர்கள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணத்தின் போது, அவர்கள் பயணித்த படகு ஏறக்குறைய ஒரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் - தி அட்லாண்டிக் சேலஞ்சர் ஆகியவற்றில் மோதியது. 2004 ஆம் அண்டு முதல், அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து நாட்டில் வசித்தார். அவர் இப்போது தனது மனைவியுடன் அவரது ஆள் அரவமற்ற வடக்கு பகுதியில் இருக்கும் விவசாய கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் மேலும் கதை எழுதுவது மற்றும் அவர் எழுதிய கதைகளை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
மனச்சோர்வோ உடற்சோர்வோ வரும்போது உங்கள் மனதை உற்சாகப்படுத்தும் குறுங்கதைகள்.
இந்த நூல் வருங்கால இளைய தலைமுறையினருக்கு அந்தக் காலத் திரையுலகத்தில் நிலவிய நல்ல நட்பையும், ஆரோக்கியமான போட்டி பற்றியும் எடுத்துக்கூறும். தமிழ்த் திரையுலகத்தின் வளமான நகைச்சுவையைப் பற்றியும் விவரிக்கும். ஒப்பற்ற கலைஞர்களின் வாழ்க்கையிலிருந்து படிப்பினையைப் போதிக்கும்.
பொன்னியின் செல்வனை யாரால் மறக்க முடியும்? படிக்கும் போது இந்த இடங்களை எல்லாம் பார்த்திட வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இல்லை. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய உணர்வுகளுடன் இயைந்த பயணத்தையும் அதன் மூலமும் என்னுள் கிளர்ந்த உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உணவே மருந்து என்பதன் அடிப்படையில் உடலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய உணவு வகைகள் குறித்துதான் இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன். விருந்து சமையல், பத்திய சமையல், விரத சமையல்கள், பண்டிகை சமையல்களுடன் கேரளத்தின் தொன்மையான கோவில் பிரசாதங்களின் செய்முறைகளும் அக்கோவில்களின் ஸ்தல வரலாறுகளுடன் சுவைபட எழுதியுள்ளேன். இது வெறும் சமையல் புத்தகம் மட்டுமல்ல, பல சுவாரசியமான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கூட ஒரு கதை போல் சொல்லி சமைக்கக் கற்றுத்தரும் புத்தகமும் கூட.
இது என்னுடைய மூன்றாவது வரலாறு சார்ந்த குறுநாவல். இம்முறை சேரர்களை கற்பனையில் சிறையெடுத்தேன். இந்த" சேரமான் வஞ்சி" குறுநாவலும், "செம்புலப் பெயல் நீராய்" என்னும் சரித்திரச் சிறுகதையும், ஸ்ரீ அனந்த நாராயணன் சிறுகதைப்போட்டியிலும் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றவை. இத்துடன் "வீரம் வெளைஞ்ச மண்ணு", "மந்திரோபதேசம்", "வெற்றிச் செல்வி" சிறுகதைகளும் கூட உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துமென நம்புகிறேன்.
காந்திய எளிமையும், வட்டார வழக்குச் சொல்லகராதியின் தலைமகனாகவும், தமிழ்நிலத்துக் கலாச்சாரத் தொன்ம வாழ்வியலைப் பேசுபொருளாகவும் வைத்து, முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக நின்றவர். இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீடம் விருதைப் பெறுவதற்கு எவ்வகையிலும் தகுதியான கி. ராஜநாராயணனை வாசித்தும், பழகியும் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிச் சேர்த்த நல்முத்துகளே இக்கட்டுரைகள்.