4 record(s) found
ஷேர் மார்க்கெட் என்னும் பங்குச்சந்தைகளில் ஈடுபடுகிறவர்களில் முழுவதும் வென்றவர்களும் கிடையாது, தோற்றவர்களும் கிடையாது. ஆனால், அந்தப் படிப்பினைகளைக் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபம் வரும்போது மகிழ்வதும், இழப்பு நேரும்போது துவண்டுவிடுவதும் கூடாது. பங்குச்சந்தையில் நுழைய நிபுணத்துவம் தேவைதான். அறிவார்ந்து அலசும் தன்மை கொஞ்சம் இருந்தால் போதும். அதை நான் விளக்கமாகவே தந்திருக்கிறேன். அந்தச் சந்தையில் எப்போது நுழையவேண்டும், எப்போது வெளியேறிவிடவேண்டும் என்கிற தந்திரம் தெரிதல் அவசியம். பேராசை கட்டாயம் இருக்கக்கூடாது. கார் ஓட்டுனருக்கு அதன் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற அறிவு அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாலை விதிகள் அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். நடுவழியில் பஞ்சர் ஆகிப்போனால் ஸ்டெப்னியை மாட்டத் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் தடையின்றிப் பயணத்தை மேற்கொள்ள முடியும். அதுபோல சந்தை விதிகளைப் புரிந்துகொள்ளுதல் நலம் பயக்கும். டெக்னிகலாக அலசும் ஒருசில சந்தை வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு, பங்குகள் வாங்குதல், விற்றல் போன்றவற்றை சார்ட்டுகள் (Chart Reading) மூலமாக ஆராய்ந்து, பாதுகாப்புடன் ஈடுபட வைப்பதுதான் இந்நூலின் நோக்கம். "நான் பெற்ற பயிற்சி பெறுக இவ்வையகம்" என்ற குறிக்கோளில் ஆங்காங்கே என் அனுபவக் குறிப்புகளைத் தந்திருக்கிறேன். நீங்கள் பங்கு வர்த்தகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள்!.
அள்ள அள்ளப் பணம் எழுதி வெளிவந்து, அதைப் பற்றிய கருத்துகள் வர ஆரம்பித்ததுமே, பங்குச்சந்தை பற்றி இன்னமும் கூடுதல் விவரங்கள் தரும் இன்னொரு புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆவல் வந்தது. அள்ள அள்ளப் பணம், அடிப்படைகளை விளக்கும் புத்தகம். அதனால் பங்குச் சந்தை பற்றிய எல்லா விவரங்களையும் அந்தப் புத்தகத்தில் எழுதவில்லை. ஓவர் டோஸ் ஆகிவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுதான் அதற்குக் காரணம். ஆனால் இப்போது அதற்கான நேரம் வந்து விட்டது போலத் தெரிகிறது. பங்குச் சந்தைக்கு வரலாம், அங்கேயும் நிறையப் பணம் பண்ணலாம் என்ற கருத்து, பலராலும் இப்போது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. தற்செயலாக, கடந்த மூன்று ஆண்டுகளாகப் பங்குச் சந்தையும் தொடர்ந்து முன்னேற்றமே கண்டுவந்திருக்கிறது. பலர் புதிதாகப் பங்குச்சந்தைக்குள் வந்திருக்கிறார்கள். புதிதாகப் பங்குச்சந்தைக்குள் நுழைந்த பலரும், இந்நேரம் கைபழகி இருப்பார்கள். இனி தாராளமாக அடுத்தக் கட்டத்துக்குப் போகலாம். ஆமாம். பங்குச்சந்தை போன்ற படு டெக்னிக்கலான விஷயத்தைக் கட்டம் கட்டமாகத்தான் கடக்க வேண்டும். இந்தப் புத்தகம், அள்ள அள்ளப் பணம் புத்தகத்தில் சொல்லப்பட்டதற்கு அடுத்தக் கட்டம். இதையும் தாண்டி இன்னமும் சில படிகள் உள்ளன. அவை பின்பு. என்ன என்பதைத் தெரிந்து கொண்டு விட்டவர்களின் ஆர்வம், அடுத்து ஏன், எதனால் என்கிற பக்கம் திரும்புவது இயற்கை. பங்குச்சந்தை விதிவிலக்கல்ல. அதுவும், சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தினை முதலீடு செய்யும் இடம் எப்படிப்பட்டது என்பதையும் அங்கே நிகழ்பவை ஏன், எப்படி நிகழ்கின்றன என்பவற்றைப் பற்றியும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான புத்தகம் தான் இது. பங்குச்சந்தை வல்லுனர்கள் எவற்றைப் பார்த்து சரியாகச் செய்கிறார்களோ, அவற்றைப் பற்றி நம் வாசகர்களுக்கு எளிமையாக விளக்கிவிட வேண்டும் என்பதுதான் எடுத்துக்கொண்ட குறிக்கோள். பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யப்போகிறோம். அதனால் Economics, Fundmental Analysis மற்றும் Technical Analysis ஆகிய மூன்று பற்றியுமே கொஞ்சமேனும் தெரிந்து கொள்வது முக்கியம். அதைச் செய்வதுதான், இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதைச் செய்திருப்பதாக நினைக்கிறேன். மானிடரி பாலிசி பற்றி கூடுதல் விவரங்கள் கொடுத்த திரு. எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி! - சோம. வள்ளியப்பன்.
சிப்பாயாக இருக்காதீர்கள், ராஜாவாக இருங்கள்: பெரும்பாலான மக்களின் எண்ணம், ஒரு வேலை, மாதச் சம்பளம் இருந்தால் போதும் என்று திருப்தி கொள்வார்கள். ஆனால் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, அவர்களின் முதலாளிகள் எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றார்கள் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க இது சரியான நேரம். ஒருவர் முதலாளி என்ற நிலைக்குச் செல்லாமல் தடுக்க பல விதமான தடைகளும், காரணிகளும் உள்ளன. அவர்கள் வியாபாரம் சம்பந்தப்பட்ட பல சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும், பல காரணங்களினால் அதை அவர்கள் மனதிலே புதைத்து விடுகிறார்கள். "வர்த்தகர்" அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதோடு, அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து, தன்நம்பிக்கையை அதிகரித்து, அவர்களைச் சிப்பாய் நிலையில் இருந்து ராஜாவாக மாற்றும். இந்த உலகம் வணிகரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் ஆம் என்று ஒப்புக்கொண்டால், நீங்கள் சரியான பாதையில் இருக்கின்றீர்கள். எல்லோரும் பணக்காரனாக வேண்டும் என்று கனவோடுதான் இருக்கின்றோம். ஆனால் சிலர் மட்டுமே அதை உண்மையாக்குகின்றார்கள். பணக்காரனாக வேண்டும் என்றால்,முதலில் உங்கள் பண்புகளைச் செழிப்பாக மாற்ற வேண்டும்.உங்களின் எண்ணம், மனம், செயல், நடத்தை மற்றும் அணுகுமுறை முதிர்ந்ததாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.நானும் என் புத்தகத்தில் உள்ள அனைத்து அம்சங்கள் மற்றும் அணுகுமுறைகளும் உங்களை ராஜாவாக மாற்ற உதவும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.