17 record(s) found
உணவே மருந்து என்பதன் அடிப்படையில் உடலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய உணவு வகைகள் குறித்துதான் இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன். விருந்து சமையல், பத்திய சமையல், விரத சமையல்கள், பண்டிகை சமையல்களுடன் கேரளத்தின் தொன்மையான கோவில் பிரசாதங்களின் செய்முறைகளும் அக்கோவில்களின் ஸ்தல வரலாறுகளுடன் சுவைபட எழுதியுள்ளேன். இது வெறும் சமையல் புத்தகம் மட்டுமல்ல, பல சுவாரசியமான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கூட ஒரு கதை போல் சொல்லி சமைக்கக் கற்றுத்தரும் புத்தகமும் கூட.
நான் பொதுவாகவே திரைப்பட நட்சத்திரங்களுக்கு சமைக்கத் தெரியாது என்கிற கருத்து நிலவுகிறது. அது பொய்யானது என்பதை நேரடியாக உணரும் வாய்ப்பு, இயக்கி, சன் டி.வி.யில் 7 வருடங்கள் ஒளிபரப்பான 'ஸ்டார் சமையல்' நிகழ்ச்சி மூலம் எனக்குக் கிடைத்தது. அசைவ சமையலைப் பொறுத்தவரையில் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக மட்டுமே நாம் சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதே இறைச்சி வகைகளை புதுப்புது விதமாக செய்து சாப்பிடும்போது குடும்பத்தினருக்கு போரடிக்காமல் இருக்கும். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த ஒரு அசைவ சமையலை எடுத்துக் கொண்டு அதை செய்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள். கூடவே அவர்கள் தங்களது சாப்பாட்டு அனுபவங்களையும் சுவையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நூல் படிக்கவே சுவையாக இருக்கும். இதிலுள்ள சமையல் வகைகளை சமைத்துப் பார்த்தால் அதைவிட இன்னும் அதிக சுவையாக இருக்கும்.
பொதுவாகவே திரைப்பட நட்சத்திரங்களுக்கு சமைக்கத் தெரியாது என்கிற கருத்து நிலவுகிறது. அது பொய்யானது என்பதை நேரடியாக உணரும் வாய்ப்பு, நான் இயக்கிய ஸ்டார் சமையல் நிகழ்ச்சி மூலம் எனக்குக் கிடைத்தது. அதே போல் சைவ சமையலில் விதவிதமான நிறைய வகைகள் கிடையாது என்கிற கருத்தும் நம் மத்தியில் பலருக்கு உண்டு. அதையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த நிகழ்ச்சி. இத்தகைய புகழ் பெற்ற 'ஸ்டார் சமையல் நிகழ்ச்சி' இப்போது வண்ணமயமான நூல் வடிவில் உங்கள் கையில். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த ஒரு சைவ சமையலை எடுத்துக் கொண்டு அதை செய்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள். படிக்கவே சுவையாக இருக்கும். இதிலுள்ள சமையல் வகைகளை சமைத்துப் பார்த்தால் அதைவிட இன்னும் அதிக சுவையாக இருக்கும்.
நமது இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் ருசியானது, ஆரோக்கியமானது. அதைக்காட்டிலும், அதனை தயாரிக்கும் நமது தாயோ, தாரமோ, சகோதரியோ நமக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எது உடலுக்கு ஏற்றுக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளாது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து ஆசையாக செய்வார்கள். என்றாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நம்மில் பலர் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களே அதிக சுவையானவை என்று நம்புவோம். அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிடும் வழக்கமும் நம்மில் அனைவருக்குமே உண்டு. சமையல் கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவள் என்ற முறையில், வீட்டுச் சமையலுக்கும், ஹோட்டல் சமையலுக்கும் அதிலும் குறிப்பாக 5 ஸ்டார் ஹோட்டல் சமையலுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். மேலும், 5 ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகளையும் சாப்பிட மட்டுமல்ல, சமைத்துப் பார்க்கவும் நம் பெண்கள் அனைவருமே ஆசைப்படுவதுண்டு. 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவது என்பது பலர் வாழ்க்கையில் கனவாகவே இருந்து விடுவது என்றாலும் அவற்றை வீட்டிலேயே சமைக்கவாவது சொல்லித் தரலாமே என்று எனக்குத் தோன்றியது. அதன் விளைவுதான், இந்தப் புத்தகம்.
நமது இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் ருசியானது, ஆரோக்கியமானது. அதைக்காட்டிலும். அதனை தயாரிக்கும் நமது தாயோ, தாரமோ, சகோதரியோ நமக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எது உடலுக்கு ஏற்றுக்கொள்ளும். ஏற்றுக்கொள்ளாது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து ஆசையாக செய்வார்கள். என்றாலும், அதையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் நம்மில் பலர் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களே அதிக சுவையானவை என்று நம்புவோம். அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிடும் வழக்கமும் நம்மில் அனைவருக்குமே உண்டு. நிகழ்ச்சியில் தனலட்சுமி செய்து காண்பித்த 40 வகையான சமையல் வகைகளை ஏற்கனவே உங்களுக்காக இந்நூலின் 'பாகம் 1' மூலம் வழங்கினோம். அதற்கு நீங்கள் கொடுத்த உற்சாகத்தையும், வரவேற்பையும் தொடர்ந்து இதோ 'பாகம் 2' உங்கள் கையில். இதிலும் மேலும் பல சுவையான சமையல் குறிப்புகள் உங்களுக்கு இடம் பெற்றுள்ளன. அப்புறமென்ன, இனி மேலும் பல 5 ஸ்டார் உணவுகளை உங்கள் வீட்டிலேயே தயாரித்து மகிழுங்கள்.
இன்றைய புதுயுகப் பெண்களின் வேலைப்பளுவை மிகவும் குறைக்கக்கூடிய ஒரு மந்திரப் பெட்டி மைக்ரோவேவ் ஓவன். மைக்ரோவேவ் சமையல் ஒரு அற்புத சமையல்... நெருப்பு. புகை. எண்ணெய் பிசுக்கு இவை ஏதுமில்லா சமையல். இதனால் அடுப்படியை சுத்தம் செய்வது எளிதாகிறது. நேரம் மிச்சமாகிறது... என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.நம்மில் பலரிடையே மைக்ரோவேவ் சமையல் சாதனம் பற்றி பலவிதமான தவறான கருத்துகள் நிலவுகின்றன. இதனால் மின்சார செலவு அதிகமாகும். தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க முடியாது, உணவை சூடுபடுத்த மட்டுமே மைக்ரோவேவ் பயன்படும் என்றெல்லாம் பலவிதமான கருத்துக்கள். அப்படியல்ல... 'மைக்ரோவேவ் ஓவன்' -ல் தென்னிந்திய சமையலும் சுவையாக செய்யலாம். அதில் பக்குவமாக சமைக்கப்பட்ட உணவுகள் நல்ல சுவையுடனும், சத்துடனும், இருக்கின்றன என்பதை பல சமையல் வல்லுநர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மேலும், இதில் உணவு தயாராகும் நேரமும் மிகவும் குறைவு என்பதை அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். மைசூர் பாகு, சமோஸா, வடை போன்ற சாதாரணமாக அடுப்பில் சூடுபடுத்த முடியாத சில உணவு வகைகளைக்கூட அவற்றின் சுவை குறையாமல் மைக்ரோவேவில் சூடுபடுத்த முடியும். அதேபோல நாம் ஃபிரிட்ஜில் உறைந்த நிலையில் வைத்திருக்கும் உணவுகளைக்கூட எடுத்து உடனடியாக சூடுபடுத்த இயலும். மைக்ரோவேவ் சமையல் உடலுக்கு தீங்கு செய்யும் என்றுகூட வதந்தி உண்டு. அது வதந்தி மட்டுமே உண்மையல்ல.உடல் எடை குறித்து மிகவும் கவனத்துடன் இருப்பவர்களுக்கு மைக்ரோவேவ் ஒரு வரப்பிரசாதம். காரணம், இதில் சமையல் செய்ய நாம் சாதாரண அடுப்பில் சமைக்கும்போது உபயோகிக்கும் எண்ணெய் அல்லது நெய்யின் அளவில் கால்பங்கு பயன்படுத்தினாலே அதே அளவு சுவையுடன் உணவை தயாரித்து விடலாம்.மொத்தத்தில் மைக்ரோவேவ் ஓவனை பக்குவத்துடன் பயன்படுத்தத் தெரிந்தால் அது நம் அடுக்களையில் ஒரு அன்பான தோழியைப் பற்றி அறியலாம்.
சென்னை போன்ற நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராமப்புறங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதையும் தாண்டி, கிராமப்புறங்களுக்கே சொந்தமான உணவுப் பண்டங்களை சாப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு இன்னும் அரிது. நகரங்களில் வாழும் பலரும் கிராமப்புறங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும்கூட தங்களின் சொந்த ஊரோடு தொடர்பு இல்லாமலேயே வாழும் தலைமுறைகள் உருவாகிவிட்டன. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பொங்கல் திருநாள்கூட குக்கர் பொங்கலால் கொண்டாடப்படுகிறது. நகரில் தொடங்கிய Fast Food எனப்படும் துரித உணவு கலாச்சாரம் சிறு நகரங்களையும் தொற்றிக்கொண்ட இந்த தருணத்தில் கிராமப்புற உணவுகளுக்கான ஏக்கம் நம்மில் பலருக்கும் கண்டிப்பாக இருக்கும். இந்த குறையைப் போக்கும் நோக்கத்தில் உருவானதுதான் கிராமத்து விருந்து.நமது தமிழக கிராமங்களுக்கே சொந்தமான மண் வாசனையுடன் கூடிய உணவுப் பண்டங்களை சமைப்பது பற்றி சொல்ல சரியான ஆள் யாரென்று யோசித்தபோது, இன்று திரையுலகில் கணீர் குரல் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நாட்டுப்புற நாயகி பரவை முனியம்மா சரியான தேர்வாகத் தோன்றியது. நான் இயக்கி, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் 'கிராமத்து விருந்து' என்கிற பெயரில் பரவை முனியம்மா சமைத்துக் காட்டிய வித்தியாசமான கிராமத்து உணவுப் பண்டங்களின் சமையல் செய்முறைகளை இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். படித்துப் பாருங்கள். சமைத்துப் பாருங்கள். மண் வாசனையுடன் சுவைத்துப் பாருங்கள்.
சென்னை போன்ற நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராமப்புறங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதையும் தாண்டி, கிராமப்புறங்களுக்கே சொந்தமான உணவுப் பண்டங்களை சாப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு இன்னும் அரிது. நகரங்களில் வாழும் பலரும் கிராமப்புறங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும்கூட தங்களின் சொந்த ஊரோடு தொடர்பு இல்லாமலேயே வாழும் தலைமுறைகள் உருவாகிவிட்டன. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பொங்கல் திருநாள் கூட குக்கர் பொங்கலால் கொண்டாடப்படுகிறது. நகரில் தொடங்கிய Fast Food எனப்படும் துரித உணவு கலாச்சாரம் சிறு நகரங்களையும் தொற்றிக் கொண்ட இந்த தருணத்தில் கிராமப்புற உணவுகளுக்கான ஏக்கம் நம்மில் பலருக்கும் கண்டிப்பாக இருக்கும். இந்த குறையைப் போக்கும் நோக்கத்தில் உருவானதுதான் கிராமத்து விருந்து. நமது தமிழக கிராமங்களுக்கே சொந்தமான மண் வாசனையுடன் கூடிய உணவுப் பண்டங்களை சமைப்பது பற்றி சொல்ல சரியான ஆள் யாரென்று யோசித்தபோது, இன்று திரையுலகில் கணீர் குரல் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நாட்டுப்புற நாயகி பரவை முனியம்மா சரியான தேர்வாகத் தோன்றியது. நான் இயக்கி, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சக்தி மசாலா சன்டே சமையல் நிகழ்ச்சியில் கிராமத்து விருந்து என்கிற பெயரில் பரவை முனியம்மா சமைத்துக் காட்டிய வித்தியாசமான கிராமத்து உணவுப் பண்டங்களின் சமையல் செய்முறைகளை இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். ஏற்கனவே, சென்ற ஆண்டு வெளிவந்த இந்த நூலின் முதல் பாகம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற காரணத்தாலும் அதைப் படித்தவர்கள் அனைவருமே அடுத்த பாகத்திற்காக ஆர்வம் தெரிவித்ததாலும் இதோ இப்போது இந்த இரண்டாம் பாகம் இன்னும் பல கிராமத்து சமையல் குறிப்புகளை உள்ளடக்கி வெளி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தையும் படித்துப் பாருங்கள். சமைத்துப் பாருங்கள். மண்வாசனையுடன் சுவைத்துப் பாருங்கள்.
வீட்டுக் குறிப்புகள் என்பது பாட்டி வைத்தியம் மாதிரி பல தலைமுறைகள் கடந்து வருகிற ஒரு விஷயம். அக்கம் பக்கத்து வீட்டினரிடம், ஆபீஸ் தோழிகளிடம் என வீட்டுக் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது என்பதே சந்தோஷமான அனுபவம்தான். நீண்ட காலமாக நம்மை டென்ஷன்படுத்திக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளுக்குக்கூட வீட்டுக் குறிப்புகள் போகிற போக்கில் தீர்வு சொல்லிவிடும்.இந்நூலில் உள்ள குறிப்புகள் சமையலறை சார்ந்த குறிப்புகளாக மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இல்லத்தையும் பராமரிக்கக் கூடிய வீட்டுக் குறிப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன.</p.
நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருக்கிறதா என்று கவனம் செலுத்தும் அளவுக்கு அது ஆரோக்கியமானதா என்பதில் நாம் அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை. அதற்காக ஆரோக்கியமான உணவு என்றால் அது சுவையில்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமுமில்லை. ஆரோக்கிய உணவு என்று சொல்லும்போது எந்த உணவுப் பொருள்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை எந்தெந்த விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதை எந்தவிதத்தில் சமைக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்துள்ள காய்கறிகளும், தானியங்களும், உணவுப் பொருட்களும்கூட நாம் அவற்றை முறையாக சமைக்காவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவை எதிராக அமைந்துவிடுவதுண்டு. தவிர. நம்மில் பெரும்பாலோருக்கு இன்று உள்ள இன்னொரு பிரச்சனை, உடல் இளைக்க பாடுபடுவது. இதனுடைய அடிப்படையும் அதிக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை நாம் அன்றாடம் அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். எத்தனைதான் உடற்பயிற்சி செய்தாலும்கூட, வாக்கிங் போனாலும் கூட உடலை பராமரிக்க தேவையானது கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவு.
நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருக்கிறதா என்று கவனம் செலுத்தும் அளவுக்கு அது ஆரோக்கியமானதா என்பதில் நாம் அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை. அதற்காக ஆரோக்கியமான உணவு என்றால் அது சுவையில்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமுமில்லை. ஆரோக்கிய உணவு என்று சொல்லும்போது எந்த உணவுப் பொருள்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை எந்தெந்த விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதை எந்த விகிதத்தில் சமைக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்துள்ள காய்கறிகளும், தானியங்களும், உணவுப் பொருட்களும்கூட நாம் அவற்றை முறையாக சமைக்காவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவை எதிராக அமைந்துவிடுவதுண்டு. இந்த ஆரோக்கிய சமையல் பகுதியை வழங்கும் அம்பிகா சேகர் நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு டயட்டீஷியன். அவர், இந்த ஆரோக்கிய சமையலை ஒரு மருந்து போல் அணுகாமல், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளையே எப்படி ஆரோக்கிய சமையலாக மாற்ற முடியும் என்று செய்து காண்பித்திருக்கிறார். அவற்றில் 30 வகையான சமையல் வகைகளை ஏற்கனவே உங்களுக்காக இந்நூலின் 'பாகம் 1' மூலம் வழங்கினோம். அதற்கு நீங்கள் கொடுத்த உற்சாகத்தையும், வரவேற்பையும் தொடர்ந்து இதோ 'பாகம் 2' உங்கள் கையில். இதிலும் மேலும் பல சுவையான ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் உங்களுக்கு இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள ஒவ்வொரு சமையலையும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். சுவையாக சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
'மைக்ரோவேவ்' சமையல் முறை என்பது இப்போது பரவலாகவே நம்நாட்டில் எல்லோரும் விரும்பி வரவேற்கும் சமையல் முறையாக உள்ளது. காரணம், சமைப்பது எளிது, குறைந்த நேரம், குறைந்த அளவு எண்ணெய். பட்டனைத் தட்டிய மாத்திரத்திலேயே சமையல் பதார்த்தங்கள் தயாராகும் அனுபவம். இதனால் இம்முறையை அனைவரும் வரவேற்பதில் ஆச்சரியமில்லை. மைக்ரோவேவ் ஓவனை உபயோகிப்பதற்கு சிறப்பான திறமை தேவையில்லை. எவ்வித பயமோ, சந்தேகமோ தேவையில்லை. மிகவும் பாதுகாப்பானது. மைக்ரோ ஓவன் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள புத்தகத்தின்படி மின் அளவையும், நேரத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓவனுக்கும் இது வித்தியாசப்படும். இந்தப் புத்தகத்தில் 800 வாட்ஸ் மின்சக்தி அளவுள்ள மைக்ரோ ஓவனில் சமைக்குமாறு நேரத்தை திட்டமிட்டு எழுதியிருக்கிறேன்.
இந்த உன் சமையலறையில்... நூலில் நான் எழுதியுள்ள சமையல் குறிப்புகள் அனைத்தும் தினத்தந்தி குடும்ப மலரில் அண்மையில் நான் எழுதி வெளிவந்தவை. சமைத்துப் பார்த்து திருப்தியடைந்து எனக்கு வந்த பாராட்டுக் கடிதங்களே நூல் வடிவில் கொண்டுவரத் தூண்டியது எனலாம்.
ஒவ்வொரு கலையையும் எடுத்துக் கொண்டால் அதில் ஏதாவது ஒன்று தனித்தன்மை பெற்று தன் முத்திரையைப் பதித்துவிடும். ஓவியக் கலையில் தஞ்சாவூர் ஓவியம் தனித்தன்மை பெற்று விளங்குவதைப் போல சமையற்கலையில் செட்டிநாட்டு சமையலுக்கு என்றுமே வரவேற்பு அதிகம். எங்கள் ஊர் செட்டிநாடு, காரைக்குடியை அடுத்த சிவகங்கை என்பதால் எப்போதுமே என் பாட்டி காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் செட்டிநாட்டு சமையல்தான். எனவே இந்த 'செட்டிநாட்டு சமையல் நூல்' தயாரிப்பு எனக்கு மிகவும் எளிதாக ஆகிவிட்டது. என் வீட்டு சமையலை என் சகோதரிகளுக்குச் சொல்வது போல எளிய முறையில் எழுதியிருக்கிறேன். இந்த நூலை வாங்கும் வாசகர்கள் செய்து பார்த்து அதன் நிறை குறைகளை எனக்கு எழுதினால் நூலை தயாரித்ததன் முழுத் திருப்தியினை அடைவேன்.
" குளத்தை தொலைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலோடு வாழ்கிறோம். பீசா, பர்க்கர் செரிக்க தினமும் வாக்கிங் போகிறோம். இதுபோன்ற அவலங்களுக்கு காரணம் நாம் இயற்கையை விட்டு நீண்டதூரம் வந்திருப்பதுதான். ஆனால் சமீபகாலமாக நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, கேப்பை, கேழ்வரகு, சாமை, வரகரிசி, தினை, சோளம் ஆகியவை மீது நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது பாரம்பரிய உணவுகளின் அடிப்படையில் ஒரு சில சமையல்களை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன்.
காலையில் எழுந்ததும் எல்லா வீடுகளிலும் இல்லத்தரசிகளின் மனதில் எழும் ஒரே கேள்வி, "இன்றைக்கு மத்தியானம் என்ன லஞ்ச் தயாரிக்கலாம்?" என்பதே. கூடவே "நேத்துதான் இந்த குழம்பு செய்தோம் இன்றைக்கு வேறு என்ன வித்தியாசமாக செய்வது?" என்றும் யோசிப்பதுண்டு. இதில் "1 ஆம் தேதி ஞாயிறு" என ஆரம்பித்து "30ஆம் தேதி திங்கள்" வரை குழம்பு வகைகள், ரசம் மற்றும் சூப் வகைகள், துணைப்பதார்த்த வகைகள் எழுதியிருக்கிறேன். ஞாயிறு, திங்கள் என்று கிழமை போட்டு எழுதியிருப்பதற்குக் காரணம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்பெஷல் லஞ்ச் அதாவது புலாவ், பிரியாணி என்றிருக்கும். வெள்ளிக் கிழமைகளில் சுவாமி நிவேதனத்திற்காக பாயசம் வகைகள் இருக்கும். இந்த இரண்டு கிழமைகளில் உள்ள மெனுவை வீட்டு விசேஷ தினங்களுக்கும், வீட்டு விருந்துகளின் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் சமையல் ரகசியங்கள் - 100 உம் இணைத்திருக்கிறேன். என் அம்மா லீலாகிருஷ்ணன் (எழுத்தாளர்), என் பாட்டி சிவபாக்கியத்தம்மாள் இருவருமே சமையலில் கை தேர்ந்தவர்கள். அவர்கள் கைமணம் அதிர்ஷ்டவசமாக எனக்கும் உண்டு. எங்கள் சமையல் பக்குவங்களை மையமாக வைத்தே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
புதிது புதிதாக ஏதேனும் சமைக்க வேண்டும் என்ற பெண்களின் எண்ணிக்கை அதிகறித்து வருகின்றது. தூர தேசங்களில் வசிக்கும் பல பெண்மணிகளுக்கு உபயோகமாக இருப்பதற்கெனவும், தொன்று தொட்டு இருந்து வரும் நமது புரதான சமையல் வகைகள் காலப்போக்கில் அழிந்து போகாமல் காப்பாற்றபட வேண்டும் என்பதற்காகவும், எல்லோரும் செய்யக்கூடிய வகையில், மிகச் சுலபமான அளவுகளோடு இப்புத்தகத்தின் பல நுனுக்கமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான சமையல் கலை நன்றாக செய்வதே ஒரு சிறந்த கலை. எனக்கு தெரிந்த கற்றுக்கொண்ட பல விஷயங்களோடு பல வருடங்கள் உழைத்து அதிலுள்ள சூட்சமத்தை அறிந்து. இப்புத்தகத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளேன்.