6,352 record(s) found
மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி. மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை. சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது. அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார். சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!.
வினோத் என்பவன் அண்ணியின் அரவணைப்பில் வாழ்பவன். சுனிதா தான் நினைத்தது நிறைவேற வேண்டும் என எண்ணுபவள், தன்னை மிஞ்சி எதுவும் இல்லை என்ற கருத்துடையவள். வினோத் சுனிதாவிற்கு திருமணம் நிச்சியக்கப்படுகிறது. இதில் கௌதம் என்பவன் உள்ளே வருகிறான். அந்த கௌதம் யார்? இதில் முள்ளாக இருந்தது யார்? மலராக இருந்தது யார்? வினோத், சுனிதா இருவரும் இணைந்தார்களா! வாங்க பார்ப்போம்.
இந்த முதல் தொகுப்பில் இருக்கும் 15 கதைகளில் பெரும்பாலும் போட்டிகளில் வெற்றி பெற்றக் சிறுகதைகளே. இந்த நூலில் உள்ள அணிந்துரையிலும், வாழ்த்துரையிலும் சொல்லப்பட்டதைப் போல ஒவ்வொரு சிறுகதையும் ஒரு வாழ்க்கைச் சித்திரமாய் மிளிர்கிறது. வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் தனித்துவமான நடையுடன் எழுதப்பட்ட ஜூனியர் தேஜ் அவர்களின் சிறுகதைகளை வாசித்து மகிழ்வோமே!.
அழகாகப்பிறந்து விட்டதால், நிறைய அவதிகளுக்கு ஆளாகிறாள் நாயகி. அளவோடு குடும்பத்தை அமைத்துக் கொள்ளாததால் ஆத்திரத்துக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாகும் இவளின் தந்தை. அந்த அதட்டலுக்கும், அவசரத்திற்கும், அன்புக்கும் சுமை தாங்கியாய் ஆகும் இவளின் தாய். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொருகோணங்கள் எல்லா கோணங்களும் ஒரே திசைவழியில் சாத்தியமில்லை. என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!.
குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள். பல்வேறு பத்திரிக்கைகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இன்றைய பிஞ்சுகளுக்கு உபதேசம் செய்வதை விட, கதைகள் மூலம்தான் நல்ல ஒழுக்க நெறிகளைப் புகட்ட முடியும், அன்பு, மரியாதை, கனிவு, கருணை எல்லாமே அவர்களுக்கு கதைகள் மூலம் சொல்ல முடியும். அந்த முயற்சியின் தொகுப்புதான் இந்த தேவதை.
ஒரு பெண் வீட்டுக்கு ஒரு சமையல்காரியாகவும் குழந்தை பெற்றுத் தரும் மெஷின் ஆகவும் மாமியார் மாமியாரை கவனிக்கும் ஒரு வேலைக்காரியாகவும் தான் இருக்க வேண்டும். அவளுக்கு என்று தன்மானமோ, சுயமரியாதையோ கூடாது என்று நினைப்பவர்கள் தான் அதிகம். இதில் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று அறிந்து, அவனை உதறி, விவாகரத்து வாங்கி துணிந்து நிற்கும் மங்கை பலருடைய பேச்சுக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிறாள். உனக்கு என்ன தெரியும் என்ற கணவரின் பேச்சை உதறித் தள்ளி வாழ்க்கையில் உயர்கிறாள். அப்பா மாதிரி உன்னிடம் காசு இல்லை நீ எனக்கு என்ன செய்ய முடியும் என்று விவாகரத்தின் போது அப்பாவிடமே தங்கி விடுகிறாள் பெண் அபர்ணா. மகன் மட்டும் இவளுடன் வருகிறான். தறி கெட்டுப் போன பெண் அபர்ணா வாழ்க்கையில் வழுக்கி விழுந்த சமயத்தில், அவள் காதலனின் தங்கையை எழில் திருமணம் செய்து கொண்டால் அபர்ணாவையும் ஏற்றுக் கொள்வதாக காதலன் வீடு சொல்ல மறுத்து விடுகிறாள் மங்கை. நீ செஞ்சது தப்பு. உன்னுடைய ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இன்னொருவர் வாழ்க்கையை அழிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று கூறி விடுகிறாள். பெண் வாழ்க்கை திருந்தியதா? எழில் ஆசைப்பட்ட பெண்ணை மணம் செய்து கொடுத்தாளா? மங்கைக்கு உதவியாக இருந்த ஜெகா, மேனகாவுடன் சேர்ந்து என்னென்ன சாதனைகள் செய்தாள் என்று எல்லைகளற்ற வானம் கதையில் தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு பெண் நியாயம் இல்லாத, ஒழுக்கக் குறைவான விஷயங்களை செய்யக்கூடாது. தன்மானமும் சுயமரியாதையும் தைரியமும் மிக முக்கியம் என்பதை விளக்குகிறாள் மங்கை.
சின்னுவுக்கு அக்கீயின் பேரில் ஈர்ப்பு இல்லைதான். இது கல்லூரிக் காலத்திலேயே நீடிக்கிறது. ஆனால் சின்னுவும் ரூபிணியும் விரும்புகிறார்கள். எதிர்பாராமல் ரூபிணியின் துர்மரணம் நிகழ்கிறது. சின்னு உடைந்து போய் அக்கீயை விட்டு விலக நினைக்கிறான். இடையில் ரோகிணியின் நிச்சயமற்ற ஊடுருவல்! ஆனால், பூமாவின் நினைவில் அக்கீயையும் துறந்து, சின்னு கடந்து செல்கிறான். இறுதியில் மீண்டும் இருவரும் ஓர் உச்சக்கட்டத்தில் சந்திக்கிறார்கள். ஒருவேளை நிரந்தரமாக இழந்தவர்களையே நினைத்து வாழ்க்கையைத் தொலைத்து விடுவதில் என்ன பயன் என்பதை அக்கீசியா, சின்னசாமிக்கு உணர்த்தியிருக்கலாம்.
காதலித்துப் பல கடினமான சோதனைகளைக் கடந்து கடிமணம் புரிந்துகொண்ட கணவனுடன் இன்பமாக வாழ இயலாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றாள் மாமியார். அவள் மனம் மாறும்வரை தன் இனிய உணர்வுகளின் துணை கொண்டு சாம்பவி இல்லறம் நடத்தி வருகின்றாள். திடீரென்று இரு விருந்தாளிகளின் வருகையால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? அதன் பின்னர் என்ன நிகழ்ந்தது என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
ரம்யா, சுஷ்மா இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பராக இருக்கிறார்கள். ரம்யாவின் குடும்பத்தில் அப்பா பொறுப்பிள்ளாமல் நடந்து கொள்கிறார். அம்மா அவளை வளர்க்கிறாள். அதேபோல் சுஷ்மாவின் வீட்டில் அம்மா தப்பான தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறாள். அப்பா அவளை வளர்க்கிறார். இவர்கள் இருவரும் "சிப்பிக்குள் முத்து" போல இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை படிந்து தெரிந்துகொள்வோம்.
மனோ எழுச்சியின் தீவிரத்தால், எண்ண அலைகளை பீறிட்டு எழச்செய்து, உத்வேகத்துடன் ஓர் உணர்வுப் போராட்டம் நிகழ்த்தி, காலத்தின் கரத்தால் விலக்கப்பட்டிருந்த ஓர் உறவின் இழையைத் தேடிப்பிடித்துப் பற்றிக் கொள்ளும் இளம் பெண்ணின் கதை.
ஜெய்குமார் தன் துணைவியைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்கிறான். தன் மனைவி வாணி, வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள் என்பதை அறியாமல், அவள் விபத்தில் மாண்டு விட்டதாக எண்ணி மறுகுகிறான். உண்மையையும் வாழ்வின் அவலத்தையும் அறிந்த தாத்தா சிவபாதம், அனுராதாவை பேரனுக்கு மறுதாரமாக மணமுடித்து வைக்கிறார். சிவபாதத்திற்கு மட்டும் தெரிந்த உண்மை என்ன? அனு, ஜெய்குமார் இருவருக்கும் உண்மை தெரிந்ததா? இல்லையா? வாருங்கள் வாசித்து தெரிந்து கொள்வோம்...!.
முகூநூலில் என் எழுத்தைப்படித்து விட்டு குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன அவர்கள் அப்பாபற்றி இரண்டுவாராங்கள் வருவதுபோல கட்டுரை கேட்டார் தொடர்ந்து இன்னும் நாலுவாரம் இன்னும் எட்டு வாரங்கள் வேண்டும் என்று கேட்டு கேட்டு பரசுரித்தார். இந்தக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பருந்த தால் இருபதுவாரங்கள் வரை இடம் பெற்றதைத் தொடர்ந்து 'தீராநதியிலும் இரண்டு வருடங்கள் வாய்ப்பளித்தார்.
'அறம் செய விரும்பு' முதல் 'அஃகஞ் சுருக்கேல்' வரை உள்ள பதிமூன்று ஆத்திசூடிகளுக்கும் பதிமூன்று கதைகளை உருவாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். கதைகள் ஒவ்வொன்றும் சிறுவர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய மாணவ சமூகத்தினர் படித்து பயனையும், பண்பையும் பெறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
அன்பு வாசகர்களுக்கு, இந்த தொகுப்பில் நான்கு குறு நாவல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் வாசிப்பிற்கு உகந்ததாகவும் நேரத்திற்கு தகுதியானதாக்கவுமிருக்கும் என்று உத்தரவாதம் உண்டு. படிக்கவும். விமர்சிக்கவும். நன்றி.
குறும்படம் எடுப்பதற்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதுதான் இச்சிறுகதைத் தொகுப்பு. இந்திரநீலன் சுரேஷ் அவர்களுடைய பேனா பல இடங்களில் சித்து விளையாடியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்த நூல், படிப்பதற்கு மட்டுமல்ல எப்பொழுதெல்லாம் வாழ்க்கையின் வெறுமையிலிருந்து விடுபட வேண்டுமா அப்பொழுதெல்லாம் இந்த நூலில் உள்ள ஒரு கதையைப் படித்தால் போதுமானது. புதிய உற்சாகம் பிறக்கும்..!.
நேர்மறை எதிர்மறை போல் அனைத்திலும் இரு துருவங்கள் உண்டு. அப்படி... ஆன்மீகம் போல் அமானுஷ்யமும் உண்டு. ஆன்மீகத்தால் இந்தக் கதையின் நாயகி அமானுஷ்யத்தை எப்படி எதிர்கொள்கிறாள். தொடர்ந்து வரும் பல இன்னல்களை எப்படி கடந்து வருகிறாள் என்பதுதான் கதை! இனி கதைக்குள் போய் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
"அழகின் ஆராதனை" என்ற குறுநாவலில் படித்து பட்டங்கள் பெற்று பதவிகளில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் தம்பதியர்கள் ஆனதும் சிலருக்கு எதிர்கால வாழ்க்கை குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு வேறுபாடு இந்த குறுநாவலின் தம்பதியருக்கு ஏற்படுகிறது. அது என்னவென்றால் குழந்தை இப்போது வேண்டாம் என்பது. அது குழந்தை கருப்பையில் வளர்வது உறுதியாகிவிட்ட நிலையில்.... அதையும் தீர்த்து வைத்து படிப்பவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறார் ஆசிரியர் அமரர் லக்ஷ்மி அவர்கள்.
உண்மையான நட்பைப் பற்றி இந்தப் புதினத்தில் பேசியிருக்கிறேன். இரயில்வே பிளாட்பாரத்தில் ஆரம்பிக்கும் இரண்டு ஏழைச் சிறுவர்களின் நட்பு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எப்படித் தொடர்கிறது என்று காட்டியிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்கச் பேசிப் பழகுவது மட்டும் நட்பல்ல. அகம் குளிர நடந்துகொள்வது தான் நட்பு. நட்பின் இலக்கணம் இந்தக் கதையில் வகுக்கப் பட்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் நேசிக்கும் நண்பர்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. அதன் பின்னர் தவறான புரிதலால் ஒருவரை ஒருவர் வெறுக்கத் தொடங்குகிறார்கள். அடுத்த தலைமுறையிலும் இரண்டு குடும்பங்களிலும் நட்பு தொடர்கிறது. பிரிந்த நண்பர்கள் கூடுவார்களா? அவர்களுடைய குழந்தைகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையுமா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கணவன் சந்திரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சீதா. அவன் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தும் அவளை அவன் வீட்டை விட்டு போ என்கிறான். அவன் தன் மறைந்த முதல் மனைவி மோகனா வை இன்னும் மறக்கவில்லை ...... அவளோடு தான் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க செல்கிறாள் சீதா. ஆனால் அவனுக்கு ஒரு கடந்த கால இருட்டு இருக்கு. அதை மறைக்க பாடுபடுகிறான். சீதா அவன் காதலுக்காக ஏங்க .....அவளுக்கு அவன் அன்பு கிடைத்ததா.....சீதாவை தொடருங்கள்.
ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...