6,401 record(s) found
நாயகனும் நாயகியும் முதல் பார்வையிலேயே நேசம் கொண்டாலும், புரிதல் வந்த பிறகு தங்கள் நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இருவர் வீட்டிலும் எவ்வித எதிர்ப்புமின்றி திருமணமும் நடக்கிறது. தேனிலவின் போது, இருவருக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. இருவரும் அதை எப்படி எதிர்கொண்டனர் என்பது தான் கதை.
காதல்.. திரைப்படங்களில் பார்த்தாலும், கதைகளில் படித்தாலும், சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் கண்களால் கண்டாலும் அனுபவத்தில் உணர்ந்தாலும், இந்த வார்த்தைதான் மகிழ்ச்சியை மாந்தர் உள்ளங்களில் ஏற்படுத்துகிறது.. படுத்தி வைக்கிறது.. இதமான மன வலியுடன் மன வலிமையையும் தருகிறது. இதன் வெற்றி.. கிரியா ஊக்கியாகச் செயல்பட்டுப் பல சாதனையாளர்களை வாழ்க்கையில் மேலே மேலே பல துறைகளில் உருவாக்குகிறது. அவ்வளவு ஏன்.. பல சாம்ராஜ்யங்கள் உருவாகக் காரணமாகிறது. முகநூலில் கிடைத்த என் தோழிகள் மூலம் எனக்குக் கிடைத்த சில ஓவியங்கள், புகைப்படங்கள் அனைத்தும் என் உள்ளத்தில் தட்டி எழுப்பப்பட்டக் காதல் உணர்வுகளை வார்த்தைகள் மூலமாக இந்தப் புத்தகத்தில் மலரச் செய்திருக்கிறேன். ஒரு தோழி அளித்த ஒரு ஓவியத்துடன் கூடிய திருக்குறளுக்கும் ஒன்று எழுதியிருக்கிறேன்.
சமுதாயத்தின் திறந்த வெளிச் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக அல்லல்படும் எண்ணற்ற மனிதர்கள்! அவர்களில் ஒருவனே நடேசன்! நான்கு சுவர்களுக்குள் அனுதினமும் இவன் அனுபவிக்கும் தண்டனை, விடுதலையே இல்லாத தண்டனை! 'உயிருள்ளவரை அனுபவி' என தனக்கு இதை வழங்கிய மூலகர்த்தாக்களை இவனும் விடாமல் இன்னமும் தேடிக் கொண்டிருப்பதை வாசித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்...!.
உங்கள் கைகளில் தவழும் இந்த கவிதை நூல் எனது நான்காவது வெளியீடு. இதில் ஏராளமான சமூக, காதல், கிராமியக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நான் சமூக வலைத்தளங்களில் கன்னாபின்னாவென்று கிறுக்கியவற்றைத் தொகுத்து உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன். வாசியுங்கள்... விமர்சியுங்கள்...
"இந்த ஜூனியர் தேஜ் பேஜ் - 2, சிறுகதைத் தொகுப்பு நூலில் 15 சிறுகதைகள் பந்தி விரிக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் வேறு வேறு கோணங்களில், வேறு வேறு மனிதர்களின் மாறுபட்டக் கதைக்களமாகக் காணப்படுகிறது. எல்லாக் கதைகளிலும் மனம் சிலாகிக்கும் சம்பவங்கள் பதிந்து கிடக்கின்றன. நல்ல உயிரோட்டமான எழுத்து நடை, வாசிக்கத் துவங்கினால் அதன் ரசனையில் சட்டென்று கதை முடிந்து விட்டதே என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அற்புதமான கதைகள்." என்று தன் வாழ்த்துரையில் சொல்கிறார் கலை நன்மணி ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள். வாசிப்பை நேசிக்கும் வாசகப் பெருமக்களே. வாசித்து மகிழுங்களேன்.
'திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்'. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, மனநலம் காக்கும் ஷேத்திரமான, குணசீலத்தைக் குறியீடாக வைத்து எழுதப்பட்டு வரும் கதைகள் இவை. இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திரு ஹரணி அவர்கள், இத்தொகுப்பின் பதினோறு கதைகளும், மையப்புள்ளி ஒன்றெனினும் எடுத்துரைக்கும் பாங்கில் சிறுகதையை இன்னொரு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ஒவ்வொரு கதையும் மனித வாழ்வியலில் மனிதனின் நடத்தையொழுங்கினை, பண்பினை கட்டிக்காப்பதாக அமைகிறது. எல்லாமும் எழுத்தாளரின் கற்றுத் தேர்ந்த உளவியல் பின்னணியில் இயங்குகின்றன. முதன் முறையாக எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களின் கதைகளை வாசிக்கிற அனுபவம் சுகமாக உள்ளது. உளவியல் சிக்கல்களை மையப்படுத்திக் கதைப் பொருண்மைகளை உருவாக்கி ஜூனியர் தேஜ் எழுதியுள்ள இக்கதைகள் காலத்தின் மனித மனச் சிக்கல்களுக்கு மருந்துபோன்றே நலம் பயப்பவை. இத்தொகுப்பை நீங்களும் ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். உங்கள் மனத்தையும் இது சிறிதளவேனும் அசைக்கும் திறன் கொண்ட கதைகள் அடங்கிய தொகுப்பு.' - என்கிறார் நாமும் வாசித்து, அந்தச் சுகானுபவத்தைப் பெறுவோமே!.
மாதவி தான் மனப்பூர்வமாகக் காதலித்த சந்திரனை மணந்து கொள்ள முடியாது போனதால் பூபதியை மணந்து அவனது அன்பான அரவணைப்பால் இனிதே இல்லறம் நடத்துகிறாள். சந்திரனை மாதவியிடமிருந்து தன் பணபலத்தைக் காட்டிப் பறித்துக் கொள்கிறாள் பரிமளா. பணத்துக்காகத் தன் காதலைப் பலியிட்ட சந்திரன் அதோடு நில்லாது மாதவியின் வாழ்க்கையில் குறிக்கிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? அதன்பின் அவள் என்னென்ன மாற்றங்களை சந்திக்கிறாள்? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!.
கௌதம், தாழம்பூ இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தாழம்பூ ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் மாமியார் சாம்ராஜ்யம் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. புகுந்த வீட்டில் தாழம்பூவின் நிலைமை என்ன? மாமியாரின் சூழ்ச்சியில் இருவரும் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுமா? இதனை தாழம்பூ எப்படி கையாள்கிறாள் என்பதை வாசித்து அறிவோம்...
ரகுராமனை திருமணம் செய்து கொண்டு சௌக்கியமாக இருக்கவேண்டிய சீதா, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் எப்படி நொறுங்கிப் போகிறாள்... அதிலிருந்து மீண்டு அவளுக்குப் பொருத்தமான ரகுராமனுடன் இணைந்தாளா? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
ஏழை பிராமணர் குடும்பத்தில் பிறந்தவள் ராஜேஸ்வரி. இவளுடன் உடன் பிறந்தவர்கள் மூவர் என நான்கு பெண்கள். பிடிவாதமும் ராட்சச குணமும் கொண்ட தந்தையினால் அவளது வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? திருமணமே வேண்டாம் என இருந்த ராஜேஸ்வரியின் வாழ்க்கையை மாற்ற சத்தியமூர்த்தி என்ன செய்தான்? அவளது வாழ்வு மல்லிகைப் பூவாய் மணம் வீசியதா? இல்லை கனகாம்பர பூவாய் மாறியதா? இந்த தலைப்பு எப்படி ராஜேஸ்வரிக்கு பொருந்தியது? வாருங்கள் வாசிக்கலாம்...!.
திரு பல்லவி குமார் அவர்கள், இந்தத் தொகுதிக்கான, அணிந்துரையில், 'வாசகர் மனம் கவரும் முத்துக் கதைகள்'- என்று புகழ்கிறார். திரு வைகை சுரேஷ் அவர்கள் , தன் வாழ்த்துரையில் 'வாழ்வின் பல்வேறு கோணங்களில், உணர்வுபூர்வமானச் சிந்தனைகளை, சிறுகதைகளாக வடித்துள்ளார் என்று சிலாகிக்கிறார். திரு ச.ஆனந்த குமார் அவர்கள் 'மக்கள் புழங்குகிற வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக், கதை சொல்கிற திறன் வியப்பில் ஆழ்த்துகிறது' - என்று வியக்கிறார் தன் வாழ்த்துரையில். வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் உணர்வு பூர்வமான இந்தத் தொகுப்பில் உள்ள 15 முத்துக் கதைகளையும் வாசித்து மகிழ்வோமே!.
காலநிலை மாற்றம் என்ற பேரிடர் இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. மனிதரின் இயற்கைக்கு முரணான செயல்களால் அது தீவிரப்படுத்தப்பட்டு, ஒரு புறம் அதிதீவிர கனமழை, கடும் வெள்ளம் என்றும், மறுபுறம் வறட்சி, காட்டுத்தீ மற்றும் தண்ணீர்ப்பஞ்சம் என்றும் நாம் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றோம். இத்தகைய இடர்களை சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் முதலான உயிரியப்பன்மயத்தைப் பாதுகாப்பதன் வாயிலாகவும், இயற்கை நமக்களித்த வரமாகிய மரங்களை வளர்ப்பதன் மூலமும் எவ்வாறு நாம் எதிர்கொள்ள முடியும் என்பது பற்றியும் மற்றும் அது தொடர்பான இன்ன பிற சுவாரஸ்யமான தகவல்களையும் இந்நூல் தன் வசம் கொண்டுள்ளது. அனைவரும் இத்தகு அரிய செய்திகளை அறிந்துகொள்வதோடு, அவற்றை நடைமுறைப்படுத்தி, நாம் வாழும் இந்தப் புவியினை எதிர்வரும் இளம் தலைமுறையினருக்கு நல்ல நிலையில் ஒப்படைக்க வேண்டும் என்று நூலாசிரியர் அனைவரையும் வேண்டுகின்றார்.
நேசமான மனைவி, சொந்த தொழில், அன்பான தாய், நலமாய் வாழும் தங்கை, தோள் கொடுக்கும் தோழமை. அதோடு தன் காதல் வாழ்வின் சாட்சியாய் தங்களுக்கு வரப்போகும் குழந்தை என சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த வெற்றியை அடித்து கீழே தள்ளியது, பிரசவத்தில் மரணித்த தன் மனைவி தியாவின் முடிவு. அதற்கு மேல் மற்றொரு அதிர்ச்சி தியாவின் கடைசி ஆசையாய் அவள் தன் தமக்கையை மறுமணம் செய்யக் கூறியது. யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அவளையே எப்படி மணந்து கொள்வான்? அதன் பின் அவன் வாழ்வில் சந்தோஷம் இருக்குமா?.
"சிறுகதைகளில் பலப் பரிமாணங்களில் சிற்பியாக வலம் வருகிறார் ஜூனியர் தேஜ். சிக்கலானக் கதாபாத்திரங்களைக் கூட, கண்ணைக் கூச வைக்கும் அளவுக்கு பளிச் எனத் பிரகாசித்து அடங்கும், கேமரா ஃப்ளாஷ் போன்ற, ஒளி வெள்ளத்துடனும், வளத்துடனும் தெளிவாய் வாசகனுக்குத் தருகிறார். ரஜினி சொல்வது போல "யார் பக்கமும் சாயாத பாபா" வாய் நடுநிலை எழுத்து இவரது." என்கிறார், 15 சிறுகதைகளைத் தாங்கிய இந்த மூன்றாம் தொகுப்பிற்கு வாழ்த்துரை வழக்கிய கோவைக் கல்லூரி நூலகர் முனைவர் கரு. செந்தில்குமார் அவர்கள். வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் நடுநிலை எழுத்தாளர், ஜூனியர் தேஜ் அவர்களின் சிறுகதைகளை வாசித்து மகிழ்வோமே!.
பரமன் - பத்மினி என்ற தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். நான்காவது குழந்தை பிறக்கபோகும் நேரத்தில் சில பிரச்சைகளை சந்திக்க நேர்ந்ததால் குழந்தை வேண்டாம் என்று எண்ணினார்கள். பிறகு, குழந்தை பிறந்ததில் இருந்து வீட்டில், பல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், அவளை தத்துக்குடுக்க முடிவு செய்து விட்டார்கள். காலங்கள் ஓடின. அவள் தன பெற்றோருடன் இணைவாளா? இவர்கள் அவளை ஏற்றுக்கொள்வார்களா? தொடர்ந்து வாசியுங்கள்...
கணவன் சந்திரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சீதா. அவன் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தும் அவளை அவன் வீட்டை விட்டு போ என்கிறான். அவன் தன் மறைந்த முதல் மனைவி மோகனா வை இன்னும் மறக்கவில்லை ...... அவளோடு தான் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க செல்கிறாள் சீதா. ஆனால் அவனுக்கு ஒரு கடந்த கால இருட்டு இருக்கு. அதை மறைக்க பாடுபடுகிறான். சீதா அவன் காதலுக்காக ஏங்க .....அவளுக்கு அவன் அன்பு கிடைத்ததா.....சீதாவை தொடருங்கள்.
ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...
"அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை செய்ய மாட்டேன் என்று இவ்வளவு உறுதியா சொல்ற நீ... எதுக்காக என்னைக் காதலிச்சாய்? எதுக்கா இப்போ என் வாழ்க்கையோடு விளையாடுகிறாய்?" சத்யநந்தன் கேட்டதும், மதுவின் கண்கள் வலியைக் காட்டின. "தப்புதான்... அம்மாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நான் காதலிச்சது தப்புதான்! அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அனுபவிக்கிறேன்!" கண்களில் நீருடன் மது சொன்னதும், சத்யா வேதனையோடு கண்களை மூடினான்! தன்னைக் காதலித்தது தவறு என்று காதலி சொல்லும்போது, எந்த காதலனுக்குத்தான் வேதனை இராது? ஆனால்... தானே அவளது இந்த வார்த்தைகளுக்கு காரணம் என்ற குற்ற உணர்வோடு அவளை நோக்கியவன், "சாரி... மது... வெரி வெரி சாரி!" என்றான் ஆத்மார்த்தமாக! "இல்லை சத்யா... நீங்க சொன்னது தப்பில்லை! என் மேல்தான் எல்லா தப்பும்! அதுதான் உண்மை! ஆனால்... நீங்க என்ன சொன்னாலும் என் முடிவை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது! அதுவும் உண்மை!" என்றவள் கண்கள், 'இத்தோடு விட்டு விடேன்' என்று அவனிடம் கெஞ்சின. அவள் விழிகள் வேண்டியதைச் செய்து விட வேண்டும் போலத் தோன்றினாலும், இப்போது விட்டு விட்டால், அவளை இழப்பது நிச்சயம் என்று தெரிந்தும், அவனால் விட்டு விட முடியுமா என்ன? இப்போது அவன் சொல்லப் போகும் வார்த்தைகள் அவளைக் காயப் படுத்தும் என்று சத்யாவுக்குத் தெரிந்தது. ஆனால்... இப்போது இதைச் சொல்லா விட்டால், வாழ் நாள் முழுதும் இருவரும் வருந்த வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தவனாக, அவளிடம் திரும்பினான். "இங்கே பாரு மது! ஒன்று நீ அத்தையின் ஆசையை நிறைவேற்றனும்! இல்லை... உனக்கு சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைச்சுக்கணும்! இது ரெண்டையும் செய்யாமல் இருந்தால், அத்தைக்கு..." என்றவன் குரல் கமறியது. தொண்டையை செருமி சரி செய்து கொண்டவன், "அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால், அவங்க ஆன்மா கூட உன்னை மன்னிக்காது!" தனது வேண்டுதலுக்கு இணங்கி இத்தோடு இந்தப் பேச்சை விட்டு விடுவான் என்று எண்ணி இருந்த மது, சத்யாவின் வார்த்தைகளில் திகைத்து அவனை நோக்கினாள்! 'என்ன சொல்கிறான் இவன்?' அவளுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை! மதுவின் முகத்தில் தெரிந்த குழப்பம், அவளுக்கு தான் சொன்னது விளங்கவில்லை என்பதை உணர்த்த, சத்யா மீண்டும் பேசினான். "ஆமாம்... அத்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்... நீ சொன்ன மாதிரி அவங்க உங்க திருமணம் பற்றி பேசியதுதான் அவங்க கடைசி வார்த்தை...கடைசி ஆசையா இருக்கும்! அதை நிறைவேற்றுவது உன் கடமையும் கூட! அதனால், ஒன்று நீ மகேந்திரனை கல்யாணம் செய்து கொண்டு அவங்க ஆசையை நிறைவேற்றனும்! இல்லை என்றால், நீ மனசார விரும்பிய என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்... தன் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கூட, தன் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிறைவாவது அவங்களுக்கு மிஞ்சும்! அதுதான் நீ அவங்களுக்கு கொடுக்க போற உண்மையான சந்தோஷமா இருக்கும்! நீ எடுக்கப் போற முடிவில்தான் நம்ம நாலு பேருடைய சந்தோஷம்... இன்னும் சொல்ல போனால்... இன்னும் ரெண்டு குடும்பங்களுடைய சந்தோஷசம் அடங்கி இருக்கு என்பதை மனதில் வைத்து பதில் சொல்லு! இப்பவே சொல்லணும் என்று இல்லை! நல்லா யோசிச்சு சொல்லு! நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்!" 'அவளது சத்யாவா ? அவனா என்னை மகேந்திரனைத் திருமணம் செய்து கொள் என்று சொன்னான்? அவனால், எப்படி அவளிடம் இப்படி சொல்ல முடிந்தது?'
வினோத் என்பவன் அண்ணியின் அரவணைப்பில் வாழ்பவன். சுனிதா தான் நினைத்தது நிறைவேற வேண்டும் என எண்ணுபவள், தன்னை மிஞ்சி எதுவும் இல்லை என்ற கருத்துடையவள். வினோத் சுனிதாவிற்கு திருமணம் நிச்சியக்கப்படுகிறது. இதில் கௌதம் என்பவன் உள்ளே வருகிறான். அந்த கௌதம் யார்? இதில் முள்ளாக இருந்தது யார்? மலராக இருந்தது யார்? வினோத், சுனிதா இருவரும் இணைந்தார்களா! வாங்க பார்ப்போம்.
கழுத்தில் மாலைவிழாமல் கையில் குழந்தையுடன் வாழும் பெண்ணுக்குத் திருமணம். ஏனிப்படி? என்ன நடந்தது? அந்த குழந்தையின் தந்தை யார்? அவளுடைய திருமணத்திற்கு பின்னான புதிய உறவுகள் அவளை ஏற்றுக் கொண்டதா? சிக்கலை உண்டாக்கியதா? அவள் நிலைமை என்ன? இதை காதலாய் திகட்டதிகட்டச் சொல்கிறது இந்தப் புதினம். தாம்பத்யத்தின் ரகசியத்தைக் கூறுகிறது இந்த நாவல். இந்த? "நிலவொன்று கண்டேன்"